வெள்ளி, 2 அக்டோபர், 2020

லட்சுமி நாராயணர் திருக்கோவில்

லட்சுமி நாராயணர் திருக்கோவில்


மூலவர்  : லட்சுமி நாராயணர்
தாயார்  : லட்சுமி                                      ஊர்  : காரிசேரி
மாவட்டம்  : விருதுநகர்
மாநிலம்  : தமிழ்நாடு
திருவிழா : வைகுண்ட ஏகாதசி 

சிறப்பு : மூலவரின் சிலை நவபாஷாண சிலை என்பது சிறப்பு. மிகச்சிறிய கோயிலாக இருந்தாலும், நவபாஷாணத்தில் பெருமாள் சிலையை பார்ப்பது அரிது என்பதாலும், கீர்த்தி பெரிது என்பதாலும் சனிக்கிழமைகளில் மக்கள் வந்து செல்கின்றனர்.  
     

திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமை காலை 8 - மாலை 6 மணி வரை திறந்திருக்கும். முகவரி,
அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், காரிசேரி- 626 119 விருதுநகர் மாவட்டம்.  
     
 தகவல் : இங்கு மார்கழி திருவோண நட்சத்திரத்தன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சனிக்கிழமைகளில், நவக்கிரக தோஷ பரிகாரத்திற்கும் யாகம் நடத்துகின்றனர்.  
 

பெருமை : பெருமாள் நான்கு கரங்களுடன், வலது காலை மடித்து லட்சுமி தாயாரை மடியில் வைத்து, அணைத்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகார தெய்வங்கள் இல்லை.     

ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி மலை மகாலிங்க சுவாமி கோயிலில் வசித்த சில சித்தர்கள் நவபாஷாணத்தில் ஒரு லட்சுமி நாராயணர் சிலை செய்து வழிபட்டு வந்தனர். ஒரு சமயம் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காரிசேரியில் கரை ஒதுங்கியது. சிலையை எடுத்த மக்கள், இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை: