திங்கள், 16 மே, 2022

வேதங்கள்


வேதம் என்ற சொல் ' வித்' என்ற தாதுவில் இருந்து உண்டானது. இதற்கு அறிதல் என்று பொருள். இதை அறிந்து கொள்ளும் வழி வித்தை எனப்படும். வித்தையினை அறிவினால் தான் பெற முடியும் எனவேதான் வித் என்ற தாதுவிலிருந்து வேதம் ,வித்யா என்ற இரண்டு சொற்களும் உண்டாயின. இந்த
வேதங்கள் என்பது உலகை படைத்து காத்து ரட்சிக்கும் ஈசனின் மூச்சுக் காற்றாக புராணங்கள் கூறுகின்றன.
பரம்பொருளை  அறியும் பேறறிவாக வேதங்கள் திகழ்கின்றது

பரம்பொருளில் இருந்து இடைவெளி வெளிப்பட்டது; ஆகாசம் தோன்றியது; அதிலிருந்து காற்று வந்தது . அந்தக் காற்றானது பொருள் படைத்த ஒலி வடிவைப் பெற்று, உலகின் காதுகளில் வந்து விழுந்தது. காதில் விழுந்த முதல் ஒலி வேதம் என்கிறது ஸனாதனம்.

வேத மந்திரங்கள் காலத்தால் அழிந்து போகாமல் இருக்க ரிஷிகள் இதனை மனனம் செய்து வழிவழியாக தங்கள் சீடர்களுக்கு கற்பித்தனர்.
சுவடிகளில் எழுதிப் படிக்காமல், குரு சொல்ல, சிஷ்யர்கள் காதால் கேட்டு மனனம் செய்து வந்ததால் வேதத்தை "ஸ்ருதி" என்றனர். வேதத்தை காது வழி கேட்டு பாடம் செய்யும் முறைக்கு அத்யயனம் என்று பெயர்.

ஆச்சாரியார் ஒரு முறை ஒரு மந்திரத்தை சொல்ல, மாணவர்கள் பத்து முறை திரும்பத்திரும்ப சொல்லி பாடம் செய்வதை திருவை சொல்லுதல் என்பார்கள்.

"ச்ரோத்ரம்" என்ற சொல்லுக்கு காது என்று பொருள்.  இப்படி வேதத்தை குருவிடமிருந்து காது வழியாக கேட்டு அத்யயனம் செய்தவர்களுக்கு "ச்ரெளதிகள்" என்று பெயர்.

வேதத்தை கற்பிக்கும் குருவானவர் நல்ல ஆச்சாரம் உள்ளவராகவும் வேத லக்ஷணம் ,அர்த்தம், ஆகியவற்றினை நன்கு தெரிந்தவராகவும், நன்கு புரியும்படி கற்பிப்பவராகவும், வேதத்தில் பக்தியும் ,சிரத்தையும் உள்ளவராகவும் இருக்க வேண்டும். கற்றுக்கொள்ளும் மாணவன் ஆசாரம் உள்ளவனாகவும் சோம்பல் இன்றி இருப்பவனாகவும் வேதம் மற்றும் குருவிடம் மிகுந்த பக்தி உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பவை வேதம் கற்பதற்குண்டான நியமங்கள்.

தொடர்வோம்..........

கருத்துகள் இல்லை: