வெள்ளி, 4 அக்டோபர், 2019

பித்ருக்கள் பூஜை
{நம் மன்னர்களுக்கு செய்ய வேண்டிய பூஜை}

1:ஒவ்வொரு மனிதனும் இயற்ற வேண்டிய மிக முக்கியமான கடமை பித்ருக்கள் பூஜை ஆகும்.

2:பித்ருக்களைப் பூஜிப்பதற்குத் தினமும் சில நேரங்கள் மற்றும் திதி, காலம்,ஆகியவை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலூம் ஒவ்வொரு தினமும் அவர்களை நன்றியுடன் நினைத்து வணங்கி வரவேண்டியது அவசியமாகும்.

3:பித்ருக்கள் கருனையே வடிவானவர்கள் முக்கியமாக நமது பெற்றோர்கள்  மறைந்த தினம்,அமாவாசை, மாதப்பிறப்பு, சூரிய,சந்திர கிரகண காலங்கள் ஆகியவற்றின் போது பூஜை செய்ய வேண்டியது அவசியம்.

4:சுவரின் மேல் எறியும் பந்து மீண்டும் நம்மையே வந்து அடைவது போல் நாம் பக்தியுடன் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் நம்மையே மீண்டும் வந்து அடையும் பித்ருக்களின் ஆசியாக இந்த ஆதியின் சக்தி அளவிடற்கரியது.

5:குடும்பத்தில் தொடர்ந்து வரும் கடன் பிரச்சனைகளும், நோய்களும்,நிம்மதிகுறைவும், விவாஹங்கள் தடைபடுவதும் பித்ருக்களை உள்ளன்புடன் பூஜிப்பதனால் உடனடியாக நீங்கும்.

6:பித்ரு பூஜையை அதிகபணம் செலவு செய்து தான் செய்ய வேண்டும் என்பதில்லை. அவரவர்கள் சக்திக்கு ஏற்ப செய்தாலே பித்ருக்கள் திருப்தி அடைந்து உள்ளம் பூரித்து மகிழ்வார்கள்.

7:கையில் மருந்து இருக்க அதனை உண்ணாமல் உடல் உபாதைகளுடன் போராடும் நோயாளியைப் போல் பித்ரு பூஜை என்ற அளவற்ற சக்தி நம் கையில் இருக்க அதனை விடுத்து வேறு பரிகாரங்களை தேடி ஓடுவது கண் இருந்தும் குருடனைப் போல நடந்தது கொள்வதற்குச் சமமாகும்.

8:பித்ருக்களை பூஜிப்பதும் புண்ணிய காலங்களில் திதி, தர்பணம்,ஆகியவை செய்வதும் வாழ்வின் இருதி  காலம் வரை அனைத்து நன்மைகளையும் அளிக்கும். பித்ருக்களை மறப்பவன் மஹாபாபி ஆகிறான்.

9:குடும்பத்தில் விவாஹம் போன்ற காரியங்கள் நிகழும் போது முதலில் பபித்ருக்களை வழிபடுவது அவசியமாகும். அவர்களை பூஜித்து அவர்களது ஆசியையும் அனுமதியையும் பெற்ற பின்னரே விவாஹத்தை நடத்த வேண்டும்.

10:இந்த ஆசீர்வாதம் கிரக தங்களையும் செய்வினை போன்ற கொடிய அனுபவங்களையும் உடனடியாக நீக்கக் கூடிய சக்தி வாய்ந்தது ஆகும்.

11:திதியின் போது பசு,நெய், தயிர், பால், தேன்,முப்பழங்கள் {மாம்பழம்,பலாப்பழம், வாழைப்பழம்}ஆகியவற்றினால் பித்ருக்கள் அளவற்ற திருப்தியும் மகிழ்சியும் அடைகிறார்கள்.

12:சிராத்த தினத்தன்று அதற்கு முன் தினமும் ஸ்தீரி சேர்க்கை பிறர் விடுகளில் புசிப்பது க்ஷவரம் செய்து கொள்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். முடிந்தமட்டில் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களையே பித்ரு பூஜைக்கு அழைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: