திங்கள், 16 மே, 2022

ஸ்ரீமத் பாகவதம் – மூன்றாவது ஸ்கந்தம்

ஸ்ரீமத் பாகவதம் – 3வது ஸ்கந்தம்


– விதுரருக்கு மைத்திரேயர் இருக்கும் இடம், அவரது சிறப்பு முதலியன எவ்வாறு தெரியவந்தது?

விதுரர் தீர்த்தயாத்திரை செய்து கொண்டு வருகையில் யமுனா நதிக்கரையில் பதரிகாசிரமம் நோக்கிப் போய்க் கொண்டிருந்த பகவத் பக்தரான உத்தவ சுவாமியைக் கண்டு இருவரும் ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு க்ஷேம சமாசாரங்களை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது உத்தவரிடமிருந்து யாதவர்கள் ரிஷி சாபத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருந்ததும், முன் ஜன்மத்தில் வழியாக இருந்து அந்த ஜன்மத்தில் வேடனாக இருந்த ஒருவனது அம்பால் பகவான் பரமபதம் சென்றதையும் கேள்விப்பட்டு மிகுந்த துக்கமடைந்து பகவான் உலகம் விட்டுப் போகையில் சொல்லிப் போன ரகசியாதிகளைத் தனக்குச் சொல்லும்படி உத்தவரை விதுரர் கேட்டார். அவர் தாம் ஒரு விரதத்தோடு பகவான் உத்திரவின்படி சீக்கிரம் பதரிகாசிரமம் போய்ச் சேர வேண்டும் என்றும், தனக்கு ரகசியங்களைப் பகவான் பரமபதம் போகும் தருணத்தில் உபதேசிக்குங்கால் மைத்திரேயர் என்ற மகாமுனியும் அங்கு வந்திருந்தார் என்றும், பகவான் அந்தக் காலத்தில் தன்னையும் விதுரரயும்தான் ஞாபகத்தில் வைத்திருந்தார் என்றும், அப்பொழுது விதுரர் இல்லாமையால் அவருக்குத் தாம் எடுத்துச் சொல்லிய ரகசியங்களை ஆதியோடந்தமாகச் சொல்ல வேண்டும் என்று மைத்திரேயருக்குப் பகவான் உத்தரவு கொடுத்திருக்கிறார் என்றும், மைத்திரேயர் அப்பொழுது ஹரித்வாரத்தில் இருக்கிறார் என்றும், முக்கிய விஷயங்களை உத்தவர் விதுரருக்கு எடுத்துரைத்துப் பதரிகாசிரமம் சென்றார். விதுரருக்குப் பகவான் மேல் பக்தி அதிகரிக்க மைத்திரேயரைச் சீக்கிரத்தில் சென்று அடைந்தார்.

கருத்துகள் இல்லை: