ஞாயிறு, 10 மே, 2020

தசமகா வித்யை

பராசக்தியின் பத்து அம்சங்களை தசமகா வித்யை என்பர். முதல் அம்சமான காளி காலச் சக்கரத்தின் கடவுள். தாரா பிரபஞ்சத்தின் தோற்றத்துடன் தொடர்புடைய பொன்னிற தேவதை. சோடசி என்றும் பதினாறாய் காட்சி தருபவள் அழகின் அதிதேவதை. புவனேஸ்வரி உலகில் அனைத்தின் இயக்கங்களுக்கும் மூல காரணமானவள். ஐந்தாம் வித்யையான பைரவியை வணங்கினால் ஆசைகளிலிருந்து விடுபடலாம். தன் தலையையே அறுத்து கையில் பிடித்துக்கொண்டிருக்கும் சின்ன மஸ்தா பொருட்களும் காட்சிகளும் தோன்றி மறையும் தொடர் நிகழ்வுக்குப் பொறுப்பானவள். உலக அழிவுக்குப்பின் புகை மட்டும் சூழ்ந்திருப்பதைக் குறிப்பவள் தூமாவதி. பொறாமை, வன்முறை, வெறுப்பு போன்றவற்றை நம்மிடமிருந்து அகற்றுபவள் பகளாதேவி. அனைவரின் மேலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவள் மாதங்கி. பயத்தைப் போக்கி வரங்களையருளும் பத்தாவது அம்சமாகத் திகழ்பவள் கமலா.

கருத்துகள் இல்லை: