வியாழன், 5 செப்டம்பர், 2019

சில தானங்கள் பற்றி விபரம்...

யமதர்மருக்கும் ப்ராமணணுக்கும் நடந்த உரையாடல் ;

ஆதியில் யமுனை உற்பத்தியாகும் களிந்த மலையின் கீழுள்ள மத்தியதேசத்தில் பர்ணசாலை என்ற பெயர் பெற்ற பெரிய பிராம்மண கிராமம் இருந்தது. வித்வான்கள் நிரம்பி இருந்தனர்.

அப்போது யமன் சிவந்த கண்களும் நெறித்த ரோமங்களும் காக்கை போன்ற கணுக்கால் கண் மூக்குள்ளவனுமான் ஒரு கிங்கரனை பார்த்து ,நீ! பர்ணசாலை ப்ராமண கிராமத்திற்க்கு போ; அங்கு சாந்தியுள்ளவனும் வித்துவானும் அகஸ்திய கோத்திரத்தானுமாகிய சர்மி என்ற பெயருள்ள ஒரு ப்ராமணனை அழைத்து வா; அவன் பக்கத்தில் அவன் கோத்திரமாகவே இருக்கும் மற்றொரு ப்ராமணனை அழைத்து வராதே. அவனும் இவனை போன்ற குணவான் தான். ஆனாலும் புத்திர ஸ்ந்தானத்திலும் ஒழுக்கத்தில் இவன் மேலானவனாததால் நான் குறிப்பிட்டவனையே அழைத்து வா ! அவனுக்கு நான் பூஜை செய்யவேண்டும்' என்று சொன்னார்.

ஆனால்,கிங்கரன் யாரை யமன் வேண்டாமென்றரோ அவனையே பிடித்து அழைத்து வந்துவிட்டான்.  யமன் மிகுந்த சக்தியுள்ளவனாததால் அவரையே இருத்தி பூஜை செய்து அவரை கொண்டுபோய் விட சொன்னபோது , அந்த ப்ராமணன் தர்மராஜனை பார்த்து ,ஓ! தர்மந்தவறாதவனே, நான் என் ஆயுள் காலத்தில் மிச்சமுள்ள காலத்தை இங்கேயே கழிப்பேன் என்றான்.

அதற்கு யமன், நான் இங்கே காலவிதியை எவ்வகையிலும் அறிய மாட்டேன்.எவன் தர்மத்தை செய்கிறானோ அவனை மட்டுமே அறிவேன் .ஆதலால் நீ இருப்பிடம் செல்வாயாக ,அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவாயாக என கேட்க, அதற்க்கு ப்ராமணன் , பரிசுத்தமான தானந்தான் மிக சிறந்த புண்ணியமாகும், அதை எனக்கு சொல் என்றான்.

யமன் , ப்ரம்மரிஷியே! தானத்தை பற்றி உயர்ந்த விதியை சொல்கிறேன் ; கேள். இவ்வுலகத்தில் திலதானம் மிகச்சிறந்தது. அழிவில்லாத புண்ணியம்.எள்ளானது வேண்டியவற்றை நிறைவேற்றுகிறது. அதனாலேயே ஸ்ராத்ததிற்க்கு எள் சிலாக்கியமானதாகும். அதுதான் தனக்குயர்வில்லாத தானம். ப்ராமணனுக்கு சாஸ்திர முறையோடு வைகாசி பவுர்ணமியில் தில தானம் செய் என்றார்.

கிருகத்தில் எப்போதும் நன்மையை வேண்டுகிறவர்கள் எள்ளை உண்பிக்க வேண்டும்.உடம்பில் தடவிகொள்ள வேண்டும் அப்படியே தண்ணீரும் கொடுக்கவேணும் . ஆசமனமும் செய்யவேண்டும் என்பதும் நிச்சயம். ஓடைகளையும் கிணறுகளையும் வெட்டுவிக்க வேண்டும். ஜலம் எப்போதும் கொடுக்க வேண்டும்.

ப்ராமணோத்தமரே! நித்தியமாக தண்ணீர் கொடுப்பதற்க்காக தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும். உண்டவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது முக்கியமான காரியம்.வஸ்திர தானம் செய்பவன் அதில் உள்ள நூலளவு வருச காலமும் தீபதானம் செய்பவன் அது எரியும் நிமிஷங்களளவு வருஷகாலமும் கோதானம் செய்பவன் அதன் ரோமங்கள் உள்ள வருஷகாலமும் தண்ணீர் கொடுப்பவன் அந்த தண்ணீர் துளிகள் வருஷ காலமும் ஸ்வர்க ஸுகத்தை அனுபவிப்பர். ஆதலால் நீயும் இந்த தானங்களை செய்ய கடவாய் என்று கூறி அவனை கொண்டு போய் விட்டு முதலில் சொன்ன சர்மி எந்த ப்ராமணனை கூட்டி வரச்செய்தார்.

சர்மி என்ற ப்ராமணனுக்கும் அதே போல பூஜை செய்து அதே போல தான விபரங்களை கூறி அனுப்பி வைத்தார்.

ஆதலால் பித்ருக்களுக்கு ப்ரீதி உண்டாக்க கண்ணுக்கினிய தீபதானம் செய்யவேண்டும். ரத்ன தானமும் மிகச்சிறந்த புண்ணியம் என்று சொல்லப்படுகிறது. ரத்ன தானமானது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் அதுவே அழியாத புண்ணியமாக நிலைக்கிறது. அதே போல இந்த தானங்களை செய்வதற்க்காக திருமணம் செய்து புத்திர லாபத்தை பெற வேண்டும். புத்திர லாபமானது எல்லா லாபங்களிலும் சிறந்தது.

ஆக ,தான் சம்பாரிக்கும் பொருளில் முடிந்த அளவு (யதா சக்தி) தானம் கொடுத்து நன்மை அடையுங்கள். குடுக்காத தானம் அவரவர்களுக்கு பெரும் தீமையை செய்யும் .

ராம ராம ராம

#மஹாபாரதம்
#தானம்
#யமன்
#ப்ராமணன்
#தான_சிறப்பு
#திலதானம்
#எள்தானம்
#தீபதானம்
#தண்ணீர்_தானம்
#கோதானம்
#ரத்னதானம்

கருத்துகள் இல்லை: