வியாழன், 5 செப்டம்பர், 2019

முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்: முதலாம் பாகம்

நாரம் என்றால் தீர்த்தம் என்று சொல்லப் போக தீர்த்தம் கொண்டு தர்ப்பணம் செய்த நாரதரின் கதையைச் சொன்னேன். தீர்த்தத்தை எவனொருவன் படுக்கையாக - தன் இருப்பிடமாக கொண்டானோ அவனுக்கு நாராயணன் என்று பெயர்.

ஒருவர் சமத்காரமாக பகவானை ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறார் - சிலேடை என்று அதைச் சொல்வது.

பூர்வ காலத்திலே பழையது சாப்பிடுவது என்றொரு வழக்கம். சாதம் சேர்ந்து போயிருந்தால் அதை எடுத்து ஜலத்திலே போட்டுடறது, விடியற்காலையிலே அந்த சாதத்தை எடுத்துப் பிழிந்து போட்டுவிட்டு, அந்த ஜலத்திலே உப்பு சேர்த்து ஒருவர் சாப்பிட்டாரானால் காலை வெயிலைத் தாங்கக்கூடிய சக்தி உண்டாகிறது. குறிப்பா விவசாயிகள் வயல் வேலைக்குப் போகிறவர்கள் இப்படிச் செய்வதுண்டு. (இந்த விவசாயிகளுக்கு போக பாக்யங்களைத் தரச்சொல்லி கேட்கிற ஒரு பிரார்த்தனை கூட பிராதஹ்கால சந்தியாவந்தனத்திலே உண்டு.)

சாதத்துத் தீர்தத்தைச் சாப்பிட்டால் வெயிலைத் தாங்கற சக்தி வரும். இது பழையது சாப்பிட்ட உடம்பு. ஒண்ணும் பண்ணிக்க முடியாது என்று கூடச் சொல்வார்கள்.

இந்த பழையதும் பகவானும் ஒண்ணு என்றார் ஒருத்தர்.

இது பழையது; அவனும் புராண புருஷன்.

இது எங்கே படுத்திருக்கிறது? ராத்திரி முழுதும் சாதம் ஜலட்திலே படுத்திருக்கிறது. அவனும் ஜலத்திலே தானே படுத்துக் கொண்டிருக்கிறான்! அதனாலே "ஜலே சயானம்'

'என்னை உள்ளபடி உணர்கிறவர்கள் ஒரு சிலரே' என்றான் பரமாத்மா கீதையிலே. பழையதின் பெருமையும் அதை அனுபவித்துணர்ந்த சிலருக்கே தெரியும்.

பழையதை எப்போ சாப்பிட வேண்டும்? அதிகாலையிலே, எம்பெருமானையும் அதி காலையிலேயே தியானம் பண்ண வேண்டும்.

பழைய சாதத்தைப் போல பரமாத்மாவும் நாரங்கன் சூழ இருக்கிறான்! எனவே அவன் நாராயணன்.

கருத்துகள் இல்லை: