செவ்வாய், 30 ஜூலை, 2019

சுருதி ஸூக்தி மாலா : இன்று சுலோகம் 36 முதல்40முடிய
|| ஓம் நம: சிவாய ||
சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்
சுருதி ஸூக்தி மாலா
சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்.
எழுதியவர்:
பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ
கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள்
தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி
மயிலாப்பூர், சென்னை – 600 004

சுலோகம் 36
வாக்யம் யதாஹ தஹராந்த ருபாஸனம் தே
யத்வா ஸமர்ப்பயதி ரூப விசேஷமஸ்மை |
அந்தர்கதைரபி ததெள பயிகாபி தேயை :
பாவ்யம் வசோபிரிதி வாக்யவிதாம் ப்ரவாத : ||
அங்காங்கு எல்லா உபநிடதங்களிலும் உபாஸனை செய்யப்பட வேண்டுமென்று முதலில் விதிகாணப்படுகிறது. பிறகு உபாஸிக்கப்படவேண்டிய, செயப்படு பொருளின் பெயர், உருவம், குணவிசேசஹ்ங்கள் கூறப்படுகின்றன. பிறகு உபாஸனையின் பயன் கூறப்படுகிறது. இவ்விதம் ப்ருஹதராண்யகம், பஹ்வ்ருசாரண்யகம். ஸாமவேத ஸம்பந்தமான தலவகார உபநிஷத், அதர்வவேத ஸம்பந்தமான முண்டகோபநிஷத், அதர்வசிரஸ், அதர்வசிகை, கைவல்யம், ச்வேதாச்வதரம், தைத்ரீ யோபநிஷத், ரிக்வேத ஸம்பந்தமான ஐத்ரேயகம், முதலிய பல இடங்களில், உபநிஷத்துக்களில், உபாஸனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் நாராயணோப் நிஷத்துக்கு மஹோப நிஷத் என்ற ப்ரஸித்தி இருப்பதால், அதைப் பரிசீலனை செய்து, உண்மையான அர்த்தம் கூறப்பட்டால், மற்ற உபநிஷத்துக்களின் அர்த்தமும் அப்படித்தான் என்பது கைமுதிக ந்யாயப்படி ஸித்திக்குமாதலால், நாராயணோப் நிஷத்தைப் பரிசீலனை செய்ய ஆரம்பிக்கிறார்.
யாஞ்ஞிக்யுபநிஷத் ப்ரோக்த உபாஸ்யத்வம் பரமசிவனுடைய அஸாதாரணமான அதிவ்யாப்டி தோஷமற்ற மூன்றாவது லக்ஷணம் என்றதை ஸ்தாபிக்க ஆரம்பிக்கிறார். தைத்ரீய உபநிஷத் நாலாவது ப்ரச்னத்தில், அதாவது தைத்ரீயாரண்யகம் பத்தாவது ப்ரச்னத்தில், பரமேச்வரன் உபாஸனை ஸம்பந்தமாக மூன்று அநுவாகங்கள் கூறப்படுகின்றன. அணோரணீயாந் – என்பது 12-வது அநுவாகம் ஸ்ஹஸ்ர சீர்ஷம் தேவம் என்பது 13 வது அநுவாகம் பிறகு சில அநுவாகங்களுக்குப் பிறகு இதன் முடிவு ருதம் ஸத்யம் என்ற 23 வது அநுவாகத்தில் காணப்படுகிறது. சப்த ப்ராணா : என்ற மந்த்ரங்களால், ஸ்கலஜகத்துக்கு பரிணாம்யுபாதான காரணமான, அதிஷ்டாதாவான, மகேச்வரனை விளக்கி, அவர் அனுக்ரஹத்தால் பச்யதி வீத சோக: என்று ஸகல துக்கங்கள் நீங்கும்படி ஸாக்ஷாத்காரம் வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது, இவ்விதமே ச்வேதாச்வர மந்த்ரமும் கூறுகிறது. தேனேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் என்ற மந்த்ரம் வரையில் உபாஸ்ய மகேச்வரப்ரபாவம் கூறப்பட்டிருக்கிறது. ந கர்மணா என்ற மந்த்ரத்தால் த்யாகத்தின் ஆவச்யகம் கூறப்பட்டது., வேதாந்த விக்ஞான என்ற மந்த்ரத்தால், வேதப்பொருளை நன்கு அறிந்து ஸர்வகர்ம ஸந்யாஸ பூர்வகமான யோகத்தால் பிரம்மலோகமடைந்து, பரார்த்த த்வய காலத்துக்குப் பிறகு, அம்ருதவாச்யரான மகேச்வரனை யடைந்து முக்தி யடைகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது, ஜாபாலம் முதலிய உபநிஷத்துக்களால், அம்ருதம் என்ற பதம் பரமசிவனைக் குறிக்குமென்பது தீர்மானிக்கப்பட்ட விஷயம்.
தஹ்ரம் விபரபம் என்ற மந்த்ரத்தால், ததுபாஸிதவ்யம் என்று, தவ்ய ப்ரத்யய முள்ள விதி ப்ரத்யயத்தால
ஸ்வாத்யாயோ த்யேதவ்ய :
என்ற ப்ரஸித்த விதிபோல உபாஸனாவிதி கூறப்பட்டுள்ளது. பிறகு அந்த உபாஸ்ய வஸ்துவின் பெயர், ஓங்கார ப்ரதிபாத்யமான, ஓங்கார ப்ரதீகமான மஹேச்வரனென்று கூறப்படுகிறது நாதத்தைல் ஸகல ப்ரபஞ்சத்தையும் லயிக்கும்படி வைத்துக் கொண்டிருப்பதால், ப்ரணவம் ப்ரக்ருதி லீன: என்று சொல்லப்படுகிறது. பிறகு மஹேச்வரன் ரூபம் என்னவென்பதை, 23-வது அநுவாகம் ருதம் ஸத்யம் என்பது, கிருஷ்ண பிங்களம் ஊர்த்தவ ரேதம், விருபாக்ஷம் என்று அஸாதாரணமான பரமேச்வரன் ரூபங்களைக் கூறுவதால் விளக்குகிறது.
இவ்விதம் உபாஸனா விதிவாக்கியம், அ தன் பயன், உபாஸ்ய வஸ்துவின் நாம ரூபங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன இந்த மகேச்வரன் உபாஸனா ஸந்தர்ப்பத்தின் நடுவில் கூறப்படும் நாராயண பரமான, ஸகஸ்ர சீர்ஷம் என்ற 13-வது அநுவாகத்துக்கு எப்படி ஸம்பந்தம் ஏற்படுத்துவது என்பதை வாக்ய நியாயங்களைக் கொண்டு மீமாம்ஸ சாஸ்திர முறையில் நிச்சயிக்க வேண்டும். மீமாம்ஸா சாஸ்திரத்தில் உபக்ரமாதி கரணத்திலும் அச்வப்ரதிக்ரஹேஷ்டி அதிகரணத்திலும் முதலில் ஆரம்பிக்கப்பட்டதைத் தழுவி பின்னால் சொல்லப்படுவது விரோதமாகவிருந்தால் மாற்றி அர்த்தங் கொள்ள வேண்டுமென்பது ந்யாயமாக ஸ்தாபிக்கப் பட்டுள்ளது இங்கு முதலிலேயும், முடிவிலேயும், 12, 23 அநுவாகங்களில் மஹேச்வர உபாஸனை சொல்லியிருப்பதால், நடுவில் உள்ள நாராயணபரமான 13 அநுவாகம் மஹேச்வர உபாஸனா பரமாக இருக்க முடியாது. இதுதான் ஸந்தம்சம் ந்யாயம் என்றும், இல்லாவிடில் வாக்யபேதம் வரும். உத்கர்ஷம் வரும் என்றும், பலவாறாக மீமாம்ஸையில் தூஷிக்கப்பட்டு, ஏக வாக்யதை வேண்டும் என்று, கைமுதிக ந்யாயத்தைக் காட்டி ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது. ஆதலால் நாராயண பரமான நடு 13-வது அநுவாகம் தனியல்ல. மஹேச்வர உபாஸனா விதியில் அங்கமாகச் சேர்க்கப்படவேண்டியது என்பது ந்யாய ப்ராப்தம். உபாஸனை, உபாஸ்ய நாம ரூபம், இரண்டும் சொல்லப்பட்டு விட்ட படியால் பாக்கியுள்ள உபாஸகன், (அதாவது யார் உபாஸிக்கிறான் என்பது) 13-வது அநுவாகத்தால் சொல்லப்படுகிறது. அதாவது நாராயணன் தன் ஹ்ருதய புண்டரீகத்தில், பரமேச்வரனை உபாசித்தார். ஆதலால், வேதாந்தத்தால் பரம்பொருள் அறிந்தவர்கள் த்யாகிகளாக, முக்திக்காக பரமேச்வரனை உபாஸிக்க வேண்டுமென்பது தாத்பர்யம்.
மேலும் 13-வது அநுவாகத்தில் நாராயணனை ப்ரதிபாதிப்பதில், அவரை உபாசிக்க வேண்டும் என்று விதி காணப்படவில்லை. நாராயணன் மகினையைச் சொல்லுவதால் உபாஸனா விதியைக் கல்ப்பித்தது ஆகாது. உபாஸிதவ்யம் என்ற 12-வது அநுவாகத்தில் உள்ள பரமசிவன் உபாஸனா விதிப்பதத்தை அனுஷங்கம் செய்து, நாராயண உபாஸனை விதிப்பதாக அங்கீகரிப்பது ந்யாய விருத்தம். ஒர் விதிவாக்யத்தில் உபாஸ்ய ஸ்வரூபம் சொல்லப்பட்டிருந்தால், மற்றொரு வாக்கியத்திலுள்ள உபாஸ்யரூபம் அந்த விதியோடு அந்வயிக்காது என்பது ஜைமினி ந்யாயம். வைச்வ தேவயாகத்தில் ஆமிக்ஷா என்ற ஹவிஸ் சொல்லப்பட்டுவிட்டபடியால், மறு வாக்கியத்திலுள்ள வாஜினம் என்ற ஹவிஸ் அந்தக் கார்யத்தில் அன்வயிக்கமுடியாமல், வேறு கார்யத்தை ஏற்படுத்திவிடுகிறது. கர்மபேதம் என்றல்லவா மீமாம்ஸகர் கொள்கை? ஆதலால் உபாஸனா பேதம் சொல்ல வேண்டும். அதுவும், உபக்ரம உபஸம்ஹாரத்துக்கு மாறுபாடாக நடுவில் இருப்பதால் முடியாது. முதல் முடிவுகளில் சொல்லப்பட்ட பரமேச்வரன் உபாஸனைக்கு அனுகுணமாக இருந்தால் தான் பொருத்தமுடியும். ஸ்வதந்த்ர நாராயணோ பாஸனையாக இருக்க முடியாது. பொருந்தாது. நாராயணனை உபாஸகராகச் செய்து பொருத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. ஆதலால், மஹேச்வரன் உபாஸ்யர், முக்தி பயன். நாராயணன் உபாஸகர். அவர்போல, மற்ற இக்காலத்து த்யாகிகளும் உபாஸித்து முக்திபெறலாம் அம்ருத பதவாச்யரான மஹேச்வரனை யடைந்து, பவ பாசத்திலிருந்து விடுபடலாம் என்பது தான் மூன்று அநுவாகங்களின் ஏக வாக்யதையைக் கொண்டு ந்யாயப்படி ஸித்தமான அர்த்தம் என்பதை விளக்குகிறார்.
பதவுரை
யத் – யாதொரு, வாக்யம் – (தஹாம் விபாபம் – ததுபாஸி தவ்யம்) உபக்ரமத்திலுள்ள உபாஸனா விதிவாக்யம் தஹராந்த: ஹ்ருதயம் என்ற புண்டரீகத்தின் தாமரையின் நடுவில் உபாஸனம் – உபாஸனாகார்யத்தை, ஆஹ – செய்யவேண்டுமென்று சொல்லுகிறதோ, யத்வா – எந்த உபஸம் ஹாரத்தில் உள்ள ருதம் ஸத்யம் —-நமோ நம : என்ற 23 வது அநுவாக வாக்யம். அஸ்மை – இந்த உபாஸனை சொல்வதற்காக அபேக்ஷிதமான, தே – உம்முடைய. ரூபவிசேஷம் – க்ருஷ்ணபிங்களம் ஊர்த்த்வ ரேதம், விரூபாக்ஷம் என்ற அஸாதர்ரணமான லக்ஷணங்களை, ஸமர்ப்பயதி – தெரியப்படுத்துகிறதோ ஆரம்பம், முடிவு. இந்த இரண்டு மந்த்ரங்களுக்கு நடுவில் உள்ள, வசோபிரபி – ஸஹஸ்ரசீர்ஷம் என்ற 13 வது அனுவாகமாகிய மந்த்ரங்களாலும், ததெளபயிகா பிதேயை :- அந்த உபாஸனா விதிக்கு அனுகுணமான, சேஷ பூத அர்த்தத்தை உடையவைகளாகத்தான் பாவ்யம் – இருக்க வேண்டும். இல்லாவிடில் ஏகவாக்யதை ஏற்படாமல், வாக்யபேத தோஷம் ஏற்பட்டுவிடுமென்று, இதி – இவ்விதமாக, வாக்யவிதாம் – வாக்ய ந்யாயத்தை அறிந்த மீமாம்ஸகர்களின், ப்ரவாத :- தீர்மானம், உத்கோஷம்.
சுலோகம் 37
நாராயணஸ்ய யதுபாஸ்யதயாபி தானம்
யத்வா பலந்ததிஹ நோபலபே கதஞ்சித் |
உத்பத்திசிஷ்ட பவதன்வய மன்யகாமி
சக்யம் மஹேச்வர ! ந கர்த்து முபாஸனம் தே ||
நடு அநுவாகத்தில் நாராயணனையே ஸ்பஷ்டமாகக் குறிப்பதால் எவ்விதம் பரமசிவன் உபாஸனையுடன் சேர்க்க முடியும், தனியாக நாராயண உபாஸனை விதியைக் கற்பிப்பதோ, முன் உபாஸிதவ்யம் என்ற விதியை அநுஷங்கம் செய்து, நாராயண உபாஸனையும் அங்கீகரிப்பதோ, உசிதமானது என்ற சங்கைக்கு பதில் சொல்லப்படுகிறது.
பதவுரை
இஹ – இந்த நடுவாகிய 13-வது அநுவாகத்தில் நாராயணஸ்ய – நாராயணனுடைய, உபாஸ்யதயா பிதானம் – உபாஸிக்கும்படி சொல்லும் விதியும், யத்வா பலம் – அதன் பயனும் (முன் 12-வது அநுவாகத்தில் மஹேச்வர உபாஸனைக்குக் காணப்படுவதுபோல) தத் – அவ்விரண்டும், கதஞ்சித் – சிரமப்பட்டாலும், எந்த விதமாகவும் நோபலபே – காணமுடியவில்லை மகேச்வர – பரமேச்வரனே ! தே – உம்முடைய, உபாஸனம் – உபாஸனாவிதி – பல விதிகளை, உத்பத்திசிஷ்ட பவதன்வயம் – விதியின் உத்பத்தி வாக்யத்திலேயே அன்வயிக்கும்படி உமது கர்மபாவத்தை 12-வது அநுவாகத்திலேயே சொல்லப்பட்டு ஆகாங்க்ஷை முடிந்து விட்டதால், அந்யகாமி – வேறு உத்பந்ந சிஷ்டமான கர்மாவைப் பொருந்துவதாக, கர்த்தும் ந சக்யம் – செம்யமுடியாதல்லவா? இது தான் குணந்யாயம், வாஜினி ந்யாயமென்று சொல்லப்படுவது காண்க.
யத்வேதாதெள – என்ற 12-வது அநுவாக மந்த்ரத்தால், மஹேச்வர : ப்ரக்ருதி லீனஸ்ய பர : என்று பரமேச்வரனை உபாஸ்ய ரூபமாக உத்பத்தி காலத்திலேயே சொல்லப்பட்டுவிட்டபடியால், 13-வது அடுத்த அநுவாக ப்ரதிபாத்யனான நாராயணனை அந்த விதியில் உபாஸ்யனாக அபேக்ஷ இல்லாததால் பொருத்தமுடியாதல்லவா? அப்படியானால் 13-வது அநுவாகத்தில் மகேச்வரன் உபாஸனா விதிபரமான இரண்டு அநுவாகங்களின் மத்தியில் நாராயணன் மகிமையைத் தெரிவிப்பது வீணாகிவிடாதா – என்ற சங்கைக்குப் பரிகாரம் 38-வது சுலோகத்தில் சொல்லப்படுகிறது.
சுலோகம் 38
நாஸா வுபாஸன முபாஸ்யகதைவதூரே
தஸ்மா துபாஸகதயா பரிசேஷஸித்தி : |
அந்தர் வ்யவஸ்தித கிரா பரமாத்மனஸ்தே
சப்தாத்ருதேபி விஹிதம் ததுபாஸகத்வம் ||
பதவுரை
அஸெள – இந்த 13-வது அநுவாகத்தில் ப்ரதிபாதிக்கப்படும் நாராயணன் முன் பின்னுள்ள உபாஸனம் – உபாஸனாக்ரியையாக ; ந – இருக்கமுடியாது. சேதனனான புருஷன் அசேதன க்ரியை ரூபமாக எப்படியிருக்க முடியும்? உபாஸ்யஜதாதூர எவ – உபாசிக்கப்படும் கர்மாவாக அந்வயிப்பதோ அங்கீகரிக்கவே முடியாது. தஸ்மாத் – ஆதலால், க்ரியையும் இல்லை கர்மாவும் இல்லையென்றதால், உபாஸகதயா பரிசேஷ ஸித்தி: மீதி, உபாஸனா கர்த்தாவாகத்தான் நாராயணன் சொல்லப்பட்டவராக ஆகிறார். பரமாத்மனஸ்தே – பரம் பொருளாகிய நீர், அந்தர்வ்யவஸ்திக கிரா – நாராயனுடைய ஹ்ருதய புண்டரீக ஜோதியின் நுனியில் வீற்றிருப்பதாகச் சொல்லப் பட்டிருப்பதால், அந்த வாக்கியத்தின் லிங்கத்தைக் கொண்டு, சப்தாத்ருதே அபி – உபாஸகர் என்ற பதமில்லாவிடினும், ததுபாஸகத்வம் – அந்தப் பரம்சிவனைத் தன் ஹ்ருதய புண்டரீக ஜோதியில் உபாசித்துக் கொண்டிருப்பவர் நாராயணர் என்பது, விஹிதம் – ந்யாயத்தால் லிங்க மூலம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. ஸ்ருவம் என்ற பாத்ரத்தால், எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வாக்யத்தில். சக்தியை, லிங்கத்தை யனுஸரித்து, த்ரவத்ரவ்யமான நெய், பால், எடுப்பதில் ஸ்ருவம்; முட்டை, மற்ற கடின த்ரவ்யத்தில் கையால் எடுப்பது, மாம்ஸ்த்தை வழுக்குமாதலால் கத்தியால் எடுப்பது என்று பதமில்லாவிடினும், சக்தி என்ற லிங்கத்தால் நிர்ணயித்திருக்கிறார். கர்மகாண்டத்தில் மீமாம்ஸகர்கள் அனுஸ்ரீஉதியே நேராகச் சொன்னதாகக் கொள்ள வேண்டும் என்பது ந்யாயவித் ஸித்தாந்த மல்லவா? நாராயணன் ஹ்ருதய புண்டரீக ஜோதிநுனியில் பரமசிவன் இருப்பதாகச் சொல்வது. அவர் உபாஸகர் என்பது ஒப்புக் கொள்ளப் படாவிடில் பொருந்தாது அல்லவா? இது தான் அர்த்தாபத்தி என்ற ப்ரமாணமகக் கருதப்படும். ஆதலால், உபாஸகபதம் வாசகமாக இல்லாவிடினும், வாக்ய சேஷந்யாயப்படி லிங்கத்தால், மஹேச்வர உபாஸனா விதியில் மிக மகிமை வாய்ந்த நாராயணன் உபாஸகன் என்பது சொல்லாமல் ஸித்திக்கும். இதுவே பரிசேஷ ஸித்த ந்யாயம் என்றும் சொல்லப்படும். எங்குமுள்ள ஸர்வ வ்யாபியான ஸர்வாந்தர்யாமி பரமசிவன், நாராயாணன் ஹ்ருதய ஜோதியில் இருப்பதாகக் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருப்பது அவர் உபாஸிக்கிறவராக இருந்தால் தான் பொருத்தமாக அந்வயிக்கும்.நாராயணன் தன் இஷ்டம் நிறைவேற ஸாம்பாதி புத்ர லாபார்த்தமாக பரமசிவனை உபாசிக்கிறவர் என்ற விஷயம் மகா பாரதத்தில் சாந்திபர்வாவில் நரநாராயண ஸம்வாதத்தில், நரனுக்கு நாராயணன் தானே தன் வாயால் சொன்னதாக, நன்கு ஐயமறக் கூறப்பட்டிருப்பது ஸித்தாந்தத்திற்கு நல்ல உபப்ரஹ்மணமான அத்தாக்ஷியாகும் ருத்ரம் ஸம் பூஜயாம்யஹம் என்று தன் வாயால் சொல்வது காண்க.
புத்ரார்த்தம் ஆராதிதவான் ஆத்மா ஆத்மானம் ஆத்மன: என்பதும் காண்க.
சுலோகம் 39
யஸ்ய ஸ்திதோஸி ஹ்ருதயே பரமஸ்த்வ மாத்மா
யுக்தந்ந தஸ்ய பரமாத்ம தயாபிதானம் |
ஸ்வேன ஸ்வயம் மனஸி வன்ஹிசிகாந்தராளே
திஷ்டந் நுபாஸ்ய இதி ஹாஸ்ய பதம் ந கஸ்ய ||
ஆத்மா நாராயண : பர : என்ற சுருதி நாராயணனைப் பரமாத்மாவாகக் கூறுகிறது. அவரை யல்லவா தஸ்யா சிகாயாமத்யே பரமாத்மா வ்யவஸ்தித : என்ற சிகாவாக்யத்திலும் ஹ்ருதயஜோதி நுனியில் இருப்பதாகச் சொல்ல வேண்டும், அப்பொழுது நாராயணன் உபாஸ்ய தெய்வமாக அல்லவா ஆவார். உபாஸகனாக எப்படி அங்கீகரிக்க முடியும் என்ற சங்கைக்கு ஸமாதானம் கூறப்படுகிறது.
பதவுரை
பரம: ஆத்மா த்வம் – பரமாத்மாவாகிய தாங்கள், யஸ்ய ஹ்ருதயே ஸ்திதோஸி – எந்த நாராயணன் ஹ்ருதயத்தில் இருக்கிறீரோ, தஸ்ய – அந்த நாராயணனை, பரமாத்மதயா அபிதானம் – ஆத்மா நாராயண : பர : என்ற பாகத்தால் பரமாத்மாவாகச் சொல்வது ந யுக்தம் – பொருத்தமாகாது, மனஸி – ஹ்ருதய புண்டரீகத்தில், வன்ஹி சிகாந்தராளே – ஜோதி நுனியின் நடுவில் ஸ்வயம் திஷ்டந் – தானே பரமாத்மாவாக இருந்து கொண்டு, ஸ்வேன உபாஸ்ய : – தன்னால் உபாஸிக்கப்படுகிறார், இதி – என்று அர்த்தம் கொள்வது பதமாக இருக்காது.
ஒருவனுக்கு கர்த்த்ரு பாவமும் கர்மபாவமும் ஏற்பது பொருந்தாதல்லவா? நல்ல சிக்ஷை பெற்ற நாட்டியப் பெண்ணும், தன் தோளில் தானே ஏற முடியுமா? பரமாத்மா என்ற பதம் பரமசிவனைத்தான் குறிக்கும். மற்ற தெய்வத்துக்குப் பொருந்தாது என்று ஸித்தாந்தம், மகாபாரதம் சாந்தி பர்வம் ஸபாபர்வங்களில் வ்யாஸ முனிவரால் நன்கு விளக்கப்பட்டிருக்கிறது, மற்ற புராணங்களிலும், தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
உத்தம புருஷஸ்து அன்ய: பரமாத்மா
இதி – உதாஹ்ருத:
என்ற கீதா வாக்யம் மூவுலகத்தையும் அந்தர்யாமியாக வ்யாபித்துத் தாங்கும் ஈச்வரனை அநுவதித்து, பரமாத்மா என்ற ஸம்ஞையை விதிக்கிறது. வாயவீய ஸம்ஹிதையிலும் மந்த்ர சாஸ்திரங்களிலும் இது ப்ரஸித்தமானது காண்க.
ஈச்வர: ஸர்வபூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுமதிஷ்டதி |
என்று ஹ்ருதயத்தில் பரமேச்வரன் அந்தர்யாமியாக வீற்றிருப்பதைச் சொல்லி, தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேண பாரத || என்று அச்சிவபெருமானையே சரணமடையும்படி கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். தன்னைச் சரணமடையும்படி சொல்லவில்லை. மாயினம் து மகேச்வரம்’ என்றபடி மாயையைக் கொண்டு உலகைப் படைத்து ஆள்பவர் பரமேச்வரன் என்பது ஸித்தாந்தம். தமேவ என்று ஏவ பதமும் அவரையே சரணமடையும் படி அழுத்தமாகக் கூறுகிறது. ஒரு பதிவ்ரதா ஸ்த்ரீ பரபுருஷனால் அபகரிக்கப்பட்டாலும், தன் புருஷனையே குறிக்கோளாகக் கொள்வதுபோல, ஈச்வரன் என்ற ச்ருதி வாணி, ப்ரகரணத்தால் நாராயணன் ஸமீபம் கொண்டு போகப்பட்டாலும் பரபுருஷனாகிய அவரைக் குறிக்காது என்பது திண்ணம். மகாகவி காளிதாஸரும்.
அணிமாதி குணோபேத மஸ்ப்ருஷ்ட புருஷாந்தரம், யஸ்மின் ஈச்வர இத்யனன்ய விஷயச் ச்ப்தோ யதார்த்தா க்ஷர: என்று ஸித்தாந்தம் செய்திருப்பது இங்கு காணப்பட வேண்டும்.
சுலோகம் 40
நாராயணஸ்ய ஹ்ருதயம் ஸுஷிரம் மகாக்னி :
அக்னே : சிகா ச பரமாத்ம பதம் யதுக்தம் |
ஸர்வோப்யுபாஸன விதே : அயம் அர்த்தவாத :
ச்ரத்தா விசிஷ்ட புருஷா சாணாத் விதேயே ||
வேதாந்த விக்ஞான ஸுநிச்சிதார்த்தா: |
என்ற மந்த்ரத்தால் உபாஸகர்கள், யதாத்மாவாகிய சுத்தமனதுள்ளவர்கள் என்று கூறப்பட்டிருப்பதால்
யதாத்மானோ முக்திகாமா: மஹேச்வரம் உபாஸீரந் – என்ற விதி பூர்தி (அடங்கிய மனமுள்ளவர்கள் முக்திக்காகம் பரமசிவனை உபாசிக்க வேண்டும்) ஏற்பட்டுவிட்ட படியால் பரிசேஷந்யாயத்தால், நாராயணன் உபாஸகன் என்ற கக்ஷி அர்த்த மற்றதாகும் அல்லவா, என்ற சங்கை நீக்கப்படுகிறது.
பதவுரை
நாராயணஸ்ய – நாராயணனுடைய, ஸுஷிரம் – த்வாரமுள்ள, ஹ்ருதயம் – ஹ்ருதய புண்டரீகமும், மகாக்னி :- அதன் மத்தியில் பெரிய ஒளியும், அக்னே : சிகா ச – அந்த ஒளியின் நுனியும், பரமாத்ம பதம் – பரமாத்மாவாகிய பரமேசவ்ரன் வஸிக்கும், உபாசிக்கப்பட வேண்டிய இடமாக, யதுக்தம் – யாதொன்று சொல்லப்பட்டிருக்கிறதோ, ஸர்வோஅபி – அது எல்லாம், விதேயே – செய்யப்பட வேண்டிய கார்யத்தில் (ப்ரவ்ருத்தி ஏற்படுவதற்காக) ச்ரத்தா விசிஷ்ட புருஷா சரணாத் – சிறந்த புருஷனான நாராயணனும் மிகுந்த ச்ரத்தையுடன் இந்த உபாசனையைச் செய்திருக்கிறார் என்று யதார்த்தத்தைச் சொன்னதால், உபாஸனவிதே : அயம் அர்த்தவாத :- உபாசனை விதிக்கு இது அர்த்தவாதமாக பூதார்த்தவாதமாகச் கருதப்படுகிறது. பெரியோர்கள் செய்து பயனடைந்த கார்யமிது. ஆதலால் முக்திவேண்டுபவர் பரமசிவனையே, ஹ்ருதய கமல ஜோதியில் உபாசியுங்கள் என்பது ருசியை உண்டு பண்ணுவதற்காகச் சொல்லப்படுகிறது. கர்ம காண்டத்தில் இம்மாதிரி ஒரு கர்மாவை விதித்துவிட்டு, அதில் சிரத்தை வருவதற்கு தேவேந்திரன் செய்த கார்யமிது என்றெல்லாம் சொல்லப்பட்டிருப்பது ஸஹஜம்.

கருத்துகள் இல்லை: