ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

மயிலாடுதுறை அழிவின் விளிம்பில்

திருநின்றியூர் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம் அழிந்து விட்டது
நாகை பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் ஊர் பெயர் திருநின்றியூர்

திருஞானசம்பந்தர் சுவாமிகள்/திருநாவுக்கரசர் சுவாமிகள்/சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்

பரசுராமர்/ஜமதக்னி/ அகத்தியர்/இந்திரன்/மகாலட்சுமி/ஐராவதம்/பசு ஆகியோர் வழிபட்ட திருவருள் பெற்ற சிவாலயம்

கும்பாபிஷேகம் நடைபெற்று 63 ஆண்டுகள் ஆகி விட்டது இதனால்  (சர்வ நாசம்) நாடு நாசமாகும்/உயிர்கள் துன்பத்தை அடையும் / தர்மம் அழியும்/ அதர்மம் ஓங்கும் /

கிழே இணைத்துள்ள அனைத்து புகைப்படங்கள் பார்க்க வேண்டும்

இவ்வளவு சிறப்பான 1500 வருடம் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம் அழிந்து கொண்டு வருகிறது பாதுகாக்க மயிலாடுதுறையில் உள்ள மக்களுக்கு எண்ணம் இல்லை எல்லாம் சுயநலம் மயிலாடுதுறையில் மனிதர்களே இல்லையா .‌ நான் தமிழின் என்று மார் தட்டும் தமிழர் எங்கு சென்றார்கள் ??

திருநின்றியூர் சிவாலயம் சுவாமி விமானம்/ அம்பாள் விமானம் /மதில் சுவர்கள்/ இராஜ கோபுரம் / அனைத்தும் அழிந்து விட்டது இதற்கு‌ மேல் அழிய ஒன்றும் இல்லை இது என்ன சிவாலயமா ???

மடப்பள்ளி முழுவதும் கருங்கல் திருப்பணி இன்று கட்டினால் 1 கோடி செலவு ஆகும் அதை பராமரிப்பு செய்யாமல் மடப்பள்ளி சுத்தமாக அழிந்து விட்டது இனிமேல் மடப்பள்ளி புதிதாக 1 கோடி செலவு செய்து கட்ட வேண்டும்

திருநின்றியூர் சுவாமி வாகனங்கள் அனைத்து முறையாக பராமரிப்பு செய்யாமல் அனைத்து வாகனங்களும் அழிந்து விட்டது இனிமேல் வாகனங்கள் செய்ய 25 லட்சம் வேண்டும் இனிமேல் வாகனங்கள் செய்ய வேண்டும் என்று.யார் வர போகிறார்கள் பாவம் உபயதாரர்கள்?

தல விருட்சம் மரம் இல்லை விளா‌மரம்

சிவாலயத்தின் மதில் சுவர்கள் எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும்/ இராஜ கோபுரம் இடிந்து பக்தர்கள் தலையில் விழும் நிலையில் உள்ளது / வெளி பிரகாரம் விநாயகர்/சுப்ரமணியர் விமானங்கள் அழிந்து கொண்டு வருகிறது

திருநின்றியூர் சிவாலயத்தில் சொத்து மதிப்பு 360 வேலி 7 ஆம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன்னுடைய தேவாரம் 7ஆம் திருமுறை 65 பதிகம் 3 வந்து பாடலில் தெளிவாக கூறி உள்ளார்

 ****மொய்த்த சீர்((*முந்நூற் றறுபது வேலி*))
  மூன்று நூறுவே தியரொடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி
  ஓங்கு நின்றியூர் என்றுனக் களிப்பப்
பத்தி செய்தவப் பரசுரா மற்குப்
  பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்குஞ்
  செல்வத் தென்றிரு நின்றியூ ரானே**** 7.65.3

திருநின்றியூர்  360 வேலி (7200 மா / 2400 ஏக்கர்) நிலம் உடைய சிவாலயம் ஏன் 63 ஆண்டுகள் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது  இவ்வளவு கோடிக்கணக்கான பணம் கொண்ட சிவாலயம் ஏன் அழிந்து விட்டது ஏன் தருமபுரம் ஆதீனம் இந்த சிவாலயத்தை கண்டு கொள்ளாதது ஏன் ?

திருநின்றியூர் சிவாலயத்திற்கு சொந்தமான அரசர்கள்/ புண்ணியவான்கள் தந்த ( 7200 மா / 2400 ஏக்கர் )நிலம் எங்கே போயிற்று தமிழ்நாடு அரசு இந்த சமய அறநிலையத்துறை எதற்கு உள்ளது சிவாலயங்களின் சொத்துக்களை திருடி தின்பதே தமிழ்நாடு அறநிலையத்துறை வேலையா ??

சிவாலயங்களை பராமரிக்க தவறிய தமிழ்நாடு அரசு ஒழிய வேண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிவபெருமான் நிறைய துன்பங்களை தர வேண்டும்

தருமபுரம் ஆதீனம் விரைவில் திருநின்றியூர் சிவாலயத்தை பாதுகாக்க வேண்டும் / இது மட்டும் இல்லாமல் உங்களிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் பணத்தை வைத்து பல சிவாலயம் திருப்பணி செய்ய வேண்டும் என்பது சிவனடியார்கள் விருப்பம்

மனிதனே நேரத்தை விணாக்காது ஒருவனுக்கு ஒரு சிவாலயம் என்ற பாதுகாக்க நீ முன்வரவில்லை என்றால் கடைசியில் சான்று காண்பிக்க உனக்கு மண் கூட மிஞ்சாது

வீரத் திருத்தொண்டர் சத்தியார் 8489061461

கருத்துகள் இல்லை: