புதன், 29 ஜூலை, 2020

*நம் உடலில் வாசம் செய்யும் சித்த அஷ்ட லஷ்மி* (ரகசியம்) தெரியுமா?

நம் பாதங்களில் வசிப்பவள் *ஆதிலஷ்மி.*

நம் பாதம் பிறர் மீது தெரியாமல் பட்டால் சிவ சிவ எனக் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் #
ஆதிலஷ்மி நம்மை விட்டு விலகி விடுவாள்.

நம் முழங்கால் பகுதியில் வசிப்பவள் *கஜலஷ்மி*.

காலை நீட்டியபடி புத்தகம் படிப்பதாலும்
நெல் .. அரிசி இவைகளை கால்களால் மிதிப்பதாலும் நம்மை விட்டு *கஜலட்சுமி விலகுகிறாள்..!!

நம் இடுப்புக்கு கீழ் பகுதியில் *வீர்யலஷ்மி*..!!
 வசிக்கிறாள்.

பிறரை நித்திப்பதன் மூலம் சாபம் பெறுபவர்களை விட்டு இந்த *வீர்யலஷ்மி விலகுகிறாள்.

நம் இடது தொடையில் வசிப்பவள் *விஜயலஷ்மி.*

 இடது தொடை எப்போதும் மனைவிக்குச் சொந்தம். எனவே
மனைவியை விடுத்து பிறன்மனை நோக்கினால் இந்த விஜயலக்ஷ்மி* விலகி விடுவாள்.!!

வலது தொடையில் வசிப்பவள் *சந்தானலஷ்மி.*..!

பெற்றோர்கள்  கன்னிகாதானம் செய்யும்போது பெண்ணை வலது தொடையில் அமர வைக்க வேண்டும்.
இடது தொடையிலோ .. இரு தொடைகள் இடையே அமர வைத்தால் இந்த *சந்தானலஷ்மி விலகி விடுவாள்...!!

நமது வயிற்றுப் பகுதியில் வசிப்பவள் *தான்யலஷ்மி.*..!

எச்சில் உணவு... ஊசிப் போன உணவு இவைகளை ஏழைக் களுக்கோ .. பிறருக்கோ கொடுத்தால் இவள் விலகி விடுவாள்.

நமது நெஞ்சுப் பகுதியில் வசிப்பவள் *தைரியலஷ்மி..*!!

நெஞ்சிலே நஞ்சை வைத்து பிறரைக் குறை கூறி குடும்பத்தை கெடுப்பவர்களை விட்டு இவள் விலகுகிறாள்.

நமது கழுத்துப் பகுதியில் வசிப்பவள் *வித்யாலஷ்மி...*!!

கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணியாதவனும் .. பூணூல்... தாலி... என குடும்ப பராம்பரிய சின்னத்தை
 அணியாதவர்களை விட்டு இவள் விலகுகிறாள்.

நம் நெற்றியின் மத்தியில் வசிப்பவள் *செளபாக்யலஷ்மி.!!*

இவள் நம் புருவத்தை சிரைப்பதாலும் மஞ்சள் கலந்த குங்குமம் விட்டு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதாலும்
வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருப்பதாலும்
வீபூதி .நாமம் .. அணியாவிட்டாலும் நம்மை விட்டு விலகுகிறாள்..

*பல தவறுகள் செய்து நம் அங்கத்தில் இருக்கும் லஷ்மிகளை விரட்டி விட்டால் நாம் எப்படி செழிப்பாக வாழ முடியும்.*      .

கருத்துகள் இல்லை: