செவ்வாய், 17 மே, 2022

சொல்லும் செயலும்

 சொல்லும் சொல் !! செய்யும் செயலில் !! தெளிவாக, நேர்த்தியாக செய்ய என்ன செய்ய வேண்டும் ??

சொல்லவும் !! செய்யவும் !! காரணம் "நான்" என்ற மாயை கடந்து !!

யாரின் இயக்கமான ஒத்துழைப்பு வழியே இவையெல்லாம் நிகழ்கின்றது என்பதை உணர்ந்து !!

உங்கள் இருப்பின் காரணமும்,
சொல் செயல் வழியே உங்களின் விருப்பத்தை விரும்பியபடியே வெளிப்பட வைக்கும்
இறைவனை நினைத்து முன்னிறுத்தி சொல்லி !! செய்து !! பாருங்களேன் ..

முன்னிறுத்துவது நான் என்று இருக்கும்போது ஒருவித தடுமாற்றம் நம்முள் நிகழ்வது எதார்த்தம் தான் !!
காரணம் நாம் எப்போதும் ஓர் நிலை இல்லாது அல்லாடியபடி இருக்கும்போது ?? நான் சொல்கின்றேன் !! செய்கின்றேன் !! என்னும்போது தடுமாற்றமும் சகஜம்தானே ..

அதே என்றும் எங்கும் நிலையாய் நிறைந்து இருந்து எதையும் தன்னுள்ளே கொண்டு இயங்கி இயக்கி அருளும் இறைவனை முன்னிறுத்த உங்கள் செயல் !! சொல் !! போன்றவற்றில் ஓர் தெளிவும் திடமும் இருக்க தானே செய்யும் !!

அவனால் பேசுகிறேன் !! அவன் பேசவிடுவதை பேசுகிறேன் !!
அவன் எதை நினைவில் கொண்டுவந்து எப்படி சொல்லெடுத்து கொடுத்து அதையும் எந்த விதத்தில் ஒலியை வெளிப்படுத்த விடுகிறானோ அங்கனமே பேசுகிறேன் என்று உணர்வில் அவனோடு உறவாடியவண்ணம் நம் வெளிப்படுத்தும் சொல் எத்தகைய தாக்கமும் நமக்கு நேரவிடாது !!
தெளிவாக யாருக்கு என்ன புரியவேண்டுமோ அதை புரிவிக்கும் படி வெளிப்படும் தானே ..

அதே போலவே செயலும் !!
அவனால் செய்யாக்கூடிய சாத்தியக்கூறுகளை பெற்று !!
அவன் செய்யவிட்டதை !!
அவன் என்னை கையாளும் விதமே செய்கிறேன் என்று செய்ய !!
செயலில் நேர்த்தி சிறப்பு தனித்துவம் எல்லாம் வெளிப்படும் தானே !!

எல்லாம் படிக்க !! கேட்க !! நல்லாத்தான் இருக்கு ??
இதுவெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் தானே ..

கண்டிப்பாக சாத்தியமே ..

யாரோ உங்களை திட்டிவிட்டாலோ !! புகழ்ந்து விட்டாலோ !!

நாம் என்ன செய்தலும் !! பேசினாலும் !! அவரின் நினைப்பு நாம் செய்வதில் எல்லாம் அதுவும் நம் சிந்தனையில் இருக்கின்றது தானே !!
அதனோடு தானே நம் அன்றாட நிகழ்வு எல்லாம் நடக்கிறது !!

சொன்னார் இறந்து பலவருடம் ஆனால் கூட
நினைவில் அவர்கள்  செய்தது வழியே உங்களோடு எதிர்த்தோ ?? வருந்தியோ ?? வாழ்வது சாத்தியம் என்றால் !! இதுவும் சாத்தியம் தானே ..

இறந்தவர் கூட வாழும் தகுதிபெற்ற நம்  சிந்தையில் ..

எப்போதும் இருந்து !!
நம்மையும் நாமாக இருக்கவைத்து !!
நம்மோடு என்றும் இருக்கும் நிதர்சனமான இறைவனை உணர்வில் இருத்தி செய்யமுடியும் தானே ..

அப்படி செய்வதால் ??

அந்த சொல் செயல் வழியே விளைவது எது என்றாலும் அது உங்களுடையது இல்லை என்ற மெய் புலப்படும் !!
அதை குறித்து யாரும் புகழ்ந்தாலும் !! இகழ்ந்தாலும் !! அதைப்பற்றி
உங்களுக்கு அக்கறையோ ?? கவலையோ ?? கொள்ள தேவையில்லை தானே ..

நீங்கள் இதுபோல உங்களை ஏமாற்றுக்கொள்வதில் இருந்து விடுவிக்கப்பட்டு !! சுதந்திரமாக !! ஆனந்தமாக !! அமைதியாக !! வாழமுடியும் தானே ...

இதை தான் தவவாழ்வு என்று கூறப்படுகிறது !!

குடும்பத்தை விட்டு காட்டுக்கு சென்று தவம் செய்கிறேன் என்று இறைநினைப்போடு இருப்பது தானே ..
அதையே
நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் சொல் செயல் எல்லாம் இறைசிந்தையோடு செய்யும் போது அதுவும் தவவாழ்க்கை தானே ..

திருச்சிற்றம்பலம்

நடராஜா நடராஜா

கருத்துகள் இல்லை: