செவ்வாய், 22 அக்டோபர், 2013

விரதம் இருப்பதால் என்ன நன்மை?

விரதம் இருப்பதன் மூலம் உடல் தூய்மை பெறும், மனம் வலிமைபெறும். இறைவனது அருள் நமக்கு கிடைக்கும். ஓயாமல் சாப்பிடுவதன் மூலம் ஓய்வெடுக்க முடியாமல் இருக்கும் நம் உடலின் ஜீரண உறுப்புகளுக்கும் அப்போது ஓய்வு கிடைக்கும். விரதத்திற்கு மறுநாள் நாம் சாப்பிடும்போது ஜீரண உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும். பணி புரிபவர்கள் அனைவருக்கும் வார விடுமுறை தேவைப்படுவது போல, ஆலயங்களுக்குச் சென்று அருள் பெற விரும்பும் நாம், ஆரோக்கியமாக இருக்க விரதங்கள் தேவை. இதற்காக வாரத்தில் ஒரு நாள் அல்லது ஒரு வேளை உணவையாவது உண்ணாமல் இருந்து, தங்களுக்கு பிடித்தமான கடவுளுக்காக விரதமிருப்பது உடலுக்கும், மனதுக்கும் சிறந்தது.

கருத்துகள் இல்லை: