செவ்வாய், 22 செப்டம்பர், 2020

அகிலாண்டேஸ்வரி

ஈஸ்வரி என்றாலே ஜகதீஸ்வரி, அகிலாண்டேஸ்வரி


தான் ஞாபகத்துக்கு வரும்.

திருச்சிக்கு அருகில் இருக்கும் திருவானைக்காவல் கோவிலில் குடிகொண்டு இருப்பவள்.

அம்பாள் மிக அழகு! அதுவும், அர்த்த ஜாம பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேசுவரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு களை, அழகு, கம்பீரம். அகிலாண்டேசுவரி மிக உக்ரமான அம்பாள் என்றே கூறுவார்கள்.

நடு இரவில், சலங்கை ஒலி 'ஜல் ஜல்' என ஒலிக்க, அவள் கோவில் பிரகாரங்களை வலம் வருவதாக ஐதீகம்.

இரு காதுகளிலும் ஆதி சங்கரர் அணிவித்த ஸ்ரீசக்ரத்தை தாடங்கம் என்கிற காதணிகளைஅணிந்து எதிரில்அமர்ந்து இருக்கும் ஆனைமுகத்தோனுக்கும்,அடியவருக்கும் அருள்பாலிப்பவள்.

பார்க்கப் பார்க்க திகட்டாத ஜ்வலாமுகி ,வாராஹி அவள்.

அம்மா அம்மா அம்மா
எனக் கபயம் அருள்வாய் அகிலாண்டேஸ்வரி

ஸிம்ஹ வாஹினி  ஸ்ரீ லலிதே பவானி
நம்பினோரைக் காக்கும் செம்மல்ர் வதனி

மங்கள நாயகி  மதுரை  மீனாஷி
திங்களை சூடியோன் தேவி  ஸ்ரீ காமாஷி கங்கை நதிக் கரை காசி விசாலாஷி
இங்கு ஏலகனோடு  எனக்குக் கொடு காஷி

கருத்துகள் இல்லை: