புதன், 18 நவம்பர், 2020

இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல் எண்
வேதங்கள் பூஜித்து பரவியதால் ஈசனுக்கு வேதாரண்யேஸ்வரர் என்றும், தலத்தை வேதாரண்யம் என்றும் புகழப்படும் இத்தலத்தை நான்கு மறைகளும் இறைவளை வணங்கிய பின்னர், கதவை பூட்டி தாழிட்டுவிட்டன. நான்மறை பூட்டிய கதவை  திறப்பார் யார் என காத்திருந்தார் மறைநாதர். திருநாவுக்கரசரும் குழந்தை சம்பந்தரும் நெடிய கதவு முன் வந்து நின்று ஈசனை கதவு திறக்க வேண்டினர். அமைதி காத்தார் ஈசன். "அப்பரே! கதவைத் திறக்கும் பதிகத்தை பாடுங்களேன்" என சம்பந்தர் வேண்ட, ஈசன் தன் செவிகளை கூர்மையாக்கி தேன் வந்து பாயாதோ என ஏக்கம் நிறைய காத்து இருந்தான். *பண்ணின் நேர் மொழியாளுமை பங்கரோ* என முதல் பதிகம் பாடினார். கதவு இன்னும் சில பதிகம் பாடேன்" என்பது போல் திறக்காமல் இருந்தது.தொடர்ந்து 10 தேன் சொட்டும் பதிகங்கள் பாடியும் கதவு திறக்கவில்லை. கதவினருகில் நெருங்கிச் சென்று *அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்* எனத் தொடங்கி, *சரக்க விக் கதவந் திறப்பிம்மினே* எனக் கேட்டபோது கதவு அதிர்ந்தது. அதிலுள்ள மணிகள்
தானாக ஒலித்து பெருத்த சப்தத்துடன்
நான்மறைகளும் விடுபட அவர்களை வரவேற்கும் விதமாக கதவுகள் அகல திறந்தன. *மறைக்காடனே யாழைப் பழிக்கும் மொழியம்மையே* என்று அப்பரும் சுந்தரரும் இரு கைகளைத் தூக்கி தொழுது கொண்டே கோவில் உள்ளே நுழைந்தனர். உலகாளும் அம்மையையும் அப்பனையும் கண்டு ஆனந்தக் கடலில் மூழ்கினர். அப்பரும் சம்பந்தரும் பாக்களால் பரமனைத் துதித்து பாடினர். *வேதாரண்யம் விளக்கழகு* என்று போற்றப்படும் இத்தலம் சென்று வணங்கி வர நமது ஞானக்கதவு திறக்கும் என்பதில் ஐயமில்லை. *திருச்சிற்றம்பலம்*

கருத்துகள் இல்லை: