செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ஓம் வள்ளி தேவஸேனா ஸமேத சுப்பிரமணியனே போற்றி

ஓம் வள்ளி தேவஸேனா ஸமேத சுப்பிரமணியனே போற்றி

சகல சௌபாக்கியங்களும் தரும் முருகபெருமானின்  16  நாமங்கள்.

அனைத்தையும் அறிந்தவனும், எங்கும் நிறைந்தவனுமான ஓம் ஸுப்ரஹ்மண்யனை எப்போதும் அவர் திருபாதரவிந்தங்களை மனசில் நிறுத்தி நமஸ்கரித்து அவரை 16 நாமங்களால் துதிக்கின்றேன்.




1.ஜ்ஞானச'க்த்யாத்மா
( ஜ்ஞானம் என்னும் சக்தியை ஆன்மாவாக கொண்டவர்)
2. ஸ்கந்த:
( சத்தருக்களை அழிப்பவன்)
3. அக்னிபூ:
( அக்னியில் தோன்றியவர்)
4. பாஹுலேய:
( விரிந்த தோள்களை உடையவர்.)
5.காங்கேய:
( கங்கை நதியில் விடப்பட்டவர்)
6.ச'ரவணோத்பவ:
(சரவணப் பொய்கையில் சேர்க்கப்பட்டவர்)
7.கார்த்திகேய:
( கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவன்)
8. குமார:
( குழந்தையாய் இருப்பவர்)
9.ஷண்முக:
( ஆறுமுகம் உடையவர்)
10.குக்குடத்வஜ:
( சேவலை கொடியாக கொண்டவர்)
11.ச'க்திதர:
( சக்தியின் வேலை கரங்களில் ஏந்தியவர்)
12.குஹ:
( பக்தர்களின் இதயமென்னும் குகையில் வாழ்வர்)
13.ப்ரஹ்மசாரி:
( வேதஸ்வரூபன்)
14. ஷாண்மாதுர:
( ஆறு கார்த்திகை பெண்களைத் தாயாக அடைந்தவர்)
15. க்ரௌஞ்சபித்:
( கிரௌஞ்ச மலையாக நின்ற அசுரனை வேல் கொண்டு அழித்தவர்)
16. சி'கிவாஹன:
( மயிலை வாஹனமாக உடையவர்)

இந்த 16 நாமங்களிலேயே ( வள்ளி தேவஸேனா கல்யாணம் தவிர) ஸ்கந்த புராணத்திலுள்ள அனைத்து லீலைகளும் வந்துவிட்டதாகப் புரிகிறது. ஆக இந்த 16 நாமங்களை குட்டி கந்தபுராணம் என்று சொல்லலாம்.
இந்ந 16 நாமங்களை பக்தியுடன் கந்தனின் திருபாதரவிந்தங்களை மனசார நினைத்து பாராயணம் செய்தால் கந்தபுராணத்தைப் பாராயணம் செய்த சகலபலன்களும் கிடைக்கும்.

ஓம் சுப்பரமண்ணியம்

என் இனிய  சிவகாலை வணக்கம்🙏
ஓம் மஹாசாஸ்தா தாஸன்
பா. சிவகணேசன்
ஓம் மஹாசாஸ்த்ரு பரபிர்ம்ம ஸ்தானம்
காடந்தேத்தி

கருத்துகள் இல்லை: