வெள்ளி, 27 செப்டம்பர், 2019

மயிலாடுதுறை மாவட்டத்தில்  கோழிகுத்தி என்ற கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ வானமுட்டி பெருமாள் கோவிலில் இந்த மாதம் முப்பதாம் தேதி சனிக்கிழமை விஜயதசமி அன்று காலை பன்னிரெண்டு மணியளவில் அக்னியால் அம்பு எரியும் திருவிழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்படவுள்ளது. இந்த அம்பு எரியும் விழாவில் கலந்து கொண்டு தரிசித்தால் நாம் செய்த பாபங்கள் போகும். எரியும் அம்பு மூலம் நமது பாபங்கள் விலகும். நம்மிடம் உள்ள கஷ்டங்கள் எல்லாம் விலக்கி நல் வழி படுத்துவார் வானமுட்டி பெருமாள். தீராத வியாதிகள் எல்லாம் நீங்கப்பெறலாம்.
இந்த விழாவானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆகையால் இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி நாம் செய்த பாபங்களை போக்கிக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அனைவரும் வருக வானமுட்டி பெருமாளின் அருளை பெருக. இக்கோவில் சுமார் 800 வருடங்கள் பழமையானது. மூலவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் ஸ்வாமிக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்வாமிக்கு அதி விஷேசமான தைலம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 800 வருடங்களாக  ஈரமாகவே இருக்கின்றார். வேருடன் கூடிய மூலவர் அதனால் ஸ்வாமி வளர்ந்து கொண்டே இருப்பது மிகவும் அரிதான ஒன்று. அதனால் தான் என்னவோ இவருக்கு வானமுட்டி பெருமாள் என்ற திருநாமமோ என்று என்று கிறேன்.

கருத்துகள் இல்லை: