செவ்வாய், 10 டிசம்பர், 2019

உதவிய அனைத்து உள்ளங்களுக்கு என் சிறம் தாழ்ந்து
வணங்குகின்றேன்... இரு தினங்களுக்கு முன் அடியேன் காவாந்தண்டலம் பழனி சிவா என்பரை பற்றிய செய்தி ஒன்று போட்டிருந்தேன். திரு பழனி சிவா என்ற திரு நாமம் கொண்ட அடியார் அவரின் பெரும் முயற்சியாலும் ஊர் காரர்களின் பங்களிப்பினாலும் இதில் பெரும் பங்காற்றிய அவர்களின் பெரும் முயற்ச்சியாளும் கோவில் இனிதே கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் வெகு சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. தற்போது அந்த அடியாருக்கு ஸ்வாமிக்கு நாகாபரணம் செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறியிருந்தார். அடியேனும் அதற்க்கு உதவுவதாக கூறினேன். அடியேனுக்கு ஒரு ஆசையிருந்தது ஏன் நம் முகநூல் வழியாக உதவிவை கேட்கலாமே என்று தோன்றியது. அடியேனின் என்னம் என்ன வெண்றால்  இந்த புண்ணிய கைங்கர்யத்தில் அனைவரும் ஈடுபடவேண்டும் என்ற என்னத்தில் முகநூல் வாயிலாக உதவி கேட்டுருந்தேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

இதில் முதலில் உதவியவர் திரு Suriyanarayanan Gopalan (1000Rs) இரண்டாவதாக உதவிய திரு Rajagopalan Natarajan (1000Rs)மூன்றாவதாக குவயித்திலிருந்து  உதவிய திரு Shrira Krishna Moorthy (2000)அமெரிக்காவில் வாழும் திரு Priya Venkataraman அவற்கள் நாங்கள் சற்றும் எதிர் பார்காதவிதத்தில் அவரின் தந்தை மூலம் எங்களை அழைத்து சுமார் (25,000Rs)அந்த அடியாருக்கு கொடுத்து உதவியுள்ளனர். மேலும் மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால் அந்த அடியார் என்னிடம் சொல்லும் போது 25000 ரூபாய் செலவாகும் என்று தான் கூறினார். அதிசயம் என்ன என்றால் ஒரு ஆச்சாரி இவருக்கு 14,000 ரூபாயில் நாகாபரணம் செய்து தருவதாக கூறியுள்ளார் என்பது மேலும் மகிழ்ச்சியான செய்தி. இந்த 14,000 ரூபாய் விஷயம் எனக்கு தெரியாமலே நான் முகநூலில் சுமார் 25000 என்று பதிவு செய்திருந்தேன்.  Priya Venkataraman அவர்கள் அமெரிக்காவிலிருந்து அடியார் பழனி சிவா அவர்களிடம் தொலைபேசியில் பேசிய போது அடியார் நாகாபரணத்திற்கு 14,000 என்று கூறியுள்ளார். மேலும் அந்த அடியார் (புதிதாக) மூன்றாவதாக ஒரு கற்கோவிலை தற்போது எடுத்து கண்டிக்கொண்டுள்ளார். என்பதை Priya Venkataraman அவர்களிடம் இந்த அடியார் கூறியுளார். இந்த புதிய கோவிலுக்கு கருங்கற்களாள் ஆன வாசகால் வேண்டும் என்று சொன்னார். அதற்க்கும் சேர்த்து Priya Venkataraman தம்பதிகள் நாகாபரணத்திற்கு 11,500 ரூபாயும், வாசகாலிற்க்கு முதல் தவனையாக 11,000 ரூபாயும், அண்ணாபிஷேகத்தன்று அண்ணதாணத்திற்காக  2500 ரூபாய்யும் ஆகமொத்தம் 25,000 ரூபாயை அடியார் பழனி சிவாவிடம்  Priya Venkataraman அவர்களின் தந்தை வழங்கினார்கள். மேலும் அடியேனின் வங்கி கணக்கில் வந்த நான்காயிரத்தை எனது தந்தை மூலம் அடியார் பழனி சிவாவிடம் வழங்கி விட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த அடியார் மூன்றாவது கோவிலை நல்ல முறையில் கட்டி முடிக்க மேலும் பணம் தேவைப்படுவதால் இதை கண்ணுறும் அன்பர்கள் தாராலமாக பண உதவியும், பொருள் உதவியும் செய்யுமாறு தங்கள் பாதம் தொட்டு வணங்கி வேண்டிகிறேன்.
                                     
                                                     என்றும் நன்றியுடன்
                                                           B.Hari Haran
                                                       Cell:+919941258112
                                                       Chromepet,chennai

கருத்துகள் இல்லை: