திங்கள், 16 மே, 2022

ஸ்ரீமத் பாகவதம் – பரீக்ஷித் சரித்திரம்

ஸ்ரீமத் பாகவதம் – பரீக்ஷித் சரித்திரம் – அஷ்டம ஸ்கந்தத்தின் கதை என்ன?

முதலை வாயில் அகப்பட்டு ‘ஆதிமூலமே’ என்று கதறிய கஜேந்திரனைப் பகவான் காப்பாற்றியதும், கூர்மம் முதலிய அவதாரங்கள் செய்து தேவதைகளுக்கு அமிர்தபானம் கிடைக்கும் படி பகவான் செய்ததும், மஹாபலியை வாமனராகி மூன்றடி மண் யாசித்துத் திருவிக்கிரமராகி உலகை இரண்டடியால் அளந்து அவனைப் பாதாள லோகம் போகும் படி செய்து தேவர்களுக்குப் பகவான் ஸஹாயம் செய்ததும், மத்ஸ்யாவதாரம் செய்து பகவான் ஹயக்ரீவாசுரனைக் கொன்று அவன் திருடிச் சென்ற வேதங்களைப் பிரம்மாவிடம் ஒப்புவிக்கு முன் பிரளயோதகத்தில் வைவஸ்வத மனுவிற்கு ஞானோபதேசம் செய்ததுமே எட்டாம் ஸ்கந்தத்தில் அடங்கிய கதை.


கருத்துகள் இல்லை: