வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

274 சிவாலயங்கள் : அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : சவுந்தர்யேஸ்வரர்
அம்மன் : திரிபுரசுந்தரி
தல விருட்சம் :  புன்னை
தீர்த்தம் : செங்கழுநீர்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருநாரையூர்
ஊர் : திருநாரையூர்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்
      
தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான் பூவினை மேவு சடைமுடியான் புடைசூழப் பலபூதம் ஆவினில் ஐந்துங்கொண் டாட்டு கந்தான் அடங்கார் மதில்மூன்றும் ஏவினை யெய்தழித் தான்கழலே பரவா எழுவாமே. திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 33வது தலம்.  
      
விழா : வைகாசி திருவாதிரை, ராஜராஜனுக்கு பதிமூன்று நாள் திருவிழா, விநாயகர் சதுர்த்தி.  
      
சிறப்பு : முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் ஆறு படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும். பொல்லாப்பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள் பாலிக்கிறார்.  
      
திறக்கும் நேரம் : காலை மணி 06:00 முதல் 12:00 மணி வரை, மாலை 04:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை திறந்திருக்கும். 
அருள் மிகு சவுந்தர்யேஸ்வரர் கோயில், திருநாரையூர் : 608 303, காட்டு மன்னார் கோவில் வட்டம், கடலூர் மாவட்டம். போன்:+91- 94425 71039 
     
தகவல் : மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.  
      
பெருமை : நம்பியாண்டார் நம்பியின் தந்தை இங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்ப இதைப் பார்ப்பார். அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா? என அவருக்கு திடீரென சந்தேகம் வந்தது. தன் தந்தைக்கு பின் நம்பி கோயிலுக்கு பூஜை செய்யும் காலம் வந்தது. அப்போது தன் தந்தையை போல் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து பிள்ளையாரை சாப்பிடும் படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் சாப்பிட்டார்.
இதை நம்பாத மன்னன் ராஜராஜ சோழன் பலவகையான பலகாரத்துடன் நேரில் இக்கோயிலுக்கு வந்து பிள்ளையாருக்கு நம்பி மூலம் நைவேத்தியம் வைக்க கூறினான் . ஆனால் பிள்ளையார் சாப்பிடவில்லை. அப்போது நம்பி பிள்ளையார் மீது இரட்டை மணிமாலை பாசுரங்களை மனமுருகப் பாடினார். மனமிரங்கிய பிள்ளையார் ராஜராஜனின் நைவேத்தியத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். மூவர் பாடிய தேவாரப்பாடல்களைத் தொகுத்தவரும் இவரே. இவரது சிலை கையில் கலசம் ஏந்திய நிலையில் உள்ளது. தேவாரத்தை தொகுக்க பாடுபட்ட ராஜராஜ சோழனின் சிலையும் உள்ளது.
முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் ஆறு படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி  விநாயகரின் ஆறாவது படை வீடாகும்.  
      
ஸ்தல வரலாறு : கோபக்காரரான துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன் ஒருவனை நாரையாகும் படி சாபமிட்டார். கந்தர்வன் தவறை மன்னிக்கும் படி வேண்டினான். முனிவர் மறுத்து விட்டார். எனவே இத்தல சிவனிடம் முறையிட்டு கதறினான். சிவன் அவனிடம் தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்கு தீர்த்தம் கொண்டு வந்து தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். நாரை வடிவிலிருந்த கந்தர்வனும் தன் சக்தியால் அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து அபிஷேகம் செய்தான். இதன் பிறகு சிவன் நாரைக்கு முக்தி கொடுத்தார்.  

கருத்துகள் இல்லை: