வியாழன், 10 செப்டம்பர், 2020

ருத்ராஷம்


ருத்ராட்ச மாலையை எப்போது அணியக் கூடாது?

நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது.

மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும்
தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக
தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.

துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.

இன்றைய சமுதாயத்தில் உலகசுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம் - உலக சுகம் இரண்டையும் ஏற்றுக் கொண்டு தான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால்,
ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின் போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம்
காப்பாற்றப்படும்.காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ,கூட்டியோ அணியக்கூடாது.

ருத்ராட்ச மாலையை அணியும் முறை:-


குடுமியில் அணியவேண்டியது - 1
தலை உச்சியில் அணியவேண்டியது - 13
தலையில் அணியவேண்டியது - 36
காதில் அணிய வேண்டியது 1அல்லது 6
கழுத்தில் அணியவேண்டியது - 32
புஜத்தில் (கை 1க்கு) அணியவேண்டியது - 16
ஒரு மணிக்கட்டில் அணியவேண்டியது - 12
குடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்கவேண்டியது - 25
இம்மை மறுமை பலன்களைஅடைய உதவும்
ஜெபமாலையில் (கையில்வைத்துக் கொள்ள) கட்டவேண்டியது 27,53 அல்லது 108.

ருத்ராட்ச வடிவங்கள்:-

ருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன்
கொடுக்கிறது. சிவபுராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும்
ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு முகம் - சிவ வடிவம்
இரு முகம் - தேவி வடிவம்
மூன்று முகம் - அக்னி சொரூபம்
நான்கு முகம் - பிரம்ம வடிவம்
ஐந்து முகம் - ருத்ர வடிவம்
ஆறு முகம் - சண்முக வடிவம்
ஏழு முகம் - அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் - கணபதி வடிவம்
ஒன்பது முகம் - பைரவர் வடிவம்
பத்து முகம் - திருமால் வடிவம்
11 முகம் - ஏகாதச ருத்திரவடிவம்
12 முகம் - துவாதச ஆதித்யவடிவம்
13 முகம் - முருகன் வடிவம்
14 முகம் - சிவ வடிவம்.

ருத்ராட்சையின் பிற பெயர்கள்:-

ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி,அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என
ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன.


கருத்துகள் இல்லை: