செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

கிருஷ்ணா அங்காரக சதுர்தசி

கிருஷ்ணா அங்காரக சதுர்தசி இது கிருஷ்ண பக்ஷம், சதுர்தசி திதி செவ்வாய் =அங்காரகன். ஆகிய மூன்றும் ஒன்று சேரும் நாள்.

இந்த நாள் சூர்ய கிரஹணத்திற்கு சமமானது. இன்று சமுத்ர ஸ்நானம் செய்வது

அனைத்து பாபங்களையும் போக்கும். வீட்டிலாவது காலையில் ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி நெற்றிக்கு இட்டுக்கொண்டு சுக்லாம்பரதரம்+ஓம்பூஹு: மமோபாத்த ஸமஸ்த துரிதயக்க்ஷயத்வார ஶ்ரீ

பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் க்ருஷ்ண அங்காரக புண்ய காலே யம தர்பணம் கரிஷ்யே என சங்கல்பம் செய்து கொண்டு கீழ் கண்ட 14 தர்பணங்கள் செய்வதால் அனைத்து பாபங்களும் யம பயமும் விலகி நன்மை உண்டாகும்.

உபவீதி. பூணல் எப்போதும் போல் அப்படியே இருக்கட்டும். எள்ளு அக்ஷதை எதுவும் வேண்டாம். பஞ்சாத்ர உத்ரிணியால் தண்ணீர் எடுத்து அர்க்யம் விட்டால் போதும்.விரல் நுனி வழியாக தண்ணிர் தாம்பாளத்தில் விட்டால் போதும்.

1. யமம் தர்பயாமி.
2. தர்மராஜம் தர்பயாமி.
3. ம்ருத்யும் தர்பயாமி.
4. அந்தகம் தர்பயாமி.
 5. வைவஸ்வதம் தர்பயாமி.
 6. காலம் தர்பயாமி.
7. சர்வபூத க்ஷயம் தர்பயாமி.
8. ஒளதும்பரம் தர்பயாமி. 9. தத்நம் தர்பயாமி.10.நீலம்
தர்பயாமி.
 11. பரமேஷ்டிநம் தர்பயாமி.
12. வ்ருகோதரம் தர்பயாமி.
13. சித்ரம் தர்பயாமி.
 14 சித்ர குப்தம் தர்பயாமி.

பிறகு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி தெற்கு திசை நோக்கி நின்று கொண்டு யம தர்ம ராஜாவை ப்ரார்தித்து கொள்ள வேண்டும்..

யமோ நிஹந்தா பித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோ தண்ட தரஸ்ச கால;
ப்ரேதாதி போதத்த க்ருதாந்தகாரீ க்ருதாந்த ஏதத் தசக்ருஜ் ஜபந்தி.

நீல பர்வத ஸங்காச ருத்ர கோப ஸமுத்பவ காலதண்டதர ஶ்ரீமன் வைவஸ்வத நமோஸ்துதே.

கருப்பு மலை போன்ற உருவத்துடன் காக்ஷி அளிப்பவரும், சிவனின் கோபத்தால் தோன்றியவரும், கால தண்டத்தை கையில் தரித்திருப்பவரும் வைவஸ்வதனின்=(ஸூரியனின்) புத்ரருமான ஹே ஶ்ரீ மன் யம தர்ம ராஜ உனக்கு நமஸ்காரம்…

இதனால் அகால மரணம் சம்பவிக்காது. பாபங்கள் விலகும். யம பயம் விலகும். அனைத்து வியாதிகளும் விலகும்.

கிருஷ்ணா அங்காரக சதுற்தசி  இந்த நாள் சூர்ய கிரஹணத்திற்கு சமமானது.
பகலில் கணபதி, பஞ்சாக்ஷரம்,
அஷ்டாக்ஷரம் முதலிய ஜபங்களும்,
அஸ்தமித்த பிறகு சாக்த ஜபங்கள் மிகவும் விசேஷம்.

ஸ்ரீவித்யா உபாஸகர்களுக்கு இந்த தினம் வரப்ரஸாதம்.மந்தர ஸித்திக்கு உகந்த நாள் சூர்ய க்ரஹண்திற்கு சமம்.

கருத்துகள் இல்லை: