செவ்வாய், 19 மே, 2020

தாயே த்ரிபுர சந்தரி. பால த்ரிபுர சுந்தரி தாயே...லலிதையே..

உன் அழகினை நான் கண்டேன் காண மனம் ஆனந்த கூத்தாடுகிறதே பாலா த்ரிபுர சுந்தரி தாயே.

நன்னா அழகா வகிடு எடுத்த கூந்தல்,

சந்திரன் மாதிரியான வெண்மையான நெற்றி,

அழகான கருப்புவானவில் மாதிரியான புருவங்கள்,

புருவமத்தில அழகான ஒரு குங்கும பொட்டு,

குட்டி வெள்ளை ரோஜாபூ உள்ளே ஆடும் கருவண்டுகள் மாதிரி ரெண்டு கண்விழி,

அதுக்கு வரப்பு கட்டி விட்ட மாதிரி மை,

அழகான குழி விழும் ரெண்டு குட்டி கன்னம்,

பண்ணி வெச்ச மாதிரி அழகான குட்டி மூக்கும் ரெண்டு காதும்,

அந்த காதுல குட்டி குட்டியா ரெண்டு தங்க ஜிமிக்கி,

குறு நகை செய்யும் குட்டி வாய்.....

இந்த மாதிரி ரூபத்துல அம்பாளை மனசுல நினைச்சு பாருங்கோ

அதுக்கு அப்புறம் நாம வேற யாரையும் சுந்தரியாவே நினைக்க மாட்டோம் !!

சின்ன சின்ன நடை நடந்து சிங்காரமாய் ஆடிவந்து செல்ல மகளாக வந்து நிற்கும் அம்பிகே ... உன்பேர் சொல்ல சொல்ல இனிக்குதடி அம்பிகே ... ஜகதம்பிகே... தாயே..தயாபரி.

கருத்துகள் இல்லை: