சனி, 6 ஜூன், 2020

கல் நாதஸ்வரம்

இசை உலகின் *கலை பொக்கிஷம்!*
கோயில் நகரம்  என்றழைக்கப்படும்   *கும்பகோணத்தில்* அமைந்துள்ள மகாமக *தீர்த்தவாரியின்* முதன்மை திருக்கோயிலான  *ஆதி கும்பேஸ்வரர்* கோயிலில் உள்ள *பெட்டகத்தில் பொக்கிஷமாக* பாதுகாக்கப்பட்டு வருகிறது *கல் நாதஸ்வரம் ஒன்று*.

*சிற்பியின்  கை  வண்ணத்தில்* கல் நாதஸ்வரமாக  *பிறந்து,* இசை வல்லுநர்களின் உயிர் காற்றுடன் கலந்து இதயத்தை மயங்க வைக்கும்  இன்னிசையாக  தவழ்ந்து *ராகங்களின் சுவடுகளை சுமந்து வரும்* இந்த  கல் நாதஸ்வரம்  *உருவாகி* ஆண்டுகள்   பல நூறு   இருக்கலாம் என்பது   ஆய்வாளர்கள்  கருத்து.

இந்தக் *கல் நாதஸ்வரம்,* சாதாரண  நாதஸ்வரத்தை  விட  *சுமார்  ஆறு மடங்கு கூடுதல்* எடையுடையது. 

சுமார் *இரண்டடி நீளமுடையதாகவும்*  வட  இந்தியக் குழல் இசைக்கருவியான  *ஷெனாய்  மாதிரியான* அமைப்பிலும்  உள்ளதாகும்.

*மூவாயிரம் ஆண்டுகள்* பாரம்பரியம் கொண்ட தமிழர் இசையானது *அதிகாலை துயில் எழுப்புவதில்* தொடங்கி,  *நள்ளிரவு உறங்கும் காலம் வரை* இசைக்கும் *தமிழர் மரபாகும்.*

*பருவத்துக்கு  ஏற்ற* கருவிகளை உருவாக்கி அதில் *உருவாகும்  இசையினை* இசைத்து இறைவனை வணங்கினர்  *ஆதி தமிழர்கள்* என்பது வரலாறு.  

மரத்தில் செய்வதற்கும் *முந்தைய ஆதிகாலத்தில்* இக்கருவியை *கருங்கல்லில் செதுக்கி வாசித்திருக்கலாம்* என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் *கணிப்பு.*

இதற்குச் சான்றாக, *ஆயிரம் ஆண்டுகளுக்கு* முற்பட்டதாகக் கருதப்படும் *கல் நாதஸ்வரம்* கும்பகோணம் *ஆதிகும்பேஸ்வரர்* ஆலயத்திலுள்ளது.

மற்றொரு கல் நாதஸ்வரம்: தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான  *ஆழ்வார் திருநகரியில்* உள்ள *ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும்* ஒரு *கல் நாதஸ்வரம்* உண்டு.

சுமார் *350 ஆண்டுகளுக்கு முன்* அரசாண்ட *கிருஷ்ணப்ப நாயக்கர்* என்ற மன்னரால் *இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட   இந்த கல் நாதஸ்வரம்.*

இப்போது *வெறும் காட்சிப்பொருளாக* மட்டுமே பாதுகாக்கபட்டு வருகிறது.
*கல் நாதஸ்வரத்தின் உடல் அமைப்பு* :

*முகப்பில்* உள்ள முக்கிய பாகமான *சீவாளி,* காவிரிக்கரையில் விளையும் *ஒரு நாணல் புல்லில்* செய்யப்படுகிறது.

கல் நாதஸ்வரத்தில், *உலவுப்பகுதி மூன்று* உறுதியான கருங்கற்களால் தனித்தனியாகச் செய்யப்பட்டு *வெண்கலப்பூணல்* இணைக்கப்பட்டு *வெங்கல அனசுடன்*   மிக நேர்த்தியாக  *உருவாகி உள்ளது     இந்த கல் நாதஸ்வரம்.*

"" *மரத்தால் செய்யப்படும்   நாதஸ்வரங்களில்*   ஏழு  ஸ்வரங்கள் இருக்கும், ஆனால், *கல் நாதஸ்வரத்தில்* 6 ஸ்வரங்கள் *மட்டுமே இருக்கும்.*

அதனால்   *சண்முகப்ரியா, கல்யாணி* போன்ற *பிரதி மத்திம ராகங்கள்* மட்டுமே *வாசிக்க முடியும்.* 

இதில்  *3முதல் 3- 1/2  கட்டை  சுதியில்*   வாசிக்க இயலும். 

மேலும், சங்கராபரணம், *கரகரப்பிரியா, தோடி* போன்ற *சுத்த மத்திம ராகங்களை* இந்த நாதஸ்வரத்தால் *வாசிக்க முடியாது.* 

முழுமையாகவும் அடர்த்தியாகவும் *மூச்சை உள்ளே செலுத்தினால்* மட்டுமே  இதில்  *நல்இசை  கிடைக்கும்* எனவும்   *பயிற்சி இருந்தால்* மட்டுமே *இதை வாசிக்க முடியும்''* என்கிறார் திருக்கோயில் *வித்வான்  சாமிநாதன் பிள்ளை*.

குடந்தையில் வாழ்ந்து *மறைந்த   நாதஸ்வர மேதை  கும்பகோணம்  பக்கிரி சாமி  பிள்ளை* சுமார் 60 வருடங்களுக்கு முன்   கும்பேஸ்வரர் ஆலய முக்கிய விழாக்களில்  இந்த *கல் நாதஸ்வரத்தை* வாசித்துள்ளார். 

அவருக்கு பின்   திருக்கோயில் நாதஸ்வர  வித்வானாக   இருந்த *குஞ்சிதபாதம்  பிள்ளை,* 30 ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வந்துள்ளார்.  

அவருக்கு பின் வாசித்து வருபவர் தற்போதுள்ள *நாதஸ்வர கலைஞர்*   ஆவார்.

""சுமார்   15   வருடங்களுக்கு முன் *நடிகர் திலகம் சிவாஜி கணேசன்*   மனைவி   கமலா கும்பகோணம்  ஆதிகும்பேஸ்வரர்  ஆலயத்திற்கு வந்தபோது      கல் நாதஸ்வரத்தினை இசைக்க சொல்லி  கேட்டு சென்றார்  என்பதையும்     அதன்பின்  ஒரு விழா காலத்தில் நடைபெற்ற  *சப்தாவர்ணம்*  எனும் திருநாள் விழாவில்   திருக்கோயில்   *இசைக்கலைஞர்*  இதனை வாசித்தார். 

அவரே மறுபடியும் *29 செப்டம்பர் 2017* அன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு *கல் நாதஸ்வரத்தில்* ஒரு மணி நேரம் வாசித்தார்'' என்று திருக்கோயில் நிர்வாக  அதிகாரி  தெரிவித்தார்:

சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர்.

*ஸ,ரி,க,ம,ப, த,நி* ஆகிய ஏழு ஸ்வரங்களும் ஆகாயத்திலிருந்து ஒலிக்கக் கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று  மஹாபாரதம் கூறும்.

ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன.

இசை ஒலியைக் கூர்ந்து நுட்பமாகக் கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள்.

*சட்ஜமம்* மயில் அகவுதலையும்;
*ரிஷபம்* மாடு கத்துதலையும்;
*காந்தாரம்* ஆடு கத்துவதையும்;
*மத்யமம்* அன்றில் பறவை கூவுதலையும்;     *பஞ்சமம்* குயில் கூவுதலையும்;
*தைவதம்* குதிரை கனைப்பதையும், *நிஷாதம்* யானை பிளிறுவதையும் ஒத்து இருக்கிறது என்று தமிழர்கள் இனம் கண்டனர்.
👏👏👏👏👏
படித்ததில் வியந்தது..
கருத்துகள்
😇😇😇😇😇
                               🤗🤗🤗🤗🤗🤗

கருத்துகள் இல்லை: