ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

கருப்பறியலூர் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயத்தின் அவல நிலை

கருப்பறியலூர்- நாகை பட்டினம் மாவட்டம்/ மயிலாடுதுறை வட்டம் / பட்டவர்த்தியில் இருந்து பிரிந்து இடது புறம் செல்லும் வழியில் தலைஞாயிறு இன்றைய பெயர் திருஞானசம்பந்தர்/சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்

உலகத்தில் கொகுடிக்கோயில் அமைப்பில் உள்ள அரிய வகையான புராதனமான சிவாலயம்

கும்பாபிஷேகம் நடைபெறாமல்
65 ஆண்டுகள் ஆகி விட்டது கடைசி கும்பாபிஷேகம் 1953 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் சுப்ரமணிய தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அவர்களின் அருளாட்சியில் நடை பெற்றது

முறையாக ஆறு காலம் சுவாமி** குற்றம் பொறுத்த நாதர்** அவர்களுக்கு பூசை இல்லை

குருக்கள் சிவாச்சாரியார் மேல் குறை இல்லை மயிலாடுதுறையில் இருந்து தலைஞாயிறு (கருப்பறியலூர்) வந்து செல்ல 38 கிலோ மீட்டர் ஆகும் குருக்களுக்கு மாதம் சம்பளம் 3800 ருபாய் இதனால் அவர் ஒரு கால பூசை மட்டுமே நடை பெறுகிறது  தினமும் பெட்ரோல் செலவு 100 ருபாய் ஆகிறது எப்படி குருக்கள் 3900 சம்பளம் வைத்து தன்னுடைய குடும்பத்தை ஜிவனாம்சம் செய்வார் ???

மேலைக்காழி என்று சிறப்பாக போற்றப்படும் கருப்பறியலூர் வெளி பிரகாரம் மதில் சுவர்கள் உடைந்து திருடர்கள் திருமேனி திருடுவதற்காக வசதியாக உள்ளது

மலைக்கோவிலில் அம்மையப்பராக சுவாமி அம்பாள்  இருந்த சான்றாக கருப்பறியலூர் தேவார‌ பதிகத்தில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் - மடம்படு மலைக்கு இறைவன் மங்கை ஒரு பங்கன் .2 ஆம் திருமுறை 4 வது பாடல்  என்று திருஞானசம்பந்தர் சுவாமிகள் போற்றிய

மலைக்கோவில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து பக்தர்கள் தலையில் விழும் நிலையில் உள்ளது மரங்கள் முளைத்து மலைக்கோவில் சிதலம் அடைந்துள்ளது

மலைக்கோவில் உள்ள சட்ட நாதர் அவர்கள் திருமேனி சுற்றி  கருப்பு வர்ணம் பூசப்பட்டது போல் உள்ளது

சட்டநாதரை தரிசிக்க செல்லும் மரப்படிக்கட்டு உடைந்து உள்ளது

சுவாமி விமானங்கள் / கோவில் மேல் மரங்கள் முளைத்து சிவாலயம் அழிந்து கொண்டு வருகிறது

கருப்பறியலூர் நந்தனவனத்தில் - கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் புகழ்பெற்ற நந்தனவனம் முழுவதும் பாலைவனமாக உள்ளது

மற்றும் சுவாமிக்கு சந்தனம் அரைக்கும் இடம் குப்பை தொட்டியாக காட்சி தருகிறது

கருப்பறியலூர் சிவாலயத்தை உடனே கும்பாபிஷேகம் செய்து பாதுகாக்க வேண்டும் தருமபுரம் ஆதீனம் & இந்து சமய அறநிலையத் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவரகளே தமிழக முதலமைச்சர் என்று பெருமையாக பேசி எந்த பயணம் இல்லை தமிழ் நாட்டின் புராதனமான சிவாலயங்களை பராமரிப்பு செய்யாமல் என்ன செய்து கொண்டு உள்ளது அரசு சிவாலயங்களின் சொத்துக்களை  ஐந்து வருடங்களில் எவ்வளவு சுருட்டலாமோ அவ்வளவு திருடி கொண்டு உள்ளதா தமிழ் நாடு அரசு பதில் தர முடியுமா முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களே ?? பயம் என்பது எங்களுக்கு கிடையாது ஏன் என்றால் நாங்கள் பிறப்பு இறப்பு இல்லாத சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள்

வீரத் திருத்தொண்டர் சத்தியார் 8489061461

கருத்துகள் இல்லை: