புதன், 2 செப்டம்பர், 2015

பயனுள்ள தகவல்கள்
ஈ தொல்லை ஒழிய : டைனிங்டேபிள் மீது ஒரு கிண்ணத்தில் சிறிதளவு புதினா இலையைப் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பையும் கலந்து வையுங்கள் ஈத் தொல்லை இருக்கவே இருக்காது.
லெதர் பொருட்கள் பலபலக்க : தோலில் செய்த எந்தப் பொருளையும் பாலில் நனைத்த துணியால் துடைத்தால் நல்ல பளபளப்பாகி விடும்.
உப்புப் பாதிப்பிலிருந்து பாத்திரங்களை பாதுகாக்க : உப்புத்தண்ணீரினால் பாத்திரங்கள் வெள்ளையாக,சொர,சொரப்பாக இருந்தால்,மோர் ஊற்றி வைத்து 4 முதல் 5 மணி நேரம் களித்து பாத்திரத்தை கழுவிப் பாருங்கள் பாத்திரம் பளிச்சென்று மின்னும்.
மாவு அரைக்கீறீர்களா? : மாவு மிஷினில் மாவு அரைப்பதற்கு முன் சிறிதளவு அரிசியைப் போட்டு அரைத்தபின் எந்த மாவு வேண்டுமானாலும் அரைக்கலாம்.நமக்கு முன்பு கம்பு,கேழ்வரகு, கோதுமை,பருப்பு அரைத்தாலும் கவலை வேண்டாம்.மாவு சுத்தமாக இருக்கும்.
டீ.வி., ஃப்ரிட்ஜ், ட்யூப் லைட் டிப்ஸ் : டீ.வி., ஃப்ரிட்ஜ்,ட்யூப் லைட் போன்ற சாதனங்களின் ஸ்விட்ச்களை அணைத்தவுடனேயே(மனம் மாறி)மீண்டும் போடாதீர்கள்.ஃப்ரிட்ஜில் உள்ள கம்ப்ரசரும்,டி.வியில் உள்ள பிச்சர் டியூப்பும்,டியூப் லைட்டில் உள்ள பால்ஸ்டும் இதனால் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதாகும்.
மூட்டைப்பூச்சி ஒழிய : கற்பூரத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.
மல்லிகைப்பூ அதிக நாள் வாடாமல் இருக்க : ஃபிரிஜ்ஜில் கருவேப்பிலை, கொத்தமல்லி,வெற்றிலை மற்றும் மல்லிகைப்பூ போன்றவற்றை அலுமினியம் ஃபாய்ல் கவரில் வைத்தால் பத்து நாட்கள் ஆனாலும் அழுகாது.
பூ வாடாமல் இருக்க : மல்லிகைப்பூ மாலையில் வாங்கி அடுத்தநாள் அப்படியே வாடாமல் இருக்க ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும்.மறுநாள்வரை பூக்கள் வாடாமல், மனம் குறையாமல் இருக்கும்.
சுவாமி படங்களை பூச்சி அரிக்காமல் தடுக்க : சுவாமி படங்களை பூச்சி அரிக்காமல் தடுக்க தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து சுவாமி படங்களை துடைக்க வேண்டும்.
பித்தளை,வெள்ளிப்பாத்திரம் பளபளக்க : பித்தளை,வெள்ளிப்பாத்திரங்கள் கறுத்துக் காணப்பட்டால் அதற்கு சாதம் வடித்த கஞ்சியில் சிறிது நேரம் ஊறவைத்து பின் எடுத்துத் துலக்கினால் பாத்திரம் பளபளக்கும்.
பளிச்சிடும் வெண்மைக்கு : பழுப்பேறிய வெள்ளைத் துணிகளை வெண்மையாக்க அழுகிய எலுமிச்சை பழத்தையோ நல்லதையோ பிழிந்து சாறு எடுத்து கால் வாளித்தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பின் அலசி உலர்த்துங்கள்.பிறகு பாருங்கள் வெண்மையை.
ஊருக்கு போகிறீர்களா? : ஊருக்கு போகும்போது கக்கூஸ்,வாஸ்பேசின் ஆகியவற்றில் கொஞ்சம் பிணாயில் ஊற்றி விட்டுச் செல்லுங்கள்.தாங்கள் திரும்பி வரும்போது துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
பெயிண்ட் வாடை நீங்க : புதிதாக அடித்த பெயிண்ட் வாடை நீங்க ஒரு வெங்காயத்தை நறுக்கி வீட்டின் நடுவே வைத்து விட்டால் பெயிண்ட் வாடை நீங்கும்.
பூச்சிகள் வராமல் தடுக்க : புத்தகம் வைக்கும் அலமாரி,டி.வி.ஸ்டாண்டு,பீரோ மற்றும் பொம்மைகள் வைக்கும் "ஷோகேஸ்"களில் வசம்பு வாங்கி போட்டு விட்டால் ஆண்டுகள் ஆனாலும் பூச்சியும் வராது, மணமும் தொடர்ந்து இருக்கும்.
தேங்காய் சமமாக உடைய : தேங்காயை சிறிது நேரம் தண்ணீரில் ஊரவைத்து நடுவில் தட்டி உடைத்தால் சமமாக உடையும்.
விளக்கு அதிக நேரம் எரிய : விளக்கு அதிக நேரம் எரிய ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையும் நல்லெண்ணையும் கலந்து ஏற்ற வேண்டும்.
கொத்தமல்லி உபயோகம் : சாதரணமாக கொத்தமல்லி,கருவேப்பிலை போன்றவைளை ஒரு எவர் சில்வர் டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை புதிதாகவே இருக்கும்.
எறும்பிடமிருந்து சர்க்கரையை காப்பாற்ற : ஒரு பூண்டுப் பல் எடுத்து கையினானேலேயே நசுக்கி மூடிப்பகுதிக்கு சற்று கீழே வளையம் போல் சுற்றி தடவி விட்டால் எறும்புகள் அண்டவே அண்டாது.
தீப்பெட்டி ஈரமானால் : தீப்பெட்டி ஈரமாகி நமத்துவிட்டால் அரிசி மாவை அதன் மீது தடவி விட்டுக் கொளுத்தினால் டக் என்று ஏற்ற வரும்.
ஜாச் செடி அழகாக பூக்க : ரோஜாச் செடி அழகாக பூக்க,பீட்ரூட்டின் தோலையும்,வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலையும் உரமாகப் போட வேண்டும்.
தேங்காய் எண்ணெய் உறைவதை தடுக்க:குளிர்காலத்தில்,ஆமணக்கு எண்ணெய் சில சொட்டு தேங்காய் எண்ணெயில் சேர்த்தால்,எண்ணெய் உறைவதை தடுத்து எப்போதும் நீர்த்து இருக்கும்.
டிபன் பாக்ஸ் திறக்க : டிபன் பாக்ஸ் திறக்க முடியவில்லை எனில்,குழாய்த்தண்ணீரில் சிறிது நேரம் காண்பித்து பின்னர் முயற்சி செய்யுங்கள் எளிதாகும் இருக்கும்.

கருத்துகள் இல்லை: