புதன், 18 நவம்பர், 2020

பழனி

பழநி


ஆறுபடை வீடுகளுள் மூன்றாம் வீடு. சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம்.

அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.பழநி செல்லும் பக்தர்கள் முதலில் தரிசிக்க வேண்டிய இடம்!

பழநி: பொதுவாக நமக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள், நல்அறிவுரைகள் வழங்கும் ஆன்மிகபெரியோர்கள், பெற்றோர்களை கடவுளாக பாவித்தும் இன்றளவும், அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கி நல்ஆசிபெறுகிறோம்.

சாதாரண மனிதர்களின் பாதத்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் என்றால், கடவுளின் திருப்பாதம் தரிசன வழிபாடு ஜென்ம பாவ விமோசனம். மறுபிறப்பில்லா முக்தியை அளிக்கும் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது. அந்தவகையில் தனது தந்தை சிவபெருமானுக்கு (இறைவன்) பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த, காரணத்தால் முருகப்பெருமானை இறைவனுக்கே இறைவன் தந்தைக்கு பாடம் சொன்ன குருபரன், குமரன் என ஆன்மிக பெரியோர்கள் போற்றி புகழ்ந்து பாடி வழிபடுகின்றனர்.

ஒரு சமயம் கைலாய மலையில் சிவபெருமான் ஞானபழத் திற்காக நடத்திய நாடகத்தின் போது முருகப்பெருமான் கோபித்துகொண்டு மலைமீது ஏறிநின்ற இடம் தான் மூன்றாம் படை வீடு (பழம்+நீ) பழநி என அழைக்கப்படுகிறது. அவ்வாறு முருகப்பெருமான் நின்ற பழநிமலையில் போகர் சித்தரால் நவபாஷன மூலிகையால் வடிவமைக்கப்பட்ட ஞான தண்டாயுதபாணி தெய்வத்தை, நம் நாட்டவர்கள் (இந்தியா) மட்டு மில்லாமல் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பக்தர்களும் அதிகளவில் தரிசனம் செய்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தின் அதிகவருமானமுள்ள ஆன்மிக சுற்றுலா ஸ்தலமாக பழநிகோயில் விளங்குகிறது

. சுவாமி திருப்பாத தரிசனம்: கைலாயமலையில் முருகப் பெருமான் ஞானபழத்திற்காக கோவித்துகொண்டு மலையில் மயிலுடன் வந்து நின்ற இடம் ரோப்கார்மேல்தளத்தின் அருகே உள்ளது. அங்கு பக்தர்கள் ஞானதண்டாயுதபாணியின் திருப்பாதம், மயிலையும் ஒருசேர தரிசனம் செய்யமுடியும்.

பழநி முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் முதலில் முருகன் பழநி மலையில் மயிலுடன் வந்து நின்ற இடத்தை தரிசித்து விட்டு பின் முருகனை தரிசித்தால் தான் முழு பலன் கிடைக்கும் என தலபுராணங்கள் கூறுகின்றன. இறைவனுக்கே இறைவன் (பழநியாண்டவர்) திருப்பாதத்தை தரிசனம்செய்தால், ஜென்ம பாவ விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள் சுவாமியின் பாதத்தை வழிபட்டு, பின் நவபாஷன மூர்த்தி ஞானதண்டாயுத சுவாமியை தரிசனம் செய்து வாழ்வில் எல்லா நலனும் பெறுகின்றனர்.


கருத்துகள் இல்லை: