வெள்ளி, 29 மே, 2020

நாராயண ! நாராயண !

*ஒரு முறை நாரத -மகரிஷி கவலையுடன் காணப்பட்டார்.*

அவரது கவலையை கண்ட அன்னை மஹாலக்ஷ்மி மகனே ஏன் கவலையாக இருக்கிறாய் என்று கேட்டாள்-.

நாரதர் --தாயே நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில் முடிந்தாலும் அந்த நேரம் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக விளங்குகிறேன் அதை எண்ணித்தான் வருத்தமாக உள்ளது தாயே என்றார் --

மஹாலக்ஷ்மி ---நாரதா அப்படி என்றால் ஒன்று செய் --ரிஷிகேசம் சென்று புனித கங்கையில் நீராடி விட்டு வா உன் கவலை யாவும் போய்விடும் பாரேன் என்றாள்--

நாரதரும் ரிஷிகேசம் வந்தார் .

கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது பல வண்ணங்கள் கொண்ட விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம் ---என்ன நாரதரே சௌக்கியமா என்றது ---

பேசும் மீனை அதிசியமாக பார்த்துக்கொண்டே நாரதர் ---

ம்ம் எதோ சௌக்கியமாக இருக்கிறேன் நீ நலமா மீனே என்று நாரதர் திருப்பி மீனிடம் கேட்டார் --

-மீன் கொஞ்சம் சலித்து கொண்டே நானும் எதோ நலமாக இருக்கிறேன் நாரதரே என்றது ---

நாரதர் --ஏன் மீனே உன் சலிப்புக்கு என்ன காரணம் ஏதாவது தேவையா என்று சொல் நான் வரவழைத்து தருகிறேன் என்றார் --

மீன்--நாரதரே என் நலத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை ஆனால் ---

நாரதர் ---ஆனால் ---

மீன் ---ஒரே தாகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் தான் கிடைக்க மாட்டேங்கிறது அதுதான் என் சலிப்புக்கு காரணம் என்றது---மீன் ---

-மீன் கூறியதை கேட்டதும் -- நாரதருக்கு கோபம் வந்தது--என்ன மீனே என்னிடமே விளையாடுகிறாயா ?!!

நீருக்குள் நீந்தி கொண்டே தாகத்துக்கு நீர் கிடைக்கவில்லை என்று என்னிடம் சலித்து கொண்டு சொல்கிறாயே உன் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது ?!!

மீன் --சிரித்துக்கொண்டே ---நீர் மட்டும் என்னவாம் பேரானந்தம் தரும் நாராயண மந்திரத்தை உம்முள் வைத்துக்கொண்டே கவலையாக எதோ நலமாக இருக்கிறேன் என்று கூறுகிறீரே நீர் கூறுவது மட்டும் நியாயமோ என்று கேட்க

நாரதர் வியப்புடன் மீனை பார்க்க --மீன் உருவம் மறைந்து திருமால் நாரதர் முன் காட்சியளித்து

நாரதா ---என் பெயரை கூறி கொண்டு நீ செய்யும் செயல்கள் யாவும் நன்மையில் தானே முடிவடைகிறது ---

கலகம் என்பது அவர் --அவர்கள் மனநிலையை பொறுத்து உள்ளது ---அதை நினைத்து நீ வருந்தி என்ன பயன் --யாவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணி தானே நீ உன் கலகத்தை துவக்குகிறாய் --

உன் நோக்கம் உயர்வாக இருக்கும் போது அதில் நடக்கும் செயல்களை கண்டு நீ ஏன் வருந்தவேண்டும் ---

என்று கூறி நாரதரை திருமால் ஆசிர்வதித்து விட்டு மறைந்து போனார் .

நாரதரும் உள்ளம் தெளிவடைந்து புனித-கங்கையில் நிம்மதியாக --ஆனந்தமாக நீராடினார் ---என் கருத்து ---என்ன கவலையாக இருந்தாலும் சரி கூறுவோம் நாராயண மந்திரம் --அதுவே நாளும் பேரின்பம் --யாவும் நலமாகவும் முடியும் .

ஓம் நமோ நாராயணா !

கருத்துகள் இல்லை: