செவ்வாய், 8 அக்டோபர், 2013

படலம் 19: நவ நைவேத்ய விதி

19 வது படலத்தில் நவநைவேத்யமுறை கூறப்படுகிறது. முதலில் ஆடி, மார்கழி, மாசி இந்த மாதங்களை தவிர மற்ற மாதங்களில் நவநைவவேத்ய முறை அனுஷ்டிக்கவும் என காலம் விளக்கப்படுகிறது. ஆசார்யன் அங்குரார்ப்பணம் செய்து நல்ல நட்சத்ர லக்ன முஹூர்த்தம் இவைகளுடைய சிவபக்தர்களுடன் கூடி அஸ்த்ரதேவர் சண்டிகேஸ்வரருடனும் பலவிதமான நாட்டிய, வாத்யங்களுடன் தேவ பூமியை அடைந்து தயிருடன் கூடிய ஹவிஸால் பூத பலி கொடுத்து பலவித காய்கறி சமையல் பொருள்களுடன் தான்ய சங்க்ரஹணம் செய்து கிராம பிரதட்சிணத்துடன் ஆலயத்தை அடையும் என கூறப்படுகிறது. அங்குரார்ப்பணம், அஸ்த்ரதேவர், சண்டீசர் இவர்கள் இல்லாமலும் எல்லா பூஜையும் செய்யலாம் என விளக்கப்பட்டுள்ளது. பிறகு சூர்ணோத்ஸவ முறைப்படி நெல்லை முறைப்படி உரலில் இடித்து அரிசியை தயாரிக்க வேண்டும். பிறகு மிளகு, சீரகம், தேங்காய், வெல்லசர்க்கரை, இவைகளுடன் அரிசியை ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். ஸ்வாமி அம்பாளுக்கு தண்டுல நிவேதன விதி கூறப்படுகிறது. ஸகல மூர்த்திகளுக்கும் விருஷபம் முதலிய பரிவார தேவதைகளுக்கும் நைவேத்யமுறை கூறப்படுகிறது. அங்கு செய்ய வேண்டிய ஹோமம் செய்யும் முறை பலிகொடுக்கும் முறை உத்ஸவம் செய்யும் முறையும் விளக்கப்படுகிறது. அங்கு பைரவபலி, உலக்கை கிரியையகளின்றி மற்ற எல்லாம் செய்ய வேண்டும். விசேஷமாக வஸ்திரஸ்வர்ண மோதிரம் முதலியவைகளை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். யார் முடிவில் இவ்வாறு நவநைவேத்யபூஜை செய்கிறானோ அவன் புண்யமான கதியை அடைகிறான். என்று பலச்ருதி காணப்படுகிறது. இவ்வாறு 19வது படல கருத்து சுருக்கமாகும்.

1. நவ நைவேத்ய லக்ஷணம் பற்றி கூறுகிறேன் என்கிறார். மார்கழி, ஆடி, மாசி மாதங்களை தள்ளுபடி செய்து

2. மற்ற எல்லா மாதங்களிலும், நவநைவேத்ய முறையை கடைபிடிக்க வேண்டும். நிச்சயிக்கப்பட்ட சுபநக்ஷத்திரத்திற்கு முன்தினம் அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும்.

3. அங்குரார்ப்பணம் இல்லாமலும் நல்ல முகூர்த்தத்தில் நல்ல லக்னத்தில் சங்க துந்துபி, நாதம், கீதம் நாட்யம் முதலிய மங்களகரமான சப்தங்கள்

4. பலவிதமான கொடி விதானங்கள், தூப தீப அங்குரங்களுடனும் சிவ பக்தர்கள் புடை சூழ அஸ்த்ர தேவருடன் கூடி

5. சண்டேச்வரனுடன் கூட தேவனுடைய வயல்பூமியை அடைய வேண்டும். சண்டேசர் அஸ்த்ர தேவர் இன்றியும் தேவ÷க்ஷத்ரத்தை அடைந்து

6. தயிருடன் கூடிய ஹவிஸை பூதங்களுக்கு பலிகொடுக்க வேண்டும். பலியை கிழக்கு முதலான எட்டு திசைகளிலும் சந்தனம் புஷ்பம் இவைகளுடன் சேர்ந்ததாக செய்ய வேண்டும்.

7. லக்ஷணத்தோடு கூடினதும் அஸ்த்ர மந்திரத்தினால் பூஜிக்கப்பட்ட அரிவாளோடு கூடி கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ அமர்ந்து ஹ என்று அஸ்த்ர மந்திரத்தை நினைத்து

8. கதிரை (நெல்) அறுத்து மேடையின் மேல் வைக்க வேண்டும். அந்த நெற்கதிருடனும் கூடிய புதிய நெல்லுடன் கூடிய

9. அரிசி முதலானவைகளுடன் பலவித காய்கறி பொருட்களுடனும் தேங்காய் புதிய பாக்குப்பழத்துடனும்

10. மிளகு, வெல்லக்கட்டியுடனும் கரும்பு, பல காய் கனிகள் பலவித உருதுணைப் பொருட்களும் (ஊறுகாய், கறி, கூட்டு முதலியன)

11. தனித்தனியான கிழங்கு பழங்களுடனும், அவ்வாறே பூஜைக்கு உரிய பொருட்களுடனும் ஆச்சர்யமேற்படும் வஸ்துக்கள் பலவித வாத்யங்களிவைகளுடன்

12. நாட்யம், பாட்டு, பலவித கொடிகள், பலவித குடைகள் இவைகளுடன் கூடி நகரம் முதலான பிரதேசங்களை அடைந்து

13. கிராமத்தை வலம் வந்து ஆலயத்தை அடைந்து பூர்ணகும்பம் பலவிதமான தீபங்களுடனும் கூடி

14. வாழைமரம் பலவிதமான மங்களப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஆலயத்தை அடைந்து நெற்கதிரிலிருந்து நெல்லை எடுத்து வெய்யிலில் காயவைத்து

15. மூங்கில் முதலானவைகளாலான பாத்திரத்திலோ சாணம் மெழுகப்பட்ட பூமியிலோ மாவினால் கோலமிடப்பட்ட இடத்திலோ வைத்து தீபத்துடன் கூடியதாக

16. சூர்ணோத்ஸவ முறைப்படி நெல்லை குத்தி உமியை நீக்கிசுத்தமான அரிசியை எடுத்து ஜலத்தால் களைந்து சுத்தம் செய்து, மிளகு சீரகம் வெல்லச்சக்கரையுடனும்

17. தேங்காயுடனும் அரிசியை பக்குவம் செய்ய வேண்டும். சுவாமிக்கு ஸ்நபனம் செய்து ஆபரணங்களால் ஸ்வாமியை அலங்கரிக்கவும்

18. நல்ல முகூர்த்தத்தில் பூமியில் நெல்லைப் பரப்பி வஸ்திரத்தை அதன்மேல் வைத்து வாழை இலையை வைக்க வேண்டும்.

19. அஸ்த்ர மந்திரம் கூறி ஜலத்தால் பிரோக்ஷித்து ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை சொல்லிக் கொண்டு கருப்பஞ்சாரினால் நனைத்த பக்குவமான அரிசியை வைத்து

20. கவசாய நம: என்று அவகுண்டனம் செய்து ஹ்ருதயாய நம: என்று பூஜித்து தேனுமுத்திரை காண்பித்து பிரம்ம மந்திரங்களினாலோ அல்லது தத்புருஷ மந்திரத்தாலோ

21. பரமேஸ்வரனுக்கு நைவேத்யம் செய்து தாகசாந்திக்கு தீர்த்தமும் கொடுக்க வேண்டும், மேற்கூரிய மந்திரங்களால் தாம்பூலத்தை சுவாமிக்கு நிவேதிக்க வேண்டும்.

22. புதிய பாக்குப் பழத்துடன் தாம்பூலத்தை தேவிக்கும் நிவேதனம் செய்ய வேண்டும். மற்ற எல்லா ஸகலமூர்த்திகளுக்கு முன்கூறிய விதிப்படி நிவேதிக்க வேண்டும்.

23. அல்லது நைவேத்ய பாத்திரமான ஸ்தாலிகையில் எடுத்து எல்லா மூர்த்தங்களுக்கும் நிவேதிக்க வேண்டும். விருஷபம் முதலிய பரிவார தேவதைகளுக்கு ஹோம கர்மாவுடன் முடிக்க வேண்டும்.

24. நைவேத்யம் செய்து தாம்பூலம் ஸமர்ப்பிக்க வேண்டும். பலிதானம் செய்து அதிதிகளுக்கும் வழங்க வேண்டும்.

25. அன்னமும் தண்டுலமும் நிவேதித்து பிறகு ஹோமமாவது செய்ய வேண்டும். அதன்முடிவில் உத்ஸவம் செய்ய வேண்டும். உத்ஸவமின்றியும் செய்யலாம்.

26. ÷க்ஷத்ர (பைரவஸ்வாமி) பலியின்றியும் உரல் ஸம்ஸ்காரமின்றியும் மற்றகிரியைகளை ஸாமான்யமாக செய்து பிறகு குருவை பூஜிக்க வேண்டும்.

27. வஸ்த்ரம் தங்க மோதிரத்துடன் தட்சிணையை கொடுக்க வேண்டும். இவ்வாறு யார் நவநைவேத்ய விதியை செய்கிறானோ அவன் நல்ல புண்ய கதியை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் நவநைவேத்ய முறையாகிற பத்தொன்பதாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: