வியாழன், 7 செப்டம்பர், 2023

19. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

19. ஸ்ரீவித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு



பத்தொன்பதாவது ஆசார்யர் [கி.பி. 386 - 398]

ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு. இவரும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். தந்தையார் பெயர் ''உமேச சங்கரர்''. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ''ஸ்ரீ கண்டர்''.

சிறு வயதில் இவர் தேகத்தை வெண் மேக நோய் பற்றிக் கொண்டது. அதனால் இவரைத் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யச் சொன்னார் ஒரு பெரியவர்.

இவரும் தினமும் 1008 சூரிய நமஸ்காரம் செய்தார். நோய் பறந்து போனது. ஆனாலும் இவர் சூரிய நமஸ்காரம் செய்வதை நிறுத்த வில்லை. இவர் தொடர்ந்து விடாமல் சூர்ய நமஸ்காரம் செய்து வந்ததால் இவரை பக்தர்கள் ''சூரியதாசர்'' எனவும், ''மார்த்தாண்ட வித்யாகனர்'' என்றும் அழைக்கப்பட்டார். இவர் தனது பதினெட்டாவது வயதில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியாக  பொறுப் பேற்று பல திக் விஜய யாத்திரைகள் மேற் கொண்டார்.

இவர் கி.பி. 398 ஆம் ஆண்டு, ஹே விளம்பி வருஷம், புரட்டாசி மாதம், தேய்பிறை நவமியில் திதியில், கோதாவரி நதி தீரத்தில் சித்தி அடைந்தார்.

இவர் 12 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.

கருத்துகள் இல்லை: