செவ்வாய், 10 டிசம்பர், 2019

முடவன் முழுக்கு

ஒரு சமயம் முடவன் ஒருவன் மாயவரம் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் துலா ஸ்நானம் செய்ய விரும்பி வெகு தூரத்தில் இருந்து மெல்ல மெல்ல நடந்தது வந்தான். அவன் மயிலாடுதுறை வந்து சேர்வதற்குள் ஐப்பசி முப்பது நாட்களும் முடிந்து விட்டது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்ரீ மயூரநாதரை நினைத்து மனதார வேண்டினான். அப்போது அவன் பிராத்தனைக்கு ஈசன் மனமிரங்கி இன்று கார்த்திகை முதல் தேதி என்றாலும் நீ நீராடு. அதனால் உனக்கு முழு பலன் கிட்டும் என்றும் இன்று யார் காவேரியில் ஸ்நானம் செய்தாலும் ஐப்பசி மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலன் உண்டு என்று கூறி மறைந்தார் ஈசன் மயூரநாதர். ஆகவே முடவன் முழுக்கு அன்று காவேரி நதி ஓடும் எந்த ஊரில் நீராடினாளும் ஐப்பசி முப்பது நாட்களும் ஸ்நானம் செய்த புன்னிய பலன் உண்டு.

கருத்துகள் இல்லை: