செவ்வாய், 8 அக்டோபர், 2013

படலம் 11: மாசி மாத சிவபூஜா விதி!

பதினொன்றாவது படலத்தில் மாசிமாதத்தில் விதிக்கப்பட்டுள்ள சிவராத்ரி பூஜாவிதி கூறப்பட்டுள்ளது. முதலாவதாக சிவராத்ரி வ்ரதாசரண பலநிரூபணம் மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்தசீ ராத்ரி சிவராத்ரி அந்த தினத்திலே சிவாலயத்தில் சிவலிங்க விஷயமான சிவராத்ரி பூஜா செய்ய வேண்டும் என காலம் நிர்தேசிக்கப்படுகிறது. பிறகு முற்பகலில் ஸ்நான உபவாஸத்துடன் கூடிய சாதகனால் சிரத்தையாக பூஜை செய்ய வேண்டுமென அதிகார நிரூபணம். ராத்ரியில் நான்கு யாமத்திலும் பூஜாவிதி கூறப்படுகிறது. முதல் யாமம், பாயஸாந்நம், இரண்டாம் யாமம் கிருஸரான்னம் மூன்றாம் யாமம் குலான்னம், நான்காம் யாமம், சுத்தான்னம் நிவேதிக்க வேண்டுமென நிவேதனபிரகாரம் சூசிக்கப் படுகிறது. பின்பு பூஜை முடிவில் செய்ய வேண்டிய ஹோமவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. தான் விரதம் அனுஷ்டிக்க அசக்தனாக இருப்பின் அந்நியனால் தனக்காக வ்ரதாசரணம் செய்ய வேண்டுமென சூசிக்கப்படுகிறது. பிறகு ராத்ரியில் விழித்து ஆசார்ய பூஜை செய்க. வித்த சாட்யமின்றி தட்சிணா தானம் செய்ய வேண்டும். அவ்வாறே லிங்கம் சிவபக்தர்கள், பிராமணர்கள், அதிதிகளிவர்களுக்கு யதாசக்தி பூஜை செய்க. பிறகு சாதக பூஜை நன்கு முறைப்படி முடித்து ஸ்வகிருஹம் சென்று பந்து ஜனங்களுடன் கூட முறைப்படி பாரணம் செய்க என்று சிவராத்திரி பூஜாவிதியில் கிரியாகல்பம் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக பதினாறாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. பிறகு, பிராமணர்களே, சிவராத்ரி விரதத்தை பற்றி கூறுகின்றேன். விசேஷமாக விரதங்களில் உத்த மோத்தமமானதை நீங்கள் சிரத்தையுடன் கேளுங்கள்.

2. முன்னால் தேவியாலும், பிறராலும், எது அனுஷ்டிக்கப்பட்டதோ (அந்த சிவராத்ரி விரதானுஷ்டத்தால்) என்னோடு கூட தேவி ஸந்தோஷமாயிருந்தால் மற்றவர்கள் விரும்பிய நன்மைகளை அடைந்தார்கள்.

3. விரதம் அனுஷ்டித்தவர்கள் யமன் கட்டளையினால் பாதிக்கப்படுவதில்லை. கிங்கரர்களாலும் பயப்படும்படியான பார்வை உடையவர்களாலும் பார்க்கப்படுவதில்லை. நரகங்களையும் அடைவதில்லை.

4. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதன் முறையை கேளுங்கள் மாசி மாதத்தில் தேய்பிறையில் எந்த தினத்தில் சதுர்த்தசி இருக்கின்றதோ

5. அந்தராத்ரி சிவராத்ரியாகும். எல்லா நல்வினைகளும் சேர்ந்து சுபத்தை கொடுக்கக் கூடியதாகும். அந்த ராத்ரியில் சிவாலயத்தில் சிவலிங்கத்தில் சிவபூஜை செய்யவேண்டும்.

6. ஸ்நானம் செய்து முற்பகலில் நியமமாக உண்ணாமல் விரதமாக இருந்து மிக வேண்டும் சிரத்தையோடு கூட ஸாதகன் உபசாரத்தினால்

7. பிறகு முன்கூறிய முறைப்படி பஞ்ச சுத்தியை முறைப்படி செய்து சிவாஸனம், சிவமூர்த்தி வித்யா தேகம் கல்பித்து பிறகு

8. சிவனை ஆவாஹனம் செய்து ஸன்னிதானம் செய்து பாத்யம் முதலியவைகள் கொடுத்து அர்ச்சிக்க வேண்டும். சந்தனாதி தைலம்பூசி அரிசி மாவினால் தேய்த்து சுத்தி செய்யவேண்டும்.

9. பஞ்சாமிருதத்தினால் பஞ்சகவ்யங்களினால் அந்தந்த முறையோடு அபிஷேகம் செய்யவேண்டும், நெய் முதலியவைகளோடு சந்தன ஜலத்தினால் முறைப்படி அபிஷேகம் செய்யவேண்டும்.

10. ஐந்து அங்கங்களோடு கூடிய பவித்ரங்களாலும் அரிசிமாவினால் மறுபடி இந்த பிரகாரம் நெல்லி முள்ளியினால் தேய்த்து

11. அரிசிமாவினால், தூபம் செய்யப்பட்ட மஞ்மள் பொடியினாலும் அஸ்த்ரமந்திரத்தினால் தேய்த்து ஜலத்தினால் சுத்தம் செய்யவேண்டும்

12. பிறகு ஈச்வரனை இளநீரால் அபிஷேகம் செய்யவேண்டும், பஞ்ச பிரம்ம மந்திரம் ஷடங்க மந்திரம், மூல மந்திரத்தினால் சந்தன ஜலத்தினால் அபிஷேகம் செய்யவேண்டும்.

13. சுத்தமான பஞ்சு ஆடையினால் துடைத்து லிங்கத்தை சுத்தமான ஆடையினால் லிங்கத்தை சுற்றி வஸ்த்ரம் சாத்தவேண்டும்

14. ஒவ்வொரு யாமத்திலும் தனித்தனியாக திரவியங்களாலும் சந்தனம் முதலியவைகளாலும், சந்தனம், அகில், பச்சை கற்பூரம், குங்குமப்பூ முதலியவைகளால் முறைப்படி அர்ச்சிக்கவேண்டும்.

15. மல்லிகைபூ நீலோத்பலம் ஜாதி புஷ்பங்கள் வில்வங்களை அருகம்புல் அரிசி எள்ளும் கூடினதாக நன்கு பூஜிக்க வேண்டும்.

16. குங்குலியம் அகில் சாம்பிராணி மட்டிப்பால் முதலியவைகளினால் தூபம் போட வேண்டும். நல்ல வெண்மையான நூலை நெய்யில் நனைத்து நெய் தீபம் போட வேண்டும்.

17. முதல் யாமத்தில் பாயஸமும் இரண்டாம் ஜாமத்தில் எள்ளு வெல்லம் நெய் கலந்த அன்னமும் மூன்றாம் ஜாம பூஜைக்கு சக்கரை பொங்கலும் நான்காவது ஜாம பூஜைக்கு சுத்தான்னமும் செய்ய வேண்டும்.

18. அதற்கு பிறகு எல்லாவிதமான காய்கறிகளோடும்கூட, நெய், வெல்லத்தோடுகூட, வெற்றிலை பாக்கையும் நிவேதனம் செய்யவேண்டும்.

19. தூபம் தீபாராதனையோடுகூட சிவனின் பொருட்டு அர்ப்பணம் செய்து குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ விசேஷமாக ஹோமம் செய்ய வேண்டும்.

20. குண்ட ஸம்ஸ்காரத்துடன் குண்டத்திலோ, பாத்திரத்திலோ அக்னியில் சிவாக்னியை கல்பித்து அக்னி ஹ்ருதயத்தில் சிவாஸனத்தை கல்பித்து

21. அவ்விடத்தில் ஈசனை நன்கு பூஜித்து அந்த ஜ்வாலையாக இருக்கும் அக்னியில், ஸமித், நெய், அன்னம் நெற் பொறி, எள்ளு இவைகளை மூலமந்திரம் ஷடங்க மந்திரங்கள், பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஹோமம் செய்யவேண்டும்.

22. சிவமந்திர ஹோமத்தில் பத்தில் ஓர் பாகம் மற்ற மந்திரங்களும் பத்துமுதல் பத்து பத்தாக அதிகபடுத்தி ஐம்பது ஆகுதிவரை செய்யலாம்.

23. இடைவெளி இல்லாத பூர்ணமான பூர்ணாஹூதியை சிவனுக்காக செய்து வணங்கி அந்த விபூதியை ஈசனுக்கு அர்பணம் செய்து நமஸ்கரித்து

24. ஒவ்வொரு ஜாமத்திலும் மறுபடி மறுபடி இந்த பிரகாரம் பூஜிக்க வேண்டும். நாமே செய்ய இயலாவிடில் நமக்காக பிறரால் செய்விக்கப்பட வேண்டும்.

25. இரவை தூக்கம் இல்லாமல் கழித்து, தெளிவான அதிகாலையில் நித்யானுஷ்டானங்களை செய்து பிறகு முறைப்படி ஸ்நபனம் செய்து

26. ஈச்வரனை முன்போல் பூசித்து பிறகு குரு பூஜையை செய்யவேண்டும். பிறகு பணம் இல்லாத்தன்மை இல்லாமல் பிறகு தட்சிணையை (குருவுக்கு) கொடுக்கவேண்டும்.

27. லிங்கம் கட்டிகள், சிவபக்தர்கள், பிராமணர்கள், அதிதிகளையும் இயன்றளவு பக்தியினால் நன்கு பூசை செய்து

28. பந்துக்களோடு கூட ஸாதகன் தனது வீட்டிற்கு சென்று கை, கால்களை சுத்தம் செய்துகொண்டு சாப்பாட்டை (பாரணை) செய்ய வேண்டும்.

இவ்வாறு மாசிமாத சிவராத்ரி பூஜை முறையைக் கூறும் பதினொன்றாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: