புதன், 29 ஜூலை, 2020

பிரம்மஹத்தி பரிகாரம் - 2

நல்லெண்ணெய்-1/2 லிட்டர்;

விளக்கெண்ணெய்-1/2 லிட்டர்;

நெய் 1/2 லிட்டர்;

இலுப்பை எண்ணெய் 1/2 லிட்டர்;

வேப்பேண்ணெய்-1/2 லிட்டர்;

மேல் கூறிய ஐந்துவகை எண்ணெய் வகைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு அமாவாசை தினத்தன்று, மாலை ஐந்து மணிக்கு ஒரு சிவன் கோவிலில் மேற்கூறப்பட்டபடி கலந்து வைத்துள்ள எண்ணெயை ஊற்றி விளக்கேற்றவேண்டும். அது தவிர கீழ்க்கண்ட இடங்களிலும் அந்த எண்ணெயை அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும்.

1. பலிபீடம்;

2. கொடிமரம்;

3. கொடிமர நந்தி

4.அதிகார நந்தி;

5. வாயில் கணபதி;

6. துவார பாலகர்;

7.சூரியன், சந்திர பகவான்;

8. சமயக் குரவர்கள்;

9. சப்த கன்னிமார்கள்;

10. கன்னிமார் அருகில் உள்ள கணபதி;

11. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதி;

12. சுர தேவர்;

13. ஸ்வாமி அய்யப்பனின் சாஸ்தா பீடம்;

14. தட்சிணாமுர்த்தி

15. கால பைரவர்;

16. சண்டிகேஸ்வரர்;

17. சனீஸ்வரர்;

18. சிவன் சன்னிதி;

19. அம்பாள் சன்னிதி தவிர மற்ற துணை தெய்வங்கள்.

மேற்கூறப்பட்டவிதமாக விளக்கேற்றிவிட்டு, அர்ச்சனையும் செய்யவேண்டும். அர்ச்சனை செய்வது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த முறையில் அதாவது சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும், வெற்றிலை பாக்கு, பழம், பூ, ஊதுவத்தி, சூடம், தேங்காய், அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் பூமாலை ஆகிய பொருட்களை வைத்து அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த தீப பரிகாரத்தை குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் இணைந்து செய்தால், உடனே பலன் கிட்டும். இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்தால் போதும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி சிவபெருமான் நற்பலன்களை தொடர்ந்து வழங்கிடுவார்.

கருத்துகள் இல்லை: