திங்கள், 26 ஆகஸ்ட், 2019

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
  நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
  பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
  மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?
  அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
 
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
  தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
  காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
  ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
  ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.
------------------------------------------

கருத்துகள் இல்லை: