சனி, 6 ஜூன், 2020

ததீசி _ இந்திரன்
வஜ்ராயுதம்
பரம் வீர் சக்ரா

ததீசி முனிவர் வேத கால மகாரிசிகளுள் ஒருவர்.

இவர் அதர்வண மகரிஷி மற்றும் சிட்டி தேவி ஆகியோரின் மகனாவார்.
அதர்வண வேதத்தை தந்தவர் அதர்வண மகரிஷி ஆவார்.

இவரது மனைவியின் பெயர் சுவர்ச்சா.

ததீசி - சுவர்ச்சா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர்
பிப்பலாத மகரிஷி ஆவார்.

ததீசி முனிவர் மிகச்சிறந்த சிவபக்தர்.

அவர், தம் மனைவியுடன் பல்லாண்டு காலம் நைமிசாரண்யத்தில் இன்றைய லக்னோ உத்திரபிரதேசம் அருகே பல காலம் தவம் புரிந்து சிவனைப் பூஜித்து வந்தார்.

ஒருநாள் க்ஷுவது என்ற மன்னனுடன் கருத்து வேறுபாடு காரணமாக இவர் போர் புரியும் சூழல் ஏற்பட்டது.

போரில் இவர் க்ஷுவது மன்னனின் பின்னந்தலையை தாக்க அவன் மூர்ச்சித்து வீழ்ந்தான்.

பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து முன்பை விட உக்கிரத்துடன் போரிட்டான்.

ததீசியின் உடலை க்ஷுவது மன்னன் பிளந்தான்.

ததீசி முனிவர் சுக்கிராச்சாரியாரின் உதவியை நாட அவர், இவரது காயங்களை தனது யோக சக்தியினால் குணப்படுத்தினார்.
உடலை சீர்படுத்தினார்.

பின்னர் இவருக்கு மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார்.

இருப்பினும் செய்த தவறுக்காக சிவபெருமானை நோக்கி தவமிருந்தார்.

இவரது தவத்தை கண்டு இரங்கிய சிவபெருமான் இவருக்கு காட்சி தந்து

1) இவரது எலும்புகள் வஜ்ஜிரத்தை (மின்னல்) போல உறுதியுடையதாக ஆகட்டும்.

2) இவரை எவரராலும் கொல்ல முடியாது

3) இவரை எவரும் துன்புறுத்தவும் முடியாது.

என்ற வரங்களை வழங்கினார்.

பாற்கடலில் அமுதம் கடைவதற்காக தேவர்களும், அசுரர்களும் முடிவு செய்தனர்.

தேவர்களும் தங்களின் ஆயுதங்கள் தீய சக்திகளிடம் சிக்காமல் இருக்க என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தேவரிஷி நாரதர் “தேவர்கள் தங்களின் ஆயுதங்களைப் ததீசி முனிவரிடம் கொடுத்து பாதுகாக்க சொல்வதே சிறந்தது” என்று கூறினார்.

தேவர்களும் தங்களின் ஆயுதங்களை ததீசியிடம் கொடுத்து “நாங்கள் திரும்பி வந்து கேட்கும் வரை ஆயுதங்களை பாதுகாக்க வைத்திருங்கள்” என்று கூறினர்.

முனிவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து ஆயுதங்களை தன்வசம் வைத்துக் கொண்டார்.

பாற்கடலை கடைந்த பின்பு வந்த அமிர்தத்தை தேவர்கள் பருகி சீரஞ்சீவி ஆயினர். தங்களின் ஆயுதங்கள் குறித்து மறந்து போயினர்.

ததீசி முனிவரும் தேவர்களிடம் அவர்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தார். நாட்கள் நகர்ந்தன. தேவர்கள் திரும்பி வரவில்லை.

ததீசி முனிவரும் தேவர்களின் ஆயுதங்களை பாதுகாக்க முடியாமல் தனது
தவ வலிமையால் அவற்றை திரவமாக்கி குடித்து விட்டார். தேவ ஆயுதங்களின் சக்தி முழுவதும் முனிவரின் முதுகெலும்பில் போய் சேர்ந்தது.

இந்நிலையில் விருத்தாசுரன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். அவனுடைய தவத்தினைப் பாராட்டி பிரம்மதேவர் அவர் முன் தோன்றினார்.

அவரிடம் இருந்து அசுரன் “எனக்கு உலகின் உலோகம் மற்றும் மரத்தால் ஆன ஆயுதத்தாலோ, பஞ்சபூதத்தாலும், எந்த உயிரிகளாலும் ஆபத்து ஏற்படக் கூடாது” என்ற வரம் வேண்டும் என்று கேட்டான்.

பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அருளினார்.

பிரம்மாவின் இந்த வரத்தால் மிகவும் கர்வம் கொண்ட விருத்ராசுரன் அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான்.

யாராலும் அவனை வெல்ல இயலவில்லை. ரிஷிகள் தேவர்களும் கூட அவனை வெல்ல முடியாமல் திகைத்தனர்.

எந்த ஆயுதம் கொண்டு அவனைத் தாக்கினாலும் மரணம் கிடையாது என்ற சாகாவரம் பெற்ற காரணத்தால் அவனை வீழ்த்த இயலவில்லை.

தேவர்கள் அனைவரும்
சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர்.

உலக உயிர்களின் துன்பம் கண்டு சிவன் அவர்களுக்கு அனுக்ரகம் செய்ய எண்ணினார். “ததீசி முனிவர் மனமுவந்து தனது முதுகெலும்பை கொடுத்தால் அதை ஆயுதமாக்கி அந்த அசுரனை நீ வென்று விடலாம்”
என்றார்.

நைமிசாரண்யம் அருகே ஒரு மலை மீது ஒரு காலில் நின்றபடியே தவம் செய்யும் ததீசி மகரிஷியை கண்டான்.

நேரே அவர் முன் சென்று நின்று கைதொழுதான். வெகு நேரம் கழித்துக் கண் திறந்த ரிஷி ததீசி இந்திரனை ஆச்சரியமாகப் பார்த்தார்.

தான் வந்த காரணத்தையும் சிவபெருமான் கூறியதையும் கேட்டபோது, “ஓ…. இதற்காகத் தான் அப்படியெல்லாம் நடந்ததா?” என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார். காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை அல்லவா…?

ததீசி முற்றும் துறந்தவர். இந்த உடல் மீது பற்றற்றவர்.

மேலும் உலக நன்மைக்காகவும் விருத்ராசுரன் அழிக்கப்படவும் தனது எலும்பு பயன்படுவதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

“தாரளமாக எடுத்துக்கொள் தேவேந்திரா…! இது நான் செய்த பாக்கியம்!!” என்கிறார் புன்முறுவலுடன்.

ததீசி முனிவர் சம்மதித்துவிட்டாலும் இவரது முதுகெலும்பை சேதமின்றி எப்படி எடுத்துக்கொள்வது என்று தேவேந்திரனுக்கு புரியவில்லை.

அவனது தவிப்பை உணர்ந்த ததீசி மகரிஷி, “தேவந்திரா பசுமாடு ஒன்றை அழைத்து வா…. என் உடல் முழுதும் உப்பை தடவு. நான் யோக நிஷ்டையில் ஆழ்ந்துவிடுகிறேன். பசுவை கொண்டு என் உடல் மீது உள்ள உப்பை நாவினால் அகற்றச் செய். சதை அப்படியே தனியே வந்துவிடும். பின்னர் நீ தேவையான எலும்பை சேதமின்றி எடுத்துக்கொள்ளலாம்…” என்கிறார்.

அதன்படியே தேவேந்திரன் ஒரு பசுவைக் கொண்டு ததீசி முனிவரின் சருமத்தை நாவினால் நக்கச் செய்து எவ்வித சேதமும் இன்றி முதுகெலும்பை எடுத்துவிடுகிறான்.

பின்னர் அதை ஆயுதம் செய்ய தேவலோக சிற்பி விஸ்வகர்மாவிடம் கொடுக்கிறான்.
விஸ்வகர்மா அந்த எலும்பை செதுக்கி வஜ்ராயுதம் செய்கிறார்.

அவர் அதற்காக அந்த எலும்பை செதுக்கும்போது அதன் ஒரு சில துளிகள் பூமியில் சில இடங்களில் விழுகின்றன.

அந்த துளிகளின் வீரியத்தால் அங்கு வைர சுரங்கங்கள் தோன்றுகின்றன.

பூமியில் வைர சுரங்கங்கள் தோன்றிய வரலாறு இது தான். வஜ்ராயுதத்தின் மற்ற துளிகள் பட்ட இடங்களில் நவரத்தினங்களில் மற்ற ரத்தினங்கள் தோன்றின.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற வஜ்ராயுதத்தை வைத்து விருத்ராசுரனை இந்திரன் வென்று விடுகிறான்.

வஜ்ராயுதம் இந்திரனின் வலிமை மிக்க ஆயுதமாகவும் விளங்கியது.

பலசாலிகளான கருட பகவானும், அனுமனும் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டனர்.

கருட பகவான் தனது ஒரு சிறகினை இழந்தும், அனுமன் மூர்ச்சை அடைந்தும் இவ்வாயுதத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

தற்போது இந்திய அரசின் உயரிய விருதான பரம் வீர் சக்ராவின் மேல் ததீசி முனிவரின் முதுகெலும்பு படம் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈவ் யுவோன் மேடே டி மரோஸ்
சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்.

சுவிட்சர்லாந்தில் ஒரு ஹங்கேரிய தந்தை ஆண்ட்ரே டி மேடே மற்றும் ரஷ்ய தாய் மார்த் ஹென்ட்ஸெல்ட் ஆகியோருக்குப் பிறந்த ஈவ் தனது ஆரம்பகால குழந்தைப் பருவத்தை ஜெனீவாவில் கழித்தார்,

1929 ஆம் ஆண்டில், அவர் இளம் வயதிலேயே , ​​தனது வாழ்க்கையில் விக்ரம் ராம்ஜி கானோல்கரை சந்தித்தார்.
காதல் கொண்டார்.
கானோல்கர் யுனைடெட் கிங்டமில் உள்ள சாண்ட்ஹர்ஸ்டில் உள்ள ராயல் மிலிட்டரி அகாடமியில் பயிற்சியளிக்கும் ஒரு இளம் இந்திய ராணுவ கேடட் ஆவார்

1932 இல், ஈவ் மற்றும் விக்ரம் லக்னோவில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்திய
மேஜர் ஜெனரல் விக்ரமுடன்
திருமணத்திற்குப் பிறகு ஈவ் சாவித்ரி பாய் கானோல்கர் ஆனார்.

சைவ உணவு உண்பவர் ஆனார் சரளமாக மராத்தி, சமஸ்கிருதம் மற்றும் இந்தி பேசக் கற்றுக்கொண்டார்.

அவர் இந்திய பாரம்பரிய இசை, நடனம் மற்றும் ஓவியம் கற்றுக்கொண்டார்.

அவர் எப்போதுமே ஒரு இந்தியர் “ஐரோப்பாவில் தவறாக பிறந்தார்” என்று கூறிக்கொண்டார்.
அயல்தேசத்தை சேர்ந்தவள் என்ற வார்த்தையை வெறுத்தார்கள்.

இந்து புராணங்களில் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார், இந்து வேதங்கள் பண்டைய வரலாறு
ஆகியவற்றை கரைத்து குடித்தார்.
இதுவே
பரம் வீர் சக்ராவின் படைப்பாளரான மேஜர் ஜெனரல் ஹிரா லால் அடால், பதக்கத்தை வடிவமைப்பதில் சாவித்ரி பாயின் உதவியைக் கேட்க வழிவகுத்தது,

இந்திரனுக்கு உதவி செய்த ததீசி முனிவர் தன் தியாகத்தால் கொடுத்த முதுகெலும்பே
விருத்ராசுரனை கொல்ல உதவியதை நினைத்து
தியாகத்தின் பதக்கத்தை
சாவித்ரி ஒரு எளிய ஊதா நிற நாடாவுடன் வடிவமைத்தார்.

பதக்க முகத்தில் பதிக்கப்பட்டிருப்பது இந்திரனின் வஜ்ராவின் நான்கு பிரதிகளாகும், இது ததீசியின் தியாகத்தை பிரதிபலிக்கிறது.
வஜ்ராக்களுக்கு இடையில் புடைப்பு- அசோக சின்னம். பதக்கம் வெண்கலத்தால் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை: