செவ்வாய், 22 செப்டம்பர், 2020

தேவ ரகசியம்

தேவரகசியம்!

*ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அக்குழந்தையின் தந்தை மூன்று மாதத்துக்கு முன்னால்தான் இறந்து போயிருந்தான்.*

*எமதர்மன்* ஒரு எமதூதனை அனுப்பி "அந்த பச்சிளம்  குழந்தையின் தாயின் உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு" என்கிறான்.
*இந்த எமதூதன் நினைக்கிறான்*, "ஐயோ பாவம்; அப்பாவும் இல்லை, அம்மாவின்உயிரையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால்  இந்த குழந்தையின் கதி என்னவாகும்!" என அத்தாயின் உயிரை எடுக்காமலே வானலோகம் திரும்பி விட்டான்.*

*நாமெல்லோரும் அந்த நிலையில்தான் இருக்கின்றோம். நமக்கென்று ஒருசில வரையறைகளை வகுத்துகிறோம். அதற்கு பல அளவுகோல்களையும் வைத்திருக்கிறோம்.*

*ஆக, எமதூதன் அந்த குழந்தையின் நிலைமையை நினைத்து பரிதாபப்பட்டதனால் உயிரை எடுக்காமல் போய்விட்டான்.*

*ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார்; "உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை...*

*கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்பது பற்றிய அறிவு இல்லை...*

*அது தெரிகிற வரைக்கும் பூமியிலே போய் கிட" என்று அவனை தூக்கி பூமியில் போட்டுவிட்டார்.*

*அவன் பூமியின் ஒரு பூங்காவில், மினுமினுக்கும் தன் தேக தேஜஜ் எல்லாம் இழந்து கன்னங்கரேலென்று முனங்கிக் கொண்டு  கிடக்கிறான்.*
*அப்போது அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன்,*
என்னடா இது,  இங்கே ஒரு முனங்கல் சத்தம் கேட்கிறதே" என்று அவனைப் பார்த்து விட்டு, தன்னிடம் இருந்த ஒரு துணியை அவனுக்கு போர்த்துகிறான்.*
*மேலும் "என்னுடன் வா" என்கிறான்.*

*எமதூதன் மறுவார்த்தை பேசாமல்
தையற்காரனுடன் அவன் வீட்டுக்குச் செல்கிறான்.* திண்ணையில் எமதூதனும்,  அந்த தையற்காரனும் படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

*அந்த தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், "வா வா வந்து கொட்டிக்கோ"  என்று சாப்பிட கூப்பிட்டாள்.*
அவன் விருந்தாளி வந்திருக்கிறானே என்று சொன்னான்.
*அவள் கணவனை திட்டி விரட்டி விட்டாள்.*

*"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று".  எமதூதனும்  ஒன்றும் சொல்லாமல் போய்க் கொண்டே இருந்தான்.*
*ஒரு பத்து நிமிடம் கழித்து அவள்; "சரி,சரி வந்து சாப்பிட்டு போ"  என்று எமதூதனை  மறுபடியும் கூப்பிட்டாள்.*

*அப்போது அந்த எமதூதன் லேசாக சிரித்தான். கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு சற்று பொன்னிறமாக மாறிற்று. ஆனால் ஒன்றும் பேச மாட்டான்.*

*தையற்காரன் சொல்வான்: "எனக்கு துணிகளில் இந்த காஜா போடுவதற்கு, பட்டன் தைப்பதற்கு  ஆளில்லை; உனக்கு தங்குவதற்கு இடமும், சாப்பிட சாப்பாடும் போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்" என்று சொன்னான்.

*எமதூதன் டெய்லரிங் அசிஸ்டண்ட் ஆகிவிட்டான்.*

*ஒரு பத்து வருடம் ஆகிறது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்கார பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற குழந்தை, அத்துடன் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து *தையற்காரனிடம்* *"இந்த குழந்தைக்கு 'கை' கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது". நல்லா தளர்வாக தைக்க வேண்டும்.  என்று சொல்வாள்.*

*எமதூதன் அந்த குழந்தையையும் பார்த்தான். அந்த பணக்கார பெண்மணியையும் பார்த்தான். பின்னர் சிறிது சிரித்தான். அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறியது.*

*இன்னும் ஒரு ஐந்து வருடம் ஆகிவிட்டது.*

*ஒருநாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வந்தான். வந்து, "இந்தாப்பா! இதில் பத்து மீட்டர் விலையுர்ந்த துணி இருக்கிறது. இதிலே 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தையுங்கள்" என்று சொல்லி கொடுத்து விட்டுப் போனான்.*

*அதற்குள் அந்த எமதூதன் தேர்ந்த தையற்காரன் ஆகிவிடுகிறான்.*

*முதல் நாள் போய்விட்டது.*
*இரண்டாம் நாள் போய்விட்டது.*

 *முதலாளி தையற்காரன், "நாளை டெலிவரி , அந்த பணக்காரன் வந்து கேட்பானே,  என்ன சொல்வது?"  என்று கேட்கிறான்.*

*இந்த எமதூததன்; டர்ரென்று  அந்த பேண்ட் துணியை கிழித்து, ஒரு தலையணை உறை, பெட் கவர் தைத்து விட்டான். *முதலாளி தையற்காரன் திட்டுகிறான்". என் பிழைப்பில் மண்ணை போடுவதற்கு தான் வந்தாயா? இப்போது அவன் வந்து கேட்டால்  நான் என்ன பண்ணுவது?" என்கிறான்.*

*அப்போது கார் டிரைவர் ஓடி வருகிறான்.  "நீங்கள் சபாரி தைக்காதீர்கள். என் முதலாளி இறந்து விட்டார். அதனால் அத்துணியில் ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள்"  என்று கூறுகிறான்.*

*இப்பொழுது எமதூதன் முகத்தில் சிரிப்பு வந்ததும், அவன் முழுவதும் பொன்னிறமாக மாறி விடுகிறான்.*
*அப்படியே மேலே பறந்து போக ஆரம்பிக்கிறான்...*  

*அப்போது தையற்காரன்  சொல்வான், "அப்பா நீ யார்? வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறைதான் சிரித்தாய். ஒவ்வொரு தடவை சிரிக்கிற போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதனால் அதற்கு விளக்கத்தை சொல்லிவிட்டு,  நீ போ" என்கிறான்.*

*அவன் "நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து விட்டால், அந்த குழந்தைக்கு யார் கதி! என்று அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால்; பூமியில் போய் தேவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா" என்று என்னை அனுப்பினார்கள். அதனால் இப்பூலோகம் வந்தேன்.*

*"இங்கு அப்படி என்ன தெரிந்து கொண்டாய்?"  என்று தையற்காரன் வினவுகிறான்.*

*முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா...?*
*அப்போது அவள் முகத்தில் மூதேவி தெரிந்தாள்.*
*பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வாவா என்று கூப்பிடும் போது அன்னை மகாலட்சுமி தெரிந்தார்.*
*அப்போது, இந்த உலகத்தில் "ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும்,  ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள்தான் காரணம்"  என்று தெரிந்து கொண்டேன். மூதேவி போய்விட்டு சீதேவி வருவதற்கு பத்து நிமிடம் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன்.*
*இதுதான் #தேவரகசியம் # ஒன்று*

*மனிதர்களிடம்  பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது.  ஆனால் எந்த கார்டை வைத்து விளையாடுவது, எதை விடுவது; என்று தெரியாததினால்  பெரும் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.*

*"பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா...?*
*அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா...?*
*அதுதான்  அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நான் நினைத்த குழந்தை.*

*அக்குழந்தையின் நிஜமான தாய் ஒரு பரமஏழை. அவள் இறந்தும் விட்டாள். இருந்தும் கூட இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கும்,   தளர்வாக தைக்கவேண்டும் என்று அக்கறையுடன் கூறுகின்ற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான்.  இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறையாக சிரித்தேன்.*
*ஒரு எமதூதன் ஆகிய எனக்கே; பச்சாதாபம் இருக்கிறபோது, உயிர்களை கருணையுடன் உருவாக்கும் இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்கு தெரிந்தபோது இரண்டாவது #தேவ ரகசியம்#  புரிந்தது.*

*இறைவன் எல்லாவற்றையும் காரண காரியங்களோடுதான் நடத்துகிறான்.*

*மூன்றாவது #தேவ_ரகசியம்# மூன்றுநாட்களில் சாகப்போகிறவன்; இன்னும் 20 வருடங்கள் *தான்* உயிரோடு இருக்கப்போவதாக  நினைத்துக்கொண்டு,  நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணியை தைத்துக்கொடு என்று சொன்னானே!!*
*"எனக்கு தெரியும் அவன் சாகப்போகிறான்" என்று,  அதனால்தான் நான் அத்துணியை தைக்கவே இல்லை.*

*அவன்  இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்".*

*இம் மனிதர்கள் இந்த உலகத்தை ஏதோ நூறு வருஷம் இருநூறு  வருஷம் குத்தகைக்கு போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்து குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.*

*சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.!!*

*நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்த வாழ்வின் எதார்த்தமான உண்மை!*

*அதுதெரிந்தும் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன், மற்றவன்தான் செத்துக் கொண்டிருப்பான் என்றும் நினைக்கிறான் அல்லவா?* *அதுதான் மூன்றாவது #தேவரகசியம்#!*

*அதனால்தான் இந்த உலகத்தில் அவன் திறமையாக செயலாற்றாமல் இன்னும் 20-வருஷம் கழித்து நடக்கப் போகிற தன் குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்!!*

*இன்னும் 15 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப்போகிற பையனுக்கு 'Fees'- கட்ட பணம் இல்லையே என்று இப்பொழுதே வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான்!!!*

*இதுவே இவ்வுலகத்தின்  நிம்மதி தொலைய காரணமாகிறது. பேசிக் கொண்டிருக்கிறபோது இந்நொடியே நாம் இறந்துபோகலாம், நாம் இறந்தாலும் நம் குழந்தைகளை நம்மை விட கடவுள் மிகநன்றாகப் பார்த்துக்கொள்வார் என்பதை உணர்ந்தால், நாம் சந்தோஷமாக இருப்போம்!

*இந்த மூன்று ரகசியங்கள்*

*அதாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது.*

*இரண்டாவது எது நடக்கிறதோ- அதற்கு #கடவுள்# ஒரு ஆகச்சிறந்த மாற்றுவழி வைத்திருப்பார்.*
*மனிதனின் மனநிலையில் உள்ள தான் என்னும் *ஈகோவினாலும்*,  அறியாமையினாலும்; அவர்களால் இறைவனின் அருட்களை புரிந்து கொள்ள முடிவதில்லை.*

*மூன்றாவது- யாருக்கும், எந்த நேரத்திலும் சாவு வரலாம்.*
*இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.*
*இந்த #அஞ்ஞானம்#தான் உலகில் துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.*

 இப்படிப் பட்ட #தேவ-ரகசியங்களை# புரிந்து கொண்டு நாமும் வாழப் பழகி விட்டால், நாம் வாழும் காலமெல்லாம் நிம்மதியான வசந்தமே..


கருத்துகள் இல்லை: