வெள்ளி, 6 செப்டம்பர், 2019

இருள் நீக்கியிலிருந்து இருள் நீக்க வந்த இறையருளே!

மாகாதேவர் தந்த மஹா தேவரே!
சரஸ்வதி அம்மாள் சுமந்த சரஸ்வதியே!

ஜனிக்கும் போது கூப்பிய கரங்களுடன் பிறந்தீர்!

இன்று ஜகம் அனைத்தும் உம்மை கை கூப்பி வணங்குகிறது!

அவனிக்கு வரும் போது அனைவரும் அழுது கொண்டு தான் வருகிறோம்!

ஆனால் நீர்மட்டம் தொழுது கொண்டு வந்ததால் தான் உம்மையே தெய்வமென தொழுது கொண்டு கொஞ்சம் நிற்கிறது இவ்அவனி!

சுப்பிரமணியனாய் பிறந்து ஜயேந்திர சரஸ்வதியாய் வந்து ஜகம் அனைத்தும் ஆளும் ஜகத் குருவே!

பொன்மாரி பொழிய வைத்த சங்கரின் வழி வந்த பொன்னாக மின்னும் எங்கள் பொக்கிஷமே!
உயர் பொலிவுடன் திகழும் பொன் மயமே!

உயர் சந்திரகேகரேந்திர சரஸ்வதி மகிழ்ந்த சங்கராச்சாரிய குருதேவா!

சரஸ்வதி புகழும் சதுர்மறை கூறும்
அருளே வா!

சங்கரருக்கு பிறகு மஹா கைலாஷ
சிகரத்தில் அவருக்கு சிலை வைத்த சிகரமே!

பல்கலைக்கழகம் கண்ட பல்கலை வித்தகரே!

சமய தொண்டுடன் சமுதாய தொண்டும் ஆற்றிய வித்தகரே ஆன்மீக குருவே!

குருநாதரின் கனவுகளை நினைவாக்கிய குருபக்த சிகாமணியே!

ஆன்மீக சமாஜத்தின் அருள் பாலித்த அருட்கொடை வள்ளலே!

ஊங்களை இரு கரம் கூப்பி வணங்குகிறோம் எங்களை காத்தருள்வாயாக!

ௐ ப்ரத்யக்ஷ ஸ்ரீநிவாஸனே சரணம் சரணம்.

ஜய ஜய சங்கர ஜயேந்திர சங்கர

கருத்துகள் இல்லை: