செவ்வாய், 9 ஜூலை, 2019

சுருதி ஸூக்தி மாலா : சுலோகம் 101

சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்

சிவலிங்க பூபதியின்
ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்

திணம் ஓரு சுலோகம்

சுலோகம் 101

ஏக : ச்ருதோஸி பரமேச்வர ! ஸத்விதீயம்
மந்த்ரா யயா வ்யபதிசந்தி புன : புனஸ்த்வாம் |
தஸ்யா : ப்ரபாவம் அதிவாங் மனஸம் சிவாயா :
கார்த்ஸ்ன்யேன வக்து மனலம் கமலாஸனோபி ||
பதவுரை

பரமேச்வர – பரமேச்வரனே! ஏக : ச்ருதோஸி – நீர் ஒருவர் ஒப்பற்றவர் (அத்லிதீய ப்ரம்மம்) என்பதாக சுருதியால் போற்றப்படுகிறீர்.

ஏக எவ ருத்ரோ ந த்விதீயாய தஸ்தே
ய ஏகோ ருத்ர உச்யதே –
என்றெல்லாம் சுருதிகள் உத்கோஷிக்கின்றன யயா யுக்தம் – எந்தப் பார்வதியோடு கூடியிருப்பதால், த்வாம் – உம்மை, மந்த்ரா:- மற்ற மந்த்ரங்கள், புன : புன :- அடிக்கடி ஸத்விதீயம் வதந்தி – ஸஹ ஸ்வஸ்ராம்பிகயா அம்பிகாபதயே – உமாபதயே என்றபடி, இரண்டாவதாகிய சக்தியுடன் கூடியவராகச் சொல்லுகின்றனவோ, தஸ்யா:- அப்பேர்ப்பட்ட, சிவாயா:- பராசக்தியின் அதிவாங்மனஸம் ப்ராபவம் – வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத மகிமையை கமலரஸனோபி – வேதங்களை உபதேசித்த ப்ரம்மாவும், கார்த்ஸ்ன்யேன – பூராவும், வக்து மனலம் – சொல்லச் சக்தியற்றவர் நிச்சயம்.

வாயவீய ஸம்ஹிதையில் தேவியின் மகிமை நன்கு விளக்கப்பட்டிருப்பது இங்கு கவனிக்க வேண்டும். கூர்ம புராணத்தில், பார்வதி தன் தந்தை மலையரசனான ஹிமவானுக்கு தன் விபூதியை விச்வரூபமாகச் காட்டியதாகவும், பிறகு பயமடைந்த தந்தைக்குத் தன் பழைய குழந்தை உருவத்தைக் காண்பித்து அனுக்ரஹித்ததாகவும், வரலாறு கூறப்பட்டு உமாதேவி மகிமை விளக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: