செவ்வாய், 8 அக்டோபர், 2013

படலம் 12: பங்குனிமாத சந்தன பூஜை

பன்னிரெண்டாவது படலத்தில்: பங்குனி மாதத்தில் செய்யவேண்டிய கந்த பூஜாவிதி கூறப்படுகிறது. முதலில் பங்குனி மாதத்தில் உத்தர நட்சத்திரதினத்தில் கந்த பூஜைசெய்ய வேண்டுமென கால நிரூபணமாகும். விசேஷ ஸ்நபன விசேஷ பூஜையுடன் கந்தபூஜாவிதி அனுஷ்டிக்கவும் எனகூறப்படுகிறது. பிறகு சந்தனத்தில் சேர்க்க வேண்டிய அகில குங்குமம் முதலியவைகளின் கந்தத்ரவ்யங்களின் பிரமாண வசனம். கிருதகம்பள விதிக்கு கூறிய மார்க்கப்படி ஹோமம் செய்க. லிங்கத்திலும் பீடத்திலும் மற்ற எல்லா இடத்திலும் பூசுவதை செய்க. கம்பள வேஷ்டனமின்றி மற்ற எல்லா கர்மாவும் கிருதகம்பள விதி மார்க்கமாக செய்ய வேண்டுமென சூசிக்கப்படுகிறது. எல்லா ரோக சம்பவம், உத்பாத சூசகாத்புதம் காணப்பட்ட சமயம் அபிசாரகிருத தோஷ ஸமயங்களிலும் முன்பு கூறிய தோஷ நிவிருத்திக்காகவும் விருப்பப் பயனையடைவதற்கும் கந்தபூஜா செய்யவும் என்று கந்தபூஜா பலம் நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறாக 12ம் படல கருத்து தொகுப்பாகும்.

1. பங்குனி மாதத்திலே உத்திர நட்சத்திரத்திலே உத்தமமான சந்தனத்தினால் பூஜிக்கவேண்டும். விசேஷ ஸ்நபனத்தோடு கூட விசேஷ ஹோமத்துடன் கூடியதாக இருக்கவேண்டும்.

2. எட்டுபலம் முதல் ஒவ்வொரு பலமாக கூட்டி ஆயிரம் பலம் எடை முடிய சந்தனத்தின் அளவு கூறப்பட்டது அதில் பாதி அகில் சேர்க்கவேண்டும்.

3. அதில் கால்பாகமோ, அதில் பாதியோ குங்கும பூவும் அதில் பாதி கால் பாகத்தில் எட்டில் ஓர் பங்கும் அதில் பாதியோ, கால்பாகமோ மேற்கூறிய திரவ்யம் சேகரித்து

4. பச்சைகற்பூரம் இரண்டு பங்கு பொடி செய்து எல்லா இடத்திலும் தூபம் காண்பிக்கவேண்டும். எல்லா மந்திரங்களாலும் அபிமந்திரணம் செய்யப்பட்டதை அர்பணம் செய்யவேண்டும்.

5. நெய்கம்பள பூஜையில் கூறியபடி ஹோமம் செய்து சந்தனத்தை ஸம்ஸ்கரித்து பீடத்தோடுகூடிய லிங்கத்தை சந்தனத்தினால் சிவமந்தரத்தினால் பூசவேண்டும்.

6. நல்ல வாசனையுள்ள புஷ்ப மாலைகளினால் பீடம் லிங்கம் முதலியவைகளை அலங்கரிக்கவேண்டும். கம்பளி இல்லாமல் (சந்தனத்தினால்) நெய் கம்பளத்தைபோல எல்லாம் நடத்தவேண்டும்.

7. எல்லாவிதமான வியாதி உண்டான காலத்திலும், அத்புதமான காலத்திலும் இஷ்டத்தை அடையும் பொருட்டு ஆபிசாரம் செய்ததினால் ஏற்பட்ட குறை நீங்கவும் இந்த முறையில் செய்யவேண்டும்.

இவ்வாறு பங்குனி மாதம் சந்தனம் சாற்றும் முறையைக் கூறும் பன்னிரண்டாவது படலம்.

கருத்துகள் இல்லை: