வியாழன், 5 செப்டம்பர், 2019

நற் சிந்தனைகள் கடவுளின் பக்தர்களுக்குப் பணிபுரிவதால் தான் கடவுளை அடைய முடியும் என்பதை உங்கள் இருதயத்தில் நிருத்திக் கொள்ளவேண்டும். ஸ்ரீ ஜகத் குரு பதரி சங்கராசார்ய ஸ்வாமிகள்
-------------------------
நற் சிந்தனைகள்: எல்லையற்ற பொறுமையும்,விடாமுயற்சியும் உள்ளவர்களால் மட்டும் ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கமுடியும்.
ஜபித்ததோடு,ராமபிரான் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும்.
ஸ்ரீ ஸ்ரீ பெரியவா மல்லிகார்ஜுன ஸ்வாமிகள்
-------------------------
நற் சிந்தனைகள்: இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டது தெய்வீக அருளைப் பெறுவதற்காகவே.அதனால் இந்த உடல் நன்கு பராமரிக்கப் படவேண்டும்.சுத்தமாகவும்,தூய்மையாகவும்,அழுக்கு, வியாதி, வருத்தம், தோல்வி மனப்பான்மை இவற்றால் பாதிக்கப்படாமலும் உடல் பாதுகாக்கப்பட வேண்டும்.

நீங்கள் உடலல்ல.உடல் என்பது ஒன்பது துவாரங்களடங்கிய அழியும் பொருளாகும்.ஆகவே இந்திரிய சுகத்தை புலனின்ப நுகர்ச்சியை நாடிச்செல்லாதீர்கள்.

கடவுளை நோக்கி மணதை திருப்புங்கள்.அப்போது மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டு விடும்.பிறகு உங்கள் மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.
ஸ்ரீ ஸ்ரீ பெரியவா மல்லிகார்ஜுன ஸ்வாமிகள்
-------------------------
பசி தீர்த்த காளி!

சிவன் கோயிலின் காவல் தெய்வம் க்ஷேத்திர பாலகர். கோவிலைக் காப்பவர் என்பது இதன் பொருள். இவர் காளியின் கோபம் தணிக்க குழந்தை வடிவில் வந்தார். சாகா வரம் பெற்ற தானகாசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். அசுரனை அழித்து தேவர்களைக் காக்கும் பொறுப்பை சிவன் காளியிடம் ஒப்படைத்தார். காளியும் அசுரனைக் கொன்றாள். அதன் பிறகும் அவளது ஆவேசம் தீரவில்லை. உயிர்கள் அனைத்தும் காளியைக் கண்டு அஞ்சின. அப்போது சிவனின் கட்டளைப்படி மாய பாலகன் ஒருவன் காளியின் முன் குழந்தை வடிவில் பசியால் அழத் தொடங்கினான். அதைக் கேட்ட காளிக்கு தாய்மை குணம் மலர்ந்தது. மார்போடு அணைத்துப் பாலூட்டினாள். பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்துக் குடித்தது அக்குழந்தை. அதன் பின் காளி சாந்தமானாள். அக்குழந்தையே க்ஷேத்திர பாலகர் என்னும் பெயர் பெற்றது. இவரே பிற்காலத்தில் பைரவராக மாறியதாக செய்தி உண்டு. லிங்கபுராணத்தில் இந்தத் தகவல் இருக்கிறது.
--------------------------------------------------
ஸ்மரணாத் அருணாசலம்

ஒரு கிராமத்தில் முகாமை முடித்து கொண்டு அடுத்த முகாமுக்கு போய் கொண்டிருந்தார்கள் பெரியவா. வழியில் ஒரு பிச்சைகாரர் வந்தான். தொலைவில் இருந்து பார்த்த போதே இவர் ஒரு சாமியார் ரொம்ப பேர் கூட வருகிறார்கள். நல்ல சில்லறை தேறும் என்று எண்ணியிருப்பான்.
அருகில் வந்ததும் அண்ணாமலைக்கு அரோஹரா' என்று கூவிக்கொண்டே பெரியவா பாதங்களில் விழுந்தான்.
பெரியவாள் உடன் வந்தவர்களை திரும்பி பார்த்தார்கள். இவன் நமக்கு ரொம்ப உபகாரம் செய்து இருக்கிறான்.

இவனென்ன உபகாரம் செய்தான்?

'ஸ்மரணாத் அருணாசலம் என்று சொல்லுவார்கள். அருணாச்சலேஸ்வரரை நினைத்தாலே போதுமாம் ரொம்ப புண்ணியம் இவன் நமக்கெல்லாம் அருணாச்சலேஸ்வரரை ஞாபகபடுத்தி உபகாரம் செய்திருக்கிறான். பிச்சைகாரன் இன்னும் நின்று கொண்டு இருந்தான். பத்து பைசா கூட தேறவில்லை. பெரியவா அவனை பார்த்து புன்னகை செய்தார்கள்.
இன்னிக்கு எங்கேயும் பிச்சைக்கு போக வேண்டாம். அப்போ சாப்பாட்டுக்கு இன்னிக்கு வழி?

மடத்திலேயே சாப்பிடலாம் அப்புறம் வெளியூர் போ பெரியவாள் பக்தர்களை பார்த்து சொன்னார்கள். எந்தரோ மகானுபாவுலு எங்கெங்கெல்லாமோ எத்தனையோ மகான்கள், சித்தர்கள், பக்தர்கள் இருக்கிறார்கள். இந்த பண்டாரத்தை பாருங்கள் நாளை பற்றி கவலை படுவதில்லை. அன்றன்று கிடைக்கும் பிக்ஷையில் காலம் தள்ளுகிறான். இவனுக்கு உள்ள ஞானம் கூட நமக்கு வருவதில்லை. ஒரு பண்டார  பிச்சைக்காரனிடம் கூட ஈஸ்வரனை பார்த்தார்கள் பெரியவா. உடன் வந்து கொண்டிருந்த ஒரு வித்வான் சொன்னார், ஈஸ்வரனே அவதாரம் செய்துவந்தால் கூட நாம் அவரை வெறும் மனுஷனாய் பார்க்கிறோம்.

பெரியவாளை தான் குறிப்பிட்டாரோ? தெய்வம் தெய்வ வடிவிலேயே வந்தாலும் நம்பாத பாமர மக்கள் நாம் என்னத்தை சொல்ல?

கருத்துகள் இல்லை: