திங்கள், 21 செப்டம்பர், 2020

ராகு காலம்

ராகு காலம்!
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
எல்லாச் செயல்களையும் நல்ல நேரம் பார்த்தே செய்வார்கள். அப்போதுதான் நன்மைகளுடன் நல்வாழ்வு பிறக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக சித்தயோகம், அமிர்தயோகம் போன்றவற்றை நல்ல யோகமான நேரமாகச் சொல்வார்கள். “”பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என பழமொழி சொல்லி புதன்கிழமைகளில் நல்ல காரியங்களைச் செய்வார்கள். மங்கள வாரம், சுக்கிர வாரம்… இப்படி ஒரு கிழமைக்கும் ஒரு வாக்கு உண்டு!

 இப்படி எல்லா நேரத்தையும் புகழ்கிறவர்கள் ராகு காலத்தை நினைத்தால் பயப்படுவார்கள்!  ஆனால், உண்மையில் ராகு காலம்தான் சிறந்த பரிகார காலம். வருத்தப்படுபவர்களுக்கு வளம் தரும் கற்பக விருட்சமாகவும், இருட்டில் இருப்பவர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாகவும், துக்கத்தில் இருப்பவர்களுக்குத் துணையாகவும் இருப்பது இந்தக் காலம்தான்!

ராகு காலத்தின் பெருமையைப் புரிந்து கொள்பவர்கள் அறிவாளியாக இருந்தால், அந்தக் காலத்தைத் தனக்கு லாபம் தரும் விதத்தில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

ராகு காலத்தை “அமிர்த காலம்’ என்று சொல்வார்கள். அமிர்தம் எப்படி அதை அருந்தியவர்களுக்குப் பூரண ஆயுளைத் தருகிறதோ, அதுபோல ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகள் புண்ணியத்தைப் பெருக்கிக் கொடுக்கின்றன. ராகுவைப் பற்றிய ஆன்மிகத் தகவல்களை நினைப்பதே புண்ணியம் என்று சொல்லப்படுகிறது.

ராகு காலத்தில் பூஜை செய்யலாமா? அதிலும் குறிப்பாக எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றலாமா? என்றெல்லாம் நிறையப் பேருக்குச் சந்தேகம் இருக்கும்.

 ஹோமங்கள் பற்றிய எல்லா விஷயங்களும் வேத நூல்களில் இருந்தாலும் பரிகார பூஜைகள் பற்றிய தகவல்கள் பழமையான ஜோதிட நூல்களிலேயே உள்ளன.

 ராகு காலத்தில் எல்லா பூஜைகளையும் செய்ய முடியாது. பரிகார பூஜைகளை மட்டும்தான் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். ராகுகாலம் சிறந்த பரிகார காலம் என்று அதில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ராகு காலம் நல்ல நேரமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கஷ்டத்தில் இருந்துகொண்டு பரிகாரம் தேட நினைப்பவர்களுக்கு ராகு காலம் மிக உகந்த நேரம்!

சத்ரு உபாதைகள் தீர்வதற்கு எலுமிச்சம்பழம் உகந்தது. துர்க்கைக்கு இந்தப் பழம் மிகவும் விசேஷமானது. துர்க்கைக்கு இதை மாலையாகவும் சாத்தலாம். எலுமிச்சம் பழத்தில் விளக்கு ஏற்றும் பழக்கமும் காலங்காலமாக இருக்கிறது. திருவாரூரில் ஸ்ரீதியாகராஜர் கோயிலினுள் இருக்கும் ராகுகால துர்க்கைக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றும் பழக்கம் 1000 ஆண்டுகளாக இருந்து வருகிறது!

 ராகுவுக்கு உடலில் தான் விஷம். ஆனால் நாக்கில் அமிர்தம் இருக்கறது!


கருத்துகள் இல்லை: