செவ்வாய், 29 டிசம்பர், 2020

கிருஷ்ணா பட்

இவர் இப்படி ஆத்மார்த்தமாக சிவனை பூஜிக்கும் படத்தை ஏற்கனவே பார்த்திருப்போம் ..
யார் இவர் ,எங்கே இருக்கிறார் என்று எண்ணுபவர்கள் கவனத்திற்கு ...

KN கிருஷ்ணா பட் , 88 வயது முதியவர் ...

ஹம்பி , கர்நாடகா, சுல்தான்களால் அழிக்கப்பட்ட
 " படாவி லிங்கம் " கோயில். ,
கர்ப்பகிரகத்தில் மேல் கூரை இல்லை பாருங்கள் ,இருந்தாலும் கம்பிரமாக நிற்கும் 9 அடி உயர லிங்கம் ...

மேல கோபுரத்தை உடைக்க முடிந்தவர்கள்ளுக்கு கீழ் உள்ள சிலையை ..

450 ஆண்டுகளாக பூஜைகள் இல்லாமல் விடப்பட்டிருந்த லிங்கத்திற்கு ..

1980 ஆண்டு முதல் இவர் தனி மனிதனாக பூஜை செய்து கொண்டு இருக்கிறார் ..

காஞ்சி மகா பெரியவா ஹம்பி சென்ற போது தேவராய வம்சா வழியினிரடம் ,இவருக்கு  ஊதியமும் உணவும் கொடுங்கள் , இனி இவர் கோவிலை பராமரிப்பர் என்று கூறி உள்ளார் ..

இன்னமும் வருடத்திற்கு இருமுறை மகா சிவராத்திரி அன்று மட்டுமே ஊதியம் பெற்று கொண்டு இந்த உன்னத பணியை தொடர்கிறார் ..

இப்படியும் பல ஆயிரம் அர்ச்சகர்கள் பொருளாதார எதிர்பார்ப்பு எதுவும் இன்றி ,இறைப்பணிக்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உள்ளனர் ..

நாம் இங்கே நல்ல அதிர்வலைகளுடன் குடும்பத்துடன் வாழ ,இவர்களின் இந்த பூஜைகள் தான் முக்கிய காரணம் ..

பாரதத்தின் நம் தர்மத்தின்  தொன்மை காக்க தன்னலமின்றி  உழைத்து கொண்டு இருக்கும் இவரை போன்ற இந்த ஆன்மாக்கள் தான் உண்மையான " பாரத ரத்தனாகள் "❤


கருத்துகள் இல்லை: