ஞாயிறு, 28 ஜூலை, 2019

அத்தி வரதர்

தங்க கவசமிட்ட அனந்த பத்மநாபரே இப்போது அந்நிய பயம் நீங்கி தைரியமாக உலகுக்கு காட்சி அளிக்க... 1709ல் துவங்கிய பழக்கம் இப்போதும் தேவையா! அத்தி வரதர் 4  முதல் இரண்டு பதிவை நீக்கி விட்டேன் என்பதால் என் கருத்தில் மாற்றம் உள்ளதாக நினைக்க வேண்டாம். வட கலை / தென்கலை ப்ரச்சனை நமக்கு தேவை இல்லாத ஒன்று... ராமானுஜர் வைணவ சித்தாந்தங்களை பரப்ப ஸ்ரீ ரங்கம் மற்றும் காஞ்சி ஆகிய இரண்டு இடங்களில் பாடசாலைகளை நிருவினார்... அவை, வட கலா சாலை காஞ்சி தென் கலா சாலை ஸ்ரீ ரங்கம் என காலப் போக்கில் வட / தென் கலை ஆகிப் போனதாம். எது எப்படியோ... பாரம்பர்ய திருமங்கை மன்னன் (தென்கலை) பாசுர பாடல்களை வரதருக்குப் முன் பாடக்கூடாது என கைகலப்பில் இறங்கிய பொருக்கிகள் தான் பகுத்தறிவுவாதிகளே விட அதிகம் விஷ்ணுவை அசிங்கப்படுத்தி உள்ளனர். வடகலை / தென்கலை பிரச்சனை பூதாகாரமாக ஒரு சமீபத்திய வைணவ ஆச்சாரியர், A1, அவளுக்கு நக்கிய பைபிள் மாமா வேணு ஆகியோர் மூல காரணம். திருமங்கை மன்னன் பாசுரம் பாடும் போது, சடலம் போர்த்தப் படுவது போல பெருமாள் துணியால் மூடப்பட்டு, இஸ்லாமியர்கள் மெக்காவில் வல இடமாக (சுடு காட்டில் ப்ரேத சமஸ்காரம் போல அப்ரதக்ஷிணமாக) வரதரரை தூக்கிச் சென்ற புறம் போக்கு நாய்களை தண்டிக்காத பெருமாள் சொரியான் சக்களத்தன் ஈனமணியை தண்டிச்சாராம்... ஆண்டாள் ப்ரச்சனையின் போது சைவ வைணவ ஒற்றுமை அதிகமாகவே வெளிப்பட்டது... அடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்தின் போது சிவ விஷ்ணு பேத அபஸ்வரம் விகாரமாக வெளியே தெரிந்து...  இன்று வைணவத்துக்கு உள்ளேயே வட / தென் கலை போர். தினமும் சந்தியாவந்தனம் (ஒரு வேளையாவது) செய்து விஷ்ணு வழிபாட்டை தவறாது செய்து வரும் எனக்கே அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்போது இல்லவே இல்லை.

ஒரு முக்கிய சந்தேகம் கலந்த செய்தி...

மாற்று மதத்தினருக்கு பயந்தே அத்திவரதர் ஜலத்தில் மறைக்கப்பட்டார்...  இனி நிரந்தரமாக வெளியில் ப்ரதிஷ்டை செய்து விடலாம்... சரிதானே...

பட்டர்களுக்கும் / அற வேசி அரசுத்துறை க்கும் நல்ல வருமானம் வருமே!!!

கூட்டத்தை கட்டுப்படுத்த திட்டமிட்டு இப்படி ப்ரசாரம் செய்கிறார்களோ என்று நான் எண்ணுகிறேன்... காரணம்... திருநின்றவூர் ராமர், கோழிகுத்தி வான்முட்டி பெருமாள், வந்தவாசி பொன்னூர் மச்சாவதார பெருமாள் கோவில்களில் எல்லாம் இன்று விளக்கு எரிக்கக் கூட வழி இல்லை...

பழகப் பழக பாலும் புளிக்கும்... இப்போது திரண்டுள்ள கூட்டம்... விளம்பர /செல்ஃபி மோக கூட்டம். பெருமாள் அருள் பாலிக்க... பொருள் பாலிக்க அல்ல... கடவுளை காட்சிப் பொருளாக்கிய காசுக்கு நடத்நப்படும் கூத்து இது. அத்திவரதர் : 5  24 நாள் சயன கோலம்; 24 நாள் நின்ற கோலம்
இப்ப செய்தி உலாவுது... பிண்ணம் ஆகி உள்ளதால் நாளை துவங்க இருந்த நின்ற கோலம் ஆகஸ்ட் 1 முதல் துவங்குமாம்!! இல்லை இல்லை கடைசி 10 நாள் மட்டுமாம்... சேதமாகி விட்டதால் தான் நீரில் விஸர்ஜனம் செய்யப்பட்டதா?! அல்லது நிரந்தர மறு ப்ரதிஷ்டை கோரிக்கையை நிராகரிக்க புதிய பொய்யா?! பிண்ணம் ஆகிவிட்ட வரதரை எதற்காக 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளிக் கொண்டு வந்து ஆராதிக்க வேண்டும்?!
வரதரே நின்ற கோலம்தானே... அவருக்கு ஏன் சயன கோலம்?!
பிண்ணம், 40 வருடம், சயண கோலம் / நின்ற கோல சடங்குகள் / விதிகள் யாரால் எப்போது எந்த அடிப்படையில் வகுக்கப்பட்டது?! அத்திவரதர் : 6
அத்தி மரத்தால் உருவாக்கப்பட்ட திருமேனி... இந்த வரிசையில் இப்போது, கோழி குத்தி வான் முட்டி பெருமாள், திருநின்றவூர் ராமர், வந்தவாசி பொன்னூர் மச்சாவதார பெருமாள் வந்துள்ளார்கள். இதே போல ஒரு தகவல் ... திருவெள்ளரை (ஆதி திருவரங்கம்) செந்தாமரை கண்ணன் ... சுமார் 12+ அடி உயரம்... 100 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர்... இப்போது உள்ள மூலவர்... இலுப்பை மரத்தால் உருவாக்கப் பட்டவர்... எவ்வளவு பெரிய மரம் தேடிக் கொண்டு வந்து உருவாக்கி இருப்பார்கள்... பிரமிப்பாக உள்ளது... எழுத துவங்கிவிடவில்லை... நிறைய தகவல் சேகரித்து / பெரியவர்களுடன் விவாதித்து / தகவல் குறிப்பு எடுத்துக் கொண்டே எழுதுகிறேன். அத்திவரதர் 7... இந்த தொடரில் சில கூடுதல் தகவல்கள்...

மூலவர் திருமேனி பற்றி...

கடு சக்கரா... ஆம், இதுவும் ஒரு விதமான மூலிகை தயாரிப்பு... 1000 கணக்கில் சாளக்ராமங்களை உள்ளே வைத்து மூலிகை கலவை கொண்டு உருவாக்கப்பட்ட திருமேனி... அதன் மீது தங்க கவசம் வைத்து உருவாக்கப்பட்டதே... திருவனந்தபுரம் அனந்த பத்மநாபர், திருவட்டாறு ஆதி கேசவர்... (பின்னவர் களவாடப்பட்டார்) அத்திவரதர் 8

திருக்கோவிலூர்... திருவிக்ரமஸ்வாமி... உலகளந்தபெருமாள்...
மரத்திருமேனி... சாத்துப்படி தைலக்காப்பு... தைலக் காப்பிலும் வித்யாசம் உண்டு... மரம் / சுதை / தயாரிப்பு கலவை அனுசரித்து... புணுகு /சாம்பிராணி தைலம் என நிறைய வித்யாசங்கள்... ஸ்ரீ ரங்கத்தில் சுதையால் ஆன அரங்கனுக்கு புணுகுத் தைலம்... திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாளுக்கு சாம்பிராணி தைலம்... அத்திவரதர் 9
சிவாலயங்களில் பெரும்பாலும் கல் திருமேனிதான்... விஷ்ணு ஆலயங்களில் தான் மூலவர் உருவாக்கப்பட்ட விதம் நிறைய வித்யாசம் வகைகள்... வர்ண கலாபம்... என்ற ஒரு வகை... (களபம் என்றால் சந்தனம்)
வர்ண கலாபமும் சுதை தான்... ஆனால் மேல் பூச்சு தைலம் அல்ல... இயற்கை மூலிகை வர்ணம்... திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள்
ஸ்ரீ வில்லிப் புத்தூர் வட பத்ர சாயி  அத்திவரதர் 10 வரதர்  பற்றிய விவாதம் துவங்கி வேறு மரங்கள், சுதை, கல் சக்கரா, வர்ண கலாபம் என நீட்டி... மூலவர் / தைலக்காப்பு என பயனித்து... முருங்கை மரத்தால் ஆன ஒரு தெய்வத் திருமேனி பற்றி சொல்லட்டுமா... இருங்க... அதுக்கு முன்பாக... திருக்கண்ணமங்கை பக்தவத்ஸலன் பற்றி... ஆம், தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய கல் திருமேனி பெருமாள் (16 அடி உயரம்) மற்றும் தாயார்கள் இருவர்... வருடம் ஒரே ஒரு திருமஞ்சனம் மட்டுமே... ஆடி அமாவாசை கழிந்த கேட்டை நக்ஷத்திரத்து அன்று... ஜேஷ்டாபிஷேகம் என்று பெயர்...
குறைந்த பட்சம் 400 லிட்டருக்கு மேல் நல்லெண்ணெய்.... எனத் துவங்கி... வித விதமான அபிஷேக த்ரவியங்கள்.... 10 - 12 மணி நேரத்துக்கு நீடிக்குமாம் அபிஷேகம்!!! இங்கு கருவறை உள்ளே இரு பெரிய துவாரங்கள் உண்டு ... அதில் தேனீக்களின் கூடு... தக்ஷிணாயனம் உத்திராயணம் என்று மாறி மாறி வலம் / இட மாடங்களில் கருவறை உள்ளேயே கூடு கட்டுமாம் தேனீக்கள். யாருக்கும் எந்த ஆபத்தும் விளைவிக்காது... (இப்போது இல்லை - களவாணி அரசின் அறமில்லா திருட்டுத்துறை யை நம்ப தேனீக்கள் கூட தயாரில்லை). திருவெள்ளறையில் கூட இரு வாசல்கள் உண்டு... நீங்களே விபரம் தேடுங்கள்... ப்ரயோக சக்கரம் பற்றி... எழுதிவிட்டு பின் முருங்கை மர திருமேனி குறித்து...

கருத்துகள் இல்லை: