வெள்ளி, 5 ஜூலை, 2019

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி  ஸ்வாமிகளின்  உபதேசங்கள்  

ஞானமலர்கள்,, விவேகமும்  வைராக்யமும்,,, ஆத்ம ஞானமும்  அதன் ஸ்தானங்களும்,,,,,

நமது பாரத தேசத்தின் அனாதியான  மதம் வைதீக மதம். இதனை சநாதன மதம் என்பர். மற்ற மதங்கள் எவரேனும் ஒரு மஹானால் தொடங்கப்பட்டிருக்கும். அதனால்
அந்த மதத்திற்கு அவரது பெயரை  வைத்திருப்பார்கள். அந்த மதம்  ஆரம்பித்த நாட்குறிப்பு உண்டு. நம்மதம் ஒன்றே அநாதியானது. வேதத்தை அடிப்படையாகக் கொண்டபடியால் வைதிக மதம் என்றும் என்றும் நிலைத்திருக்கக் கூடிய தானதாலும் தொடங்கியவர்  இல்லாமையாலும் ஸநாதனம்  என்றும் வழங்குவர்,,, இந்து மதம்  என்ற பெயர் கூட  இடத்தைக்  குறிப்பதாக அமைந்துள்ளது,,, இதற்கு ஆதார நூல் வேதம்,,,,,

வேதம் நான்கு,,, நடக்கிற  கலியுகத்தின் முன் யுகமாகிய  துவாபரம் வரை அது ஒரே வேதமாக   இருந்தது. துவாபரத்தின் இறுதியில் மனிதர்களின் அறிவும் ஆற்றலும்
குறையத் தொடங்கியதால்  வேதவியாசர் அதனை நான்காகத்  தொகுத்தார். 

வேதம் ஒலி  வடிவமானது. அதுவும்  அநாதி என்றும் ஒலி வடிவில்  ஆகாயத்தில் நிலைத்திருக்க
கூடியது. ஆகாயத்திற்கும் ஒலிக்கும்  ஒரு நிலைத்த தொடர்பு உண்டு. அலை வடிவில் இருந்த வேத  ஒலியை மஹரிஷிகள் தியானத்தில்  அமர்ந்து கேட்டனர். தியானமும்
தவமும் காரணமாக அவர்களுடைய  காதுகளுக்கு அந்த தெய்வீக வேத  ஒலியைக் கேட்கின்ற திவ்ய  ஸ்ரவண சக்தி கிட்டியது! ஒவ்வொரு  மந்திரத்திற்கும் அப்படி  திவ்ய
ஸ்ரவணம்  செய்த  ரிஷி  உண்டு அதற்குள்ள சந்தம்  உண்டு தேவதை  உண்டு,,,,

தொடரும்,,, ஜய  ஜய  சங்கர  ஹர  ஹர  சங்கர

கருத்துகள் இல்லை: