செவ்வாய், 19 மே, 2020

*மதுரை மீனாக்ஷி அம்மன் பற்றிய தனிசிறப்புகள்.*

மதுரையின் அரசி மீனாக்ஷி ..!

மீனாக்ஷி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும்., ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.

அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.

அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாக்ஷி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள். இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.

பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.

இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிருடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.

அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும்.

மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு மீனாக்ஷி அம்மனை (அம்பிகையை) முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு. இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை.

அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.

வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம். சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணி மூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட கோவில்.

தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம். சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

உலக அதிசியங்களுள் ஒன்று மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்றே கூறலாம் இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாக்ஷி. நவராத்திரி நான்காம் நாள் அன்று நமது சிவகங்கை விஸ்வநாதர் ஆலயத்தில் விசாலாக்ஷி மீனாக்ஷி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.

மதுரையில் மீனாக்ஷி தினமும் எட்டு (ஏழு) விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.
இந்த எட்டு (ஏழு) வித ஆராதனை.

*திருவனந்தல் ~ பள்ளியறையில்* – மஹா ஷோடசிப்ராத சந்தியில் – *பாலா*

6 முதல் ~ 8 நாழிகை வரையில் – *புவனேஸ்வரி*

காலையில் (பூஜை நேரத்தில்) – *மீனாக்ஷி*

12 முதல் ~ 15 நாழிகை வரையில் – *கெளரி*

மத்தியானத்தில் (உச்சி காலத்தில்) – *சியாமளா*

சாயரக்ஷையில் (சாயம் சந்தியா காலத்தில் – *மாதங்கி*

அர்த்த ஜாமத்தில் (இரவு பூஜை நேரத்தில்) – *பஞ்சதசி*

பள்ளியறைக்குப் போகையில் – *ஷோடசி*

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும் போது., அவளுக்கு செய்யும் அலங்காரங்களும் மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்ப இருக்கிறது.
மாலை நேரத்தில் தங்க கவசம்., வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள்.

அதிகாலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம்., காலை வேளையில் குமரியாக., உச்சி காலத்தில் மடிசார் புடவையுடன்., இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்ற அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்பது சத்தியம்.

எல்லா கோவில்களும் போல இங்கும் பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்த பின் அன்னைக்கு விசேஷ ஹாரதி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது.

அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை., பால்., பழங்கள்., பாடல்கள்., வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.

மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சி. பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.

மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடை பெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும்.

பிள்ளை இல்லாதவர்கள்
காலையில் மீனாட்சியின் சிறுபிள்ளை அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் கட்டாயம் பலன் தருவாள் அன்னை என்கின்றனர்.

வியாபார நஷ்டம் தொழில் மற்றும் வேளையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரம் கண்டு முன்னேற்றம் பெறலாம்.
இதையெல்லாம் விட தாயை இந்த எல்லா அலங்காரத்திலும் நாம் காண என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்..!

முடிந்தவர்கள் ஒருமுறையாவது மதுரை சென்று மீனாட்சியை நேரில் தரிசனம் செய்யுங்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் சிலை பச்சை மரகத கல்லிலால் ஆனது.

கருவறை பக்கம் நாதஸ்வரம்., மேளம் போன்ற இசை கருவிகளை இசைக்க மாட்டார்கள். கல் என்றாலே கடினமானது என்று சொல்வார்கள். ஆனால் மரகத கல் மிக மென்மையானது. நாதஸ்வரம்., மேளம் போன்ற இசை கருவிகளை இசைக்கும் போது வரும்/எற்படும் ஒலி அதிர்வுகளை கூட தாங்கி கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட ஒரு கல்லை (ஒலி அதிர்வுகளை கூட தாங்க முடியாத) உளியால் செதுக்கி மீனாட்சி அம்மன் சிலை செய்து இருக்கிறார்கள் என்றால்., நம் சிற்பிகள் எவ்வளவு திறமையானவர்கள் அதுவும் எந்த தொழில் நுட்ப கருவியும் வசதியைம் இல்லாத காலத்திலேயே…

நம் தமிழர்களின் கலையை போற்றுவோம்…

என்ன வளம் இல்லை இத்திரு நாட்டில்….

கருத்துகள் இல்லை: