புதன், 22 ஜூலை, 2020

தெய்வத்துக்கு பிடித்த எட்டு புஷ்பங்கள் : --
அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் – இறைவனுக்கு பிடித்த எட்டு புஷ்பங்களில் முதன்மையாக அஹிம்சையே சொல்லப்பட்டிருக்கிறது. கொசுவாக இருக்கட்டும். மனிதனாக இருக்கட்டும்… எல்லாமே ஜந்துதான்.இன்னொரு ஜீவனை அழிக்க உரிமை கிடையாது. அஹிம்சை என்பது ரொம்ப முக்கியம்.
புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ – கடைபிடிப்பதிலேயே கஷ்டமானது இதுதான். ஐம்புலன்களையும் அடக்கிவிட்டு உள்ளன்போடு புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ: என்று சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கும் இறையருளே உதவும்.

சர்வ பூத தயா புஷ்பம் – பூத தயை என்றால் எல்லா விலங்குகளிடமும் தாவரங்களிடமும் அன்புடன் இருத்தல்என்று பொருள். மரங்களை வெட்டுவது பாவம் என்கிறது வேதம். தாவரங்களிடத்தும் நமக்கு தயை இருக்கவேண்டும் என்று பகவான் எதிர்பார்க்கிறார்.

க்ஷமா புஷ்பம் விசேஷத: – க்ஷமை என்றால் இரட்டையை பொறுத்துக்கொள்ளும் குணம். இரட்டை என்றால்?இரண்டு எல்லைகள் என்று பொருள். உஷ்ணம் – குளுமை; சுகம் – துக்கம்; லாபம் நஷ்டம்; எல்லாவற்றையும்சமமாக பாவிப்பது. பூமி மாதாவுக்கு க்ஷமா என்றொரு பெயர். ராமனுக்கு க்ஷமயா தரித்ரி என்று ஒரு வர்ணனை – பூமியைப்போல் பொறுமை காப்பவன் என்ற பொருள்.

சாந்தி புஷ்பம் – மனமது அடங்கி உள்ளம் பகவானிடம் கரைந்த நிலையில் எழும் அமைதியே புஷ்பம்.

தவம் புஷ்பம் – எம்பெருமானை எப்போதும் நினைத்து தவம் பண்ணுவதும் ஒரு புஷ்பம். தவம் என்றால் ஒன்றையேநினைத்து உருகுதல். அந்தியும் பகலும் நிரறாத கண்களால் பகவானுடைய திருக்கல்யாண குணத்தை நினைத்துநினைத்து உருகுவதே தவம்.

ஞானம் புஷ்பம் – நல்ல ஞானம் – ஐயம் திரிபற்ற முறையில் மஹான்களிடத்தில் கேட்டு பெற்ற ஞானம் புஷ்பம்.தெளிந்த ஞானத்தை பெறுவதோடல்லாமல் மற்றவரை தெளிவிக்கவும் வேண்டும்.

த்யானம் புஷ்பம் – காற்றில்லாத இடத்திலே ஏற்றி வைக்கப்பட்ட தீப ஜ்வாலையைப்போல் ஒரே ரீதியாக ஆடாமல் அசையாமல் இருப்பது. மனம் சஞ்சலமடையாமல் எம்பெருமானை த்யானம் செய்வது.

சத்யம் அஷ்டவிதம் புஷ்பம்
விஷ்ணோ: ப்ரீதி கரம்பவேத்:

விஷ்ணுவுக்கு உகந்த புஷ்பம் சத்யம். உள்ளதை உள்ளவாறு சொல்வதல்ல சத்யம். அதை மனதுக்கு இதமான முறையில், சுயநலமாகவோ முகஸ்துதியாகவோ இல்லாமல், பிறருடைய துன்பம் குறையும் வகையில் சொல்லப்படும் உண்மையின் வடிவமே சத்யம். சத்யமே எல்லாவற்றுக்கும் முதன்மையானது. இவ்வாறு சத்யம் உள்ளிட்ட எட்டு புஷ்பங்கள் பகவான் விஷ்ணுவுக்கு ரொம்ப ப்ரீதியானவை.

अहिंसाप प्रथमं पुष्पं । पुष्पंमिन्द्रिय निग्र: ॥
सर्वभूतदया पुष्पं । क्षमा पुष्पं विशेषत: ॥
शान्ति पुष्पं: तप: पुष्पं । ध्यान पुष्पं तथैवच: ॥
सत्यं अष्दमिदं पुष्पं । विष्णोर् प्रितिकरं भवेत् ॥

சர்வம் விஷ்ணுமயம் ஜகத்:

(முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் உபதேசங்களிலிருந்து)

கருத்துகள் இல்லை: