செவ்வாய், 10 டிசம்பர், 2019

பிண்டம் பற்றிய சிந்தனை இது:
............................................................
..............................
............................................................
.......................................
‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது‘
இவ்வாக்கியத்தின் பொருள் உலகத்தில் எது
இருக்கின்றதோ, அது நமது உடலிலும்
இருக்கின்றது என்பதே.
அண்டம் -- உலகம்
பிண்டம் -- உடல்
இறை நம்பிக்கையாளர்களின் கூற்றின் படி
இறைவன், உலகை பஞ்ச பூதங்களைக்
கொண்டு உருவாக்கினான். அறிவியலாளர்களின்
கூற்றின் படி, உலகம் பஞ்ச பூதங்களால்
உருவாகி இருக்கின்றது.
பஞ்ச பூதங்களைக் கொண்டு உலகம்
இருக்கின்றது என்பதில் அவர்களுக்கு மாற்றுக்
கருத்துக்கள் இல்லை.
அப்பஞ்ச பூதங்கள் எனப்படுபவை,
நீர்
நெருப்பு
காற்று
நிலம்
ஆகாயம்
ஆகிய ஐந்தாகும்.
இப்பொழுது அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்
உள்ளது என்கின்றார்களே அது சரியா?
நெருப்பு - நம்முடைய உடல் ஒரு குறிப்பிட்ட
அளவு சூட்டுடனேயே இருக்க வேண்டி
இருக்கின்றது. வெப்பம் கூடினாலோ
குறைந்தாலோ (காய்ச்சல் அல்லது நோய்கள்)
உடலுக்கு தீங்கு வந்து விடுகின்றது.
வெப்பமே இல்லாத உடல் சடலமாக மாறி
விடுகின்றது. எனவே உடல் இயங்க வெப்பம்
தேவைப் படுகின்றது. அதாவது நெருப்பு. அது
உடலில் இருக்கின்றது.
நீர் - திரவங்கள் நமது உடலில் இருக்கின்றன.
அவைகள் இல்லாது போனால் உடலின்
இயக்கம் நின்று விடும்.உடல் பழுதடைந்து
அழிந்து விடும். எனவே நீரும் உடலின்
இயக்கத்திற்கு இன்றியமையாது இருக்கின்றது.
காற்று - உடல் இயங்க காற்று மிக
முக்கியமானதொன்றாகும். காற்று
இல்லையெனில் சுவாசிக்க முடியாது.
சுவாசிக்காது உடலால் இயங்க முடியாது.
ஆகாயம் - வெற்றிடம். உடலினுள்
வெற்றிடங்கள் இருக்கின்றன...சுவாசப் பைகள்
போன்றவைகள் உதாரணத்திற்கு.
வெற்றிடங்களும் உடலின் இயக்கத்திற்கும்
அமைப்பிற்கும் இன்றியமையாது இருக்கின்றன.
நிலம் - உலகம் நிலத்தால் அமைந்து
இருப்பதனைப் போல மனித உடலும்
நிலத்தைப் போலவே அமைந்து இருக்கின்றது.
உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு
இருக்கும் உடல், உயிர் பிரிந்தப் பின்னர் சில
நாட்களுக்குள் மண்ணோடு மண்ணாகி
விடுகின்றது. அதாவது நிலம் நிலத்தைச்
சேர்ந்து விடுகின்றது.
இதன் மூலம் உலகம் எதனைக் கொண்டு
வடிவமைக்கப்பட்டு இருக்கின்றதோ அவற்றை
வைத்தே தான் உடலும் வடிவமைக்கப்பட்ட
ு இருக்கின்றது என்பது தெரிகின்றது.
அதாவது,
உலகம் - பேருடல் - பெரிய உடல்
மனித உடல் - சிற்றுடல் - சிறிய உடல்
அண்டத்தில் உள்ள உலகங்கள் எல்லாம்
பிண்டத்தில் இருக்கிறது என்று அபிதான
சிந்தாமணி பட்டியலிட்டிருக்கிறது அவை :
....................................................................
அண்டத்தில் உள்ளவை எல்லாம் பிண்டத்தில்
உண்டு என்பது புராண உண்மைகளுள் ஒன்று.
எவ்வகையெனின்; உள்ளங்கால்- அதலம்,
கணைக்கால்- விதலம், முழந்தாள் -சுதலம்,
அதற்கு மேல் -நிதலம், ஊருதலாதலம்,
குஹ்யம்- ரசாதலம், இடை -பாதாளம், நாபி -
பூலோகம், வயிறு -புவர் லோகம், இருதயம்-
சுவர்க்கம், தோள் -மகாலோகம், முகம்-
ஜனலோகம், நெற்றி-போலோகம், சிரம் -
சத்தியலோகம், திரிகோணம் -மேரு,
கீழ்க்கோணம் -மந்தரம், அக்கோணத்துக்கு
வலப்பக்கம்- கைலை, இடப்பக்கம் -இமயம்,
மேற்பக்கம் -நிஷதம், தென்பக்கம் -கந்தமாதனம்,
இடக்கையின் உள்ளங்கைகளில் உள்ள ரேகைகள்
-வருண பருவதம், எலும்பு -நாவலந் தீவு,
மேஷத் -சாகத்தீவு, தசை- குசத்தீவு, நரம்பு-
கிரௌஞ்சத் தீவு, தொக்குச் -சான்மலித் தீவு,
மயிர்த்திரள் -பிலக்ஷத்தீவு, உகிர்
புஷ்கரத்தீவு, மூத்திரம்- உப்புக்கடல், நீர்-
பாற்கடல், கபம் -சுராக்கடல், மச்சை -
நெய்க்கடல், வாய் நீர்- கருப்பங்கடல், இரத்தம் -
தயிர்க்கடல், வாயில் உண்டாம் மதுரப்புனல் -
சுத்தோதகம், சரீரத்தில் இரண்டு சக்கரங்கள்
உள்ளன. அவற்றில் நாதசக்கரத்தில்-
சூரியனும், பிந்து சக்கரத்தில்- சந்திரனும்
நேத்திரங்களும் -அங்காரகனும், இருதயத்தில் -
புதனும், வாக்கில் -குருவும், சுக்கிலத்தில் -
சுக்கிரனும், நாபியில் -சனியும், முகத்தில் -
ராகுவும், காலில் -கேதுவும் இருக்கின்றனர் -
என்கிறது அபிதான சிந்தாமணி.
............................................................
.................................
............................................................
....................................
திருமூலர் கருத்து:
வாயுவு மேலே மருவிற்று ஆகாசம்
காயுமோர் அண்டத்தில் கண்டகுறிப்பிது
பாயுமோர் ஆயிரத் தெட்டுக்கும் இப்படி
பாயுமோர் பிண்டம் பரிந்துநீ பார்த்திடே.
திருமூலர் – 476
இவ்வண்டத்தின் மேல் பூமியும்
பூமியின்மேல் நீரும், நீரின்மேல்
அக்கினியும்,அக்கினியின்மேல்
வாயுவும்,வாயுவின் மேல் ஆகாசமும்
நிற்கிறது. இது ஒரு அண்டத்தை
பற்றியதாகும். இதுபோல் ஆயிரத்தெட்டு
அண்டங்கள் உள்ளன என்று கூறுகிறார். இனி
பிண்ட உற்பத்தியை கேள் என்று
பார்த்திடு மாங்கிக்ஷம் பரித்த பிருதிவி
வார்த்திடு ரத்தம் வழலையில் நீராச்சு
தோற்றிடு வாய்வு சுழண்டேறிப் புக்கிற்று
காற்றோடு தீயுங் கலந்தே விரும்பிற்றே.
திருமூலர் – 477
இவ்வுடலில் உள்ள மாமிசங்கள் பூமியின்
தத்துவமாகும், சளி,ரத்தம் நீரின்
தத்துவமாகும், உடலை சூடு உண்டாக்குவது
அக்கினியின் தத்துவமாகும்,
நாம் விடும் மூச்சு வாயுவின் தத்துவமாகும்.
நம் உடலில் அக்கினியானது வாயுவுடன்
கூடியே உள்ளே செல்கிறது.
கலந்தே செவிக்குள்ளே கண்டு துவாதச
மலந்தே இடையின் ரண்டாச்சு வாரிதி
குலந்தே சுழிமுனை கூடிற்று மேருவாய்த்
தலந்தே பிண்டத்தில் சார்ந்த முறையாச்சே.
திருமூலர் – 478
அதாவது அண்டமான வெளிமண்டலங்கள்
பிண்டமான நம் உடலிலும் உள்ளது என்பதை
கூறுகிறார்.
பூமி – மாமிசமாகவும்
நீர் – இரத்தமாகவும்
நெருப்பு – நம் உடல் சூடாகவும்.
ஆகாயம் – கேட்டுக்கும் சக்தியாகவும்.
கடல் – வியர்வையாகவும், சிறுநீராகவும்
மாகாமேரு (பூமியின் மேற்ப்பக்கம்) -
கழுமுனையாகவும்
..................................................
வள்ளலார் கருத்து:
அண்டமும் பிண்டமும் கடவுளும் !
அண்டம் எல்லாம் பிண்டம் எல்லாம் உயிர்கள்
எல்லாம் பொருள்கள்
ஆன வெலாம் இடங்கள் எல்லாம் நீக்கமற
நிறைந்தே
கொண்டவெலாங் கொண்ட வெலாங் கொண்டு
கொண்டு மேலும்
கொள்வதற்கே இடங் கொடுத்துக் கொண்டு
சலிப்பின்றிக்
கண்டமெலாங் கடந்து நின்றே அகண்டமதாய்
அதுவுங்
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி
வெளியாம்
ஒண்டகு சிற்றம்பலத்தே யெல்லாம்
வல்லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே
கண்டீர் !
கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேரளவைக்
கிளத்திடு மெய்ச் சாதனமாம் அளவை அறிவு
அளவை
விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு
நெடுங்காலம்
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார்
ஆங்கே
அளக்கின்ற கருவிகள் எல்லாம் தேய்ந்திடக்
கண்டாரேல்
அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார்
இலையே
துளக்கமுறு சிற்றறிவால் ஒருவாறு என்று
உரைத்தேன்
சொன்ன வெளிவரை யேனும் துணித்து
அளக்கப் படுமோ !
நாம் வாழும் அண்டம் போல் பல கோடி
அண்டங்கள் உள்ளன .அதில் உயிர்கள், உயிர்கள்
வாழும் உடம்புகள்,அதற்கு தேவையான
பொருள்கள்,அதற்கு உண்டான
இடங்கள்,எல்லாம் இடைவெளி இல்லாமல்
நிறைந்து கொண்டும் மேலும் மேலும் விரிந்து
கொண்டும்,இடம் கொடுத்துக் கொண்டும்
சலிப்பு இல்லாமல் கடந்து நின்றே செயல்
பட்டுக் கொண்டே இருக்கும் ஒரு மெய்ப்
பொருள் உண்டு.அது பலகோடி
அண்டங்களிலும் பலகோடி வெளிகளில் உள்ள
எல்லா அணுக்களிலும், உள் இருந்து செயல்
பட்டுக் கொண்டு இருக்கின்றது.அது இயங்கும்
இயக்கம் இடமானது அருள் பெரு
வெளியில்,எல்லா அண்டங்களையும் தன்னுள்
அடக்கிக் கொண்டு செயல்படும் சிற்றம்பலம்
என்னும் இடத்தில் எல்லாம் வல்லவராய் ,ஓங்கி
இடைவிடாது செயலாற்றிக் கொண்டு
இருக்கும் தனிக் கடவுள் ஒருவரே !
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் ஒளிக்
கடவுளாகும் என்கிறார் வள்ளலார்

எல்லாம் அவன் கையில் இல்லை எல்லாம் உங்கள் கையிலே இருக்கு 🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்

கருத்துகள் இல்லை: