ஞாயிறு, 24 மே, 2020

#சோகத்தூர்_யோகந்ருஸிம்மர்_மஹாத்மியம்

வந்தவாசியிலிருந்து சுமார் 5 கி.மீ.தொலைவில் உள்ளது சோகத்தூர் என்னும் அழகிய வயல் வெளி நிரம்பிய சிற்றூர். பல மஹான்கள் இத்தலத்தில் அவதரித்துள்ளனர்.

இங்குள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ந்ருஸிம்மர், சோளிங்கரில் உள்ளது போன்று உன்னத யோக நிலையில் அமர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்..தாயார் ஸ்ரீ அமிர்தவல்லி..

மிகவும் வரப்ப்ரஸாதியான இப்பெருமாள் ப்ரதி மாத ஸ்வாதி நக்ஷ்த்திரத்தில் யாகம் கண்டருளி மிகவும் சாந்தமான நிலையில் பக்தர்களின் கோரிக்கைகளை , "நாளயென்பது நரசிம்மனுக்கில்லை" என்ற வாக்கின்படி நிறைவேற்றி வருகிறார் என்பது இத்தலத்தின் பெருமையாகும்

ஆவணியாபுரம், இஞ்சிமேடு, சோகத்தூர் இம்மூன்றும் அருகருகே உள்ள ந்ருஸிம்ம தலங்கள்..இம்மூன்று ந்ருஸிம்மர்களையும் ஒரே நாளில் சேவித்தல் விசேஷமானது என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்..

இத்திருக்கோவிலில் ஸ்ரீ ராமபிரானும்  பட்டாபிஷேக திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

தொடர்புக்கு ஸ்ரீ சொளந்திரராஜ ஐயங்கார் 8754579689

கோவில் பட்டர்: 8248564734

கருத்துகள் இல்லை: