புதன், 22 ஜூலை, 2020

#சிவ_சிவ

அருள்மிகு விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில், விருத்தாசலம்.

ஆராய்சியாளர்களால்
3 1/2 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என கணிக்கப்பட்ட தலம்.
3000 ஆண்டுகள் பழமையான வன்னிமரத்தை தலவிருட்சமாக கொண்ட தலம்.
பிரளயகாலத்திலும் அழியாத தலம்.
நடுநாட்டின் 22 சிவதிருத்தலங்களில் 9வது தலம்.
சைவ சமயத்தின் 28 ஆகமங்களுக்கும் 28 லிங்கங்களை முருகபெருமானே நிலைநிறுத்தியதாக அறியப்படும் ஒரே தலம்.
இல்லற வாழ்விலும் ஈசனை இடைவிடாது வழிபட்ட நாதசர்மாவும் அனவர்த்தியும் சிவகணங்களாகவே ஆன தலம்.
சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை வேண்டி பெற்ற பன்னீராயிரம் பொற்காசுகளை மணிமுத்தாற்றில் இட்ட தலம். (பின்னர், திருஆரூர் கமலாயகுளத்தில் எடுத்தார்).
உலகபடைப்பில் சிவபெருமானே மலையாக தோன்றியதால் பழமலைநாதர் என பெயர் பெற்ற தலம்.


பஞ்சாட்சர ஐந்தெழுத்து மந்திரத்தின்படி இத்திருகோவிலில் அனைத்தும் ஐந்து ஐந்தாக இருப்பது வேறெங்கும் காண இயலாத சிறப்பாகும்.

பதிவின் முடிவில் நமக்கு மிகவும் தேவையான ஐந்தும் உள்ளது ஐயா.....

ஐந்து மூர்த்தங்கள்: 
விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்

ஈசனின் ஐந்து திருநாமங்கள்: விருத்தகிரீஸ்வரர்
பழமலைநாதர்
விருத்தாசலேஸ்வரர்
முதுகுன்றீஸ்வரர்
விருத்தகிரிநாதர்

ஐந்து விநாயகர்கள்:
ஆழத்து விநாயகர்
மாற்றுரைத்த விநாயகர் முப்பிள்ளையார்
தசபுஜ கணபதி
வல்லப கணபதி

இறைவனை தரிசனம் கண்ட ஐவர்:
உரோமச முனிவர்
விபசித்து முனிவர்
குமார தேவர்
நாத சர்மா
அனவர்த்தினி

ஐந்து கோபுரங்கள்:
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்

ஐந்து பிரகாரங்கள்(திருச்சுற்று):
தேரோடும் திருச்சுற்று
கைலாய திருச்சுற்று
வன்னியடித் திருச்சுற்று
அறுபத்து மூவர் திருச்சுற்று பஞ்சவர்ணத் திருச்சுற்று

ஐந்து நந்திகள்: 
இந்திரநந்தி
வேதநந்தி
ஆத்மநந்தி
மால்விடைநந்தி
தர்மநந்தி

ஐந்து உள் மண்டபங்கள்:
அர்த்த மண்டபம்
இடைகழி மண்டபம்
தபன மண்டபம்
மகா மண்டபம்
இசை மண்டபம்.

ஐந்து வெளி மண்டபங்கள்: 
இருபது கால் மண்டபம் தீபாராதனை மண்டபம் நூற்றுக்கால் மண்டபம்
விபசித்து மண்டபம்
சித்திர மண்டபம்

ஐந்து வழிபாடுகள்: 
திருவனந்தல்
காலசந்தி
உச்சிகாலம்
சாயரட்சை
அர்த்த ஜாமம்

ஐந்து திருவிழாக்கள்:
வைகாசி வசந்த உற்சவம்
ஆனி திருமஞ்சனம்
ஆடிப்பூரம் திருக்கல்யாணம்
மார்கழி திருவாதிரை
மாசிமகம் 10நாள் பிரம்மோற்ஸவம்.

ஐந்து தேர்கள்:
விநாயகர் தேர்
முருகன் தேர்
பழமலை நாதர் தேர்
பெரியநாயகி தேர்
சண்டிகேஸ்வரர் தேர்

தலத்தின் ஐந்து பெயர்கள்: திருமுதுகுன்றம்
விருத்தகாசி
விருத்தாசலம்
நெற்குப்பை
முதுகிரி

பெருமானின் பம்பர் பரிசு:
இத்தலத்தில் பிறந்தால்,
வாழ்ந்தால், வழிபட்டால்,
நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட நமக்கு முக்தி நிச்சயமாம்.

எம்பெருமான் அருளால் தங்களை இத்தலத்தை நினைக்க வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
பெரும் பேறு பெற்றீர்கள் ஐயா !

கடைசியாக.......
இத்தலத்தை தரிசித்ததால் அடியேனுக்கு ஏதேனும் பலன் இருப்பின் அவை அனைத்தையும்  இப்பதிவை  படித்தோருக்கு பழமலைநாதர் மீது ஆணையாக மனதார அளிக்கிறேன்.

நன்றி

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை: