செவ்வாய், 19 மே, 2020

அவள் தான் அழகுக்கும் அழகு ஆனால் உதாரணம் சொல்லாமல் அவளுடைய அழகை உணர்ந்து ரசிக்க முடியாதே. இதோ உதாரணத்துடன்.

வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா

அங்கதன் மன்மதன் இருக்கிறானே அவனுக்கு உருவம் கிடையாது. மனதில் மட்டும்தான் இருக்கிறான். அவன் மேல் உள்ள கருணையினால் அவனுக்கு ஒரு விலாஸம் அட்ரஸ் வேண்டுமே அதற்காக தன்னுடைய முகத்தையே அவனுக்கு வீடாக அளித்தாளாம்.வீடு என்றால் வாயில் இருக்க வேண்டும் தோரணம் இருக்க வேண்டும் அல்லவா? அம்பாளுடைய இரு புருவங்களும் தான் அந்த வீட்டின் வாயில் தோரணங்கள்.அம்பாளின் முகம் மன்மதனைப் போல அழகு படைத்தது புருவங்கள் இரண்டும் வாயில் தோரணம் போன்று இருக்கிறதாம்.

இதுதான் அர்த்தம் என்பதற்கு இந்த உவமைகள் எல்லாம் என் கற்பனையே ஏதாவது தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்திகொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: