புதன், 2 செப்டம்பர், 2015

* எப்போதும் செல்லும் "நோட்டு'*
* எண்ணம்,சொல்,செயல் மூன்றாலும் ஒருவன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.இதற்கு நம்மிடம் இருக்கும் செல்வம் நம்முடையதல்ல என்ற எண்ணம் முதலில் இருக்க வேண்டும்.
* உடை,உடம்பு இருக்கும் இடம் ஆகியவை தூய்மையுடன் இருந்தால் போதாது.கள்ளம்,கபடம்,வஞ்சனை போன்ற அழுக்குகள் மனதில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* செய்யும் செயல் அனைத்தும் தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும்.செல்வத்தை புண்ணிய காரியங்களுக்கு செலவழித்தால் பணம் அனைத்தும் தர்மம் என்னும் "நோட்டாக'மாறி விடும்.அந்தப்பணம் எந்தக் காலத்திலும் செல்லுபடியாகும்.
* உயிர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும். மனதில் அன்பு இருந்தால் ஆனந்தம் நிலைத்து இருக்கும்.ஒருவர் தவறு செய்யும்போது அன்பால் திருத்துவது தான் பெருமை.அது தான் நிலைத்தும் நிற்கும்.
* ஆடம்பர பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது.
* காஞ்சி மஹா பெரியவா *

கருத்துகள் இல்லை: